உலகில் உள்ள படைப்புகள் ஒவ்வொன்றிலும் ஏராளமான அதிசயங்கள் புதைந்துள்ளது எனக் கூறினால் அது மிகையாது. ஒரு பெண்ணின் வயிற்றில் உதையமாகும் கருவானது ஆணாக மாறுவதும் பெண்ணாக மாறுவதும் நமது கையில் கிடையாது. அதேசமயம், இந்த இருபாலினங்களையும் தாண்டி திருநங்கை எனப்படும் மூன்றாம் பாலினமாக மாறுவது என்பதும் இயற்கையாக நடைபெறுவது தான். ஆண், பெண் இணைந்து கர்ப்பம் தரித்து குழந்தை பெறுவது இயற்கையாக நடைபெற்று வருகிறது. அதேபோல், இயற்கையாகவே மூன்றாம் பாலினமாக மாறிய திருநங்கைகள் கர்ப்பம்...
இன்றைய பரபரப்பான உலகில் நாளுக்கு நாள் ஏதோ ஒரு புதிய கண்டுபிடிப்புகள் வெளியான வண்ணம் இருக்கின்றன. அறிவியல், விஞ்ஞான ரீதியாக உச்சத்தை அடைந்தாலும் மனிதர்களுக்கு தீமையையும் ஏற்படுத்தவே செய்கின்றன. அந்த வகையில் Genetic Science என்னும் துறை அபார வளர்ச்சி கண்டுவருகிறது, சமீபத்தில் செயற்கையான கருமுட்டையை உருவாக்கி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளனர் ஐரோப்பாவின் பாத் பல்கலைகழக விஞ்ஞானிகள். இதுமட்டும் வெற்றிகரமாக செயல்பட்டால் எதிர்காலத்தில் பெண்களின் துணை இல்லாமலேயே குழந்தையை உருவாக்க முடியும். இந்த செயற்கை கருமுட்டை...
கிளிநொச்சி கடற்றொழிலாளர்களுக்கும் இழுவைப்படகு தொழில் மேற்கொள்வதற்கு அனுமதி தாருங்கள் அல்லது சவப்பெட்டிகளை தாருங்கள் என கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்திக் குழு கூட்டத்தில் இணைத் தலைவர்களை நோக்கி, கடற்றொழிலாளர் சங்கங்களின் சமாச தலைவர் ஜோசப் பிரான்சிஸ் தெரிவித்தார். நேற்று 26-09-2016 கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற அபிவிருத்தி குழு கூட்டத்தின் போதே அவர் இவ்வாறு கோரிக்கை விடுத்துள்ளார். கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர்கள் தொடர்ந்தும் உள்ளூர் அதாவது யாழ்ப்பாணம் மற்றும் மன்னார் இழுவைப் படகுகளால்...
யாழில் கஞ்சா பொதியுடன் பொலிஸாரால் கைது செய்யப்பட்ட குருநகர் பகுதி இளைஞனுக்கு மூன்று மாத கால சிறைத் தண்டனையை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. குறித்த இளைஞன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன் குருநகர் பகுதியில் 300 கிராம் கஞ்சா பொதியுடன் யாழ் பொலிஸ் நிலைய குற்றத்தடுப்பு பொலிஸாரால் கைது செய்யப்பட்டிருந்தார். குறித்த வழக்கு விசாரணை யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வந்திருந்த வேளை இன்று மீண்டும் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன் போது...
மட்டக்களப்பில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி சென்ற ரயிலில் மோதுண்டு குடும்பஸ்த்தர் ஒருவர் உயிரிழந்துள்ளார். இந்த விபத்து சம்பவம் இன்று காலை ஓட்டமாவடியில் இடம்பெற்றதாக வாழைச்சேனை பொலிசார் தெரிவித்தனர். டாக்டர் பதியுதீன் மாவத்தை ஓட்டமாவடி-1 சேர்ந்த முகம்மது அலியார் செய்யது இப்றாகிம் (வயது 45) என்ற 3 பிள்ளைகளின் தந்தையே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவித்தனர். மேற்படி நபர் ரயில் பாதை அருகாமையினால் நடந்து செல்லும் போது ரயிலின் படிக்கட்டு உடலில் அடிபட்டதினால் இவ்விபத்து...
அதிகாரிகளால் தங்களுக்கு வழங்கப்படும் வாக்குறுதிகள் எவையும் சரியாக நிறைவேற்றப்படுவது இல்லை எனக் கூறி மட்டக்களப்பு, உன்னிச்சைக்குள நீர்ப்பாசனத் திட்டத்தின் கீழ் நெற்செய்கையில் ஈடுபடும் விவசாயிகள் இன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். வவுணதீவுப் பிரதேச செயலகத்தில் பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடைபெற்றபோது, அதில் அதிகாரிகளும் அரசியல்வாதிகளும் கலந்துகொண்டனர். இதேவேளை, இக்கூட்டத்தை விவசாயிகள் பகிஷ்கரித்து பிரதேச செயலக வளாகத்தில் ஒன்றுகூடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் தெரிவிக்கையில், 'கடந்த 20ஆம் திகதி பெரும்போகச் செய்கைக்கான கூட்டம் நடத்துவதாக...
  மாகாண சபைகளின் உறுப்பினர்கள் வெளிநாட்டு விஜயங்களை மேற்கொள்ள வேண்டுமாயின் அரச திறைசேரியில் அனுமதி பெற வேண்டுமென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். எதிர்வரும் 2017ஆம் ஆண்டு ஆரம்பம் முதல் இது நடைமுறைக்கு வரவுள்ளதாக, ஜனாதிபதி ஊடக அறிக்கையொன்றின் மூலம் தெரிவித்துள்ளார். எனினும் எதிர்வரும் மாதங்களில் வெளிநாடுகளுக்கு கண்காணிப்பு விஜயங்களை மேற்கொள்ளும் மாகாண சபை உறுப்பினர்களும், அதுகுறித்து திறைசேரிக்கு அறிவிக்க வேண்டுமென ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார். மத்திய மாகாண சபையின் உறுப்பினர்கள் மேற்கொண்டுள்ள ரஷ்யா...
யாழ்ப்பாணம் கோப்பாயைச் சேர்ந்த இளம் குடும்பப் பெண் கடந்த வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி கொழும்பில் காணாமல் போய்விட்டதாக தெரியவருகின்றது. கோப்பாய் வடக்கைச் சேர்ந்த அனோகரன் பவித்திரா என்ற இளம் குடும்பப் பெண்ணே காணாமல் போனவராவார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் கடைசி மகன் ரோஹித ராஜபக்சவுக்கு வாகனங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. இதற்கமைய அவரும் வெகு விரைவில் பொலிஸ் நிதி மோசடி விசாரணை பிரிவிற்கு அழைக்கப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மஹிந்த ராஜபக்சவின் புதல்வர்கள் மூவர் பயன்படுத்தி வாகனம் தொடர்பில் சுரேஷ் எதிரிசிங்க என்பவரினால் நிதி மோசடி விசாரணை பிரிவில் வழங்கப்பட்ட வாக்குமூலத்திற்கமைய இந்த அழைப்பு மேற்கொள்ளப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையக தகவல்...
யாழ்ப்பாணம் மருதங்கேணிப்பகுதியில் 82 கிலோ கிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது. கடல் மார்க்கமாக கொண்டுவரப்பட்டு மருதங்கேணி கடற்கரையில் வைக்கப்பட்ட நிலையில், இக் கஞ்சாப் பொதிகள் கடற்படை உதவியுடன் கிளிநொச்சி பளை பொலிஸ் மற்றும் மருதங்கேணி பொலிஸாரும் இணைந்து கிளிநொச்சி உதவி பொலிஸ் அத்தியட்சகர் ரொசான் ராஜபக்ஷ தலைமையிலான பளை பொலிஸ் பரிசோதகர் மினிபுர தலைமையிலான குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். கஞ்சா பொதிகளை கடத்தி வந்தவர்கள் அவற்றை விட்டுவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்....