உயர்நீதிமன்ற நீதிபதியான பிரியசாத் டெப் என்பவர் பதில் பிரதம நீதியரசராக நியமிக்கப்பட்டுள்ளார். இன்று பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் இவர் பதவிப்பிரமாணம் செய்துக்கொண்டுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற இந்த பதவிப்பிரமாணத்தில் ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோனும் கலந்துக்கொண்டிருந்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
உலக சுற்றுலா தினத்தை முன்னிட்டு நாட்டில் சுற்றுலா பிரதேசங்களில் பல்வேறு நிகழ்ச்சிகள் செவ்வாய்கிழமை இடம் பெற்று வருகின்றது. இதன் அடிப்படையில் இலங்கை சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையும், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கமும் இணைந்து பாசிக்குடா கடற்கரையை சுத்தம் செய்யும் நிகழ்வு இன்று இடம் பெற்றது. இந்த நிகழ்வில் சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் பாசிக்குடா தேசிய விடுமுறை விடுதிக்கான உத்தியோகத்தர் எம்.எச்.எம்.மாஹிர், கிழக்கு மாகாண சுற்றுலா ஹோட்டல்கள் சங்கத்தின்...
  மீண்டும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உள் முரண்பாடுகள் ஊடகங்களின் பேசு பொருளாகியிருக்கிறன. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை ஒரு கட்சியாக பதிவு செய்வதற்கு தமிழரசுக் கட்சி உடன்பட மறுக்கும் சந்தர்ப்பத்தில், கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் ஏனைய நான்கு கட்சிகளும் இணைந்து கூட்டமைப்பை பதிவு செய்ய முயற்சிப்பதாக செய்திகள் வெளிவந்ததைத் தொடர்ந்தே, இதுவரை அமுங்கிக் கிடந்த உள் முரண்பாடுகள் மீண்டும் அரசியல் அரங்கில் தலைநீட்டியிருக்கிறன. கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் தலைமைகளின் அரசியல்...
  தனக்கு ஏற்பட்ட புற்றுநோயிற்கு பாரம்பரிய சிகிச்சை முறையில் சிகிச்சை பெற்றுக்கொண்ட சீன நடிகையொருவர் உயிரிழந்துள்ளார். சீனாவை சேர்ந்த 26 வயதுடைய Xu Ting என்ற நடிகையே இவ்வாறு துரதிருஷ்டவசமாக உயிரிழந்துள்ளார். எவ்வாறாயினும் , நோயினை கண்டறிந்த மருத்துவர்கள், பாரம்பரிய சிகிச்சையை பெற்றுக்கொள்ள வேண்டாம் என அலோசனை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. cupping மற்றும் needle என்ற சீனாவின் பாரம்பரிய சிகிச்சையினை பெற்றுக்கொண்ட பின்னரே இவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
தியாக தீபம் திலீபனின் 29 ஆவது ஆண்டு நிறைவு நிகழ்வுகள் நல்லூரில் ஜனநாயக போராளிகள் கட்சியின் ஏற்பாட்டில் இடம்பெற்றன. முல்லைத்தீவு மாவட்டத்தில் இருந்து வருகை தந்த தாயார் ஒருவரும் திலீபனின் நினைவு நிகழ்வில் கலந்து கொண்டார். அவர் திலீபனின் ஒப்பற்ற தியாகத்தை வியந்து ஊடகவியலாளர்களிடம் பேசிய விதம் அவரை உற்று நோக்க வைத்தது. அதில் அவர் கூறுகையில், தியாகச் செம்மல் திலீபன் அவர்கள் எமக்காக ஆற்றிய தியாகத்தை உண்மையிலேயே சொல்லப் போனால் என் இதயமே...
உலக நாடுகளில் பொருளாதார சமூக அபிவிருத்தியில் புதிய முக்கிய மாற்றங்கள்இடம்பெறுவது புலனாகியுள்ளது என இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அதுல் கேசாப் குறிப்பிட்டுள்ளார். பொதுத்தனியார் துறை ஒத்துழைப்பு தேசிய மாநாட்டில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனை கூறியுள்ளார். முன்னர் அரசாங்கத்தின் செயற்பாடுகள் என கருதப்பட்டவைகளை தற்போது தனியார் துறையினர் மேற்கொள்ள ஆரம்பித்துள்ளனர். உலகம் முழுவதிலும் உள்ள இந்த மாற்றத்தை உணர்ந்துள்ள அரசாங்கங்கள் காலநிலை பாதுகாப்பு, உட்கட்டமைப்பு தேவைகள், சிறிய மற்றும் நடுத்தர கைத்தொழில்...
  வசந்தம் TV நிருபரிடம் சிக்கி சின்னாபின்னமான கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன்
தற்போதைய நல்லாட்சியிலும் திருடர்கள் அதிகம் இருப்பதாக விளையாட்டுத்துறை அமைச்சர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். ஊழல் குற்றச்சாட்டுக்கள் சுமத்தப்பட்டுள்ள அமைச்சர்கள் பலர் தற்போதைய ஆட்சியில் இருப்பதாகவும் அவர்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்காவிட்டால்தான் ஜனாதிபதியின் கால்களில் விழுந்து வணங்கி அரசாங்கத்தை விட்டு வெளியே வரப் போவதாகவும் தெரிவித்துள்ளார். அரசாங்கத்தை விட்டு வெளியேறி சுயாதீன உறுப்பினராக செயற்படுவதற்கு பின்நிற்கப் போவதில்லை என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி உறுப்பினரான தான் உள்ளிட்ட அனைவரும் கடந்த கால ஆட்சியில்...
இலங்கையில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த போது சக வீரர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இலங்கை மத்துகம பகுதியில் 12 முதல் 15 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்தனர். இந்த நிலையில் 'வைட்' பந்தாக வீசியதில் 14 வயது துடுப்பாட்ட வீரருக்கும், 15 வயது பந்துவீச்சாளருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. அப்போது அந்த துடுப்பாட்ட வீரர் 15 வயது பந்துவீச்சாளரை மட்டையால் தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் அவருக்கு...
முல்லைத்தீவு மாவட்டம், மாந்தை கிழக்கு பிரதேச, பாலிநகரில் இரண்டு பாடசாலைகளுக்கு எதிரே அமைந்திருக்கும் இராணுவ முகாம்களை அகற்றுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. முல்லைத்தீவு, மாந்தை கிழக்கு, அபிவிருத்திக்குழு கூட்டம் நேற்று திங்கட்கிழமை காலை 9.00 மணிக்கு பிரதேச செயலக மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றுள்ளது. இதன் போதே மேற்படி அறிவித்தலை பாரளுமன்ற உறுப்பினர் சாந்தி சிறிஸ்கந்தராசா மற்றும் வடமாகாணசபை உறுப்பினர் து.ரவிகரன் உள்ளிட்டோர் ஏடுத்துரைத்துள்ளனர். தற்காலிகமாகவிருந்த இராணுவ முகாம் தற்போது பலப்படுத்தப்பட்டு வருவதாகவும் பாலிநகர் மகாவித்தியாலய அபிவிருத்தி...