தீர்வு நோக்கிய பயணத்திற்கு எழுக தமிழ் வலுச்சேர்க்கும், கேட்டால் தான் எதனையும் பெறமுடியும் என்கிறார் புளொட் தலைவர் சித்தார்த்தன் எம்.பி
Thinappuyal -0
எழுக தமிழ் எழுச்சி பேரணியானது நீடித்த நிரந்தரமான அரசியல் தீர்வு நோக்கிய பயணத்திற்கு வலுச்சேர்ப்பதாகவே அமையும் என தெரிவித்த புளொட் அமைப்பின் தலைவரும், யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், எமது உரிமைகளை கேட்பதில் எந்த தவறுமில்லை. கேட்டால் தான் அவற்றை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் சுட்டிக்காட்டினார்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் யாழில் நடைபெற்ற எழுக தமிழ் எழுச்சி பேரணி தொடர்பில் தென்னிலங்கை கொண்டிருக்கும் நிலைப்பாடு மற்றும்...
மேற்பார்வை இருந்தால் மாத்திரமே குறித்த காலத்தினுள் ஒதுக்கப்பட்ட நிதிகளை சரியாக பயன்படுத்த முடியும் – அமைச்சர் டெனிஸ்வரன்
Thinappuyal -
வன்னேரிக்குளம் பல்லவராயன்கட்டு பிரதான வீதியின் புனரமைப்புப்பணிகளை 26-09-2016 திங்கள் மாலை 2.30 மணியளவில் நேரடியாக விஜயம் செய்து பார்வையிட்டார் வடக்கு மாகாண வீதி அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்கள்.
குறித்த வீதியானது மன்னார் யாழ்ப்பாணம் (A32) பிரதான வீதியோடு இணைக்கப்படும் ஒரு வீதி என்பதோடு, கடந்த வருடம் மார்கழி மாதம் மண்டைக்கல்லாறு பகுதி வெள்ளம் காரணமாக மன்னார் யாழ்ப்பாணம் போக்குவரத்து தடைப்பட்டிருந்த அந்த காலப்பகுதியில் குறித்த வீதியினூடாகவே யாழ்ப்பாணம் மற்றும்...
ஒக். 02 இல் முச்சக்கரவண்டி உரிமையாளர்களுக்கான விசேட கலந்துரையாடல் – அமைச்சர் பா.டெனிஸ்வரன்
Thinappuyal -
முச்சக்கர வண்டி போக்குவரத்தில் உரிமையாளர்களும் சங்கங்களும் சிறப்பாக செயலாற்றிவருகின்றபோதும் சில குறைபாடுகள் இருப்பது சம்மந்தமாக பொதுமக்கள், உரிமையாளர்களிடம் இருந்தும் அமைச்சருக்கு பல முறைப்பாடுகள் வந்தவண்ணம் உள்ளன.
குறிப்பாக சங்கங்களின் நிருவாக சீரின்மை, பழைய புதிய நிருவாகங்களுக்கிடையேயான முரண்பாடுகள் மற்றும் ஒத்துழைக்காமை போன்ற பிரச்சனைகள் உரிமையாளர்களிடம் இருந்தும், கட்டணங்கள் மற்றும் சில சாரதிகளின் நடத்தை தொடர்பாக பொதுமக்களிடம் இருந்தும் முறைப்பாடுகள் கிடைக்கப்பட்டுள்ளது.
எனவே அவற்றை சீர்செய்யும் நோக்கோடு அமைச்சர் அவர்களால் மன்னார் மாவட்டத்தில்...
கிளிநொச்சி கண்டவாளை கொம்படி அம்மன் ஆலயத்தின் 108 பாற்குட பவனி நிகழ்வு 26 வருடங்களின் பின்னர் இன்று காலை நடைபெற்றுள்ளது.
கிளிநொச்சி மாவட்டத்தின் கண்டாவளை கடற்கரையோரத்தில் அமைந்திருக்கின்ற கொம்படி அம்பாள் ஆலயத்தின் மேற்படி வருடாந்த உற்சவம் கடநத 26 வருடங்களுக்குப்பின்னர் தற்போது நடைபெற்று வருகின்றது.
கண்டாவளை ஆவரஞ்சாட்டி குஞ்சுப்பிள்ளையார் ஆலயத்தில் இருந்து இன்று காலை 7.00 மணிக்கு108 பெண்கள் மஞ்சள் ஆடையணிந்து பாற்செம்புகள் சுமார் நான்கு கிலோமீற்றர் பவனியாக எடுத்து வரப்பட்டு...
முல்லைத்தீவில் வட்டுவாகல் பிரதேசத்தில் நான்கு வயது சிறுவன் ஒருவன் ஆற்றில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்த சிறுவன் அதே பிரதேசத்தினை சேர்ந்த பிரபாகரன் சர்மிளன் என்னும் நான்கு வயதுடையவர் என பொலிஸார் கூறியுள்ளனர்.
குறித்த சிறுவன் நேற்று மதியம் வட்டுவாகல் ஆற்றில் குளிப்பதற்காக பெற்றோருடன் சென்ற வேளையிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
எனினும் இந்த சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை முல்லைத்தீவு பொலிஸார் மேற்கொண்டுவருகின்ற நிலையில் சிறுவனின்...
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டு நடவடிக்கை தற்போது வரையில் பொரளை மயானத்தில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
கல்கிசை நீதவான் நீதிமன்றில் வழங்கிய உத்தரவிற்கமைய இந்த சடலம் தோண்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் கொழும்பு மாயானத்தில் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் புதைக்கப்பட்டிருந்த கல்லறைக்கு மேல் இந்த drone கமெரா சுற்றித் திரிந்தமையினால் பொலிஸார் உடனடி நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
விமான புகைப்படங்களை எடுத்த இந்த கமெராவை பிடிப்பதற்கு பொலிஸாரினால் முடியவில்லை என தெரியவந்துள்ளது.
மயானத்தை சுற்றியிருந்த...
அவுஸ்திரேலிய பிரதமர் மல்ஹொம் டேர்ன்பல்லின் கூட்டமைப்பு அரசாங்கமானது தனது தேர்தல் கால வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் பெற்றோருக்கான புதிய தற்காலிக ஏற்பாதரவு விசாவை அறிமுகப்படுத்தவுள்ளதை உறுதிப்படுத்தியுள்ளது.
இந்த பெற்றோருக்கான தற்காலிக ஏற்பாதரவு விசாவானது அவுஸ்திரேலிய பிரஜாவுரிமை பெற்றவர்கள் தமது பெற்றோருக்கு அவுஸ்திரேலியாவில் 5 வருடங்களுக்கு மேல் தங்கியிருக்க தமது ஏற்பாதரவை வழங்க முடியும்.
இந்நிலையில் அவுஸ்திரேலிய குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு உதவி அமைச்சர் அலெக்ஸ் ஹவ்க், ஒரு தொகை சமூக...
எங்களது போராட்டத்தை முடித்து விடலாம். தூபிகளை இடித்து விடலாம். ஆனால், போரால் அங்கவீனமானவர்கள் என்றுமே போராட்டத்தின் அடையாள சின்னங்களாக இருப்பார்கள் என வன்னி விழிப்புலனற்றோர் சங்கத் தலைவர் ச.ரூபராஜா தெரிவித்துள்ளார்.
யாழ். வணிகர் கழகத்தின் நிதிப் பங்களிப்பில் வடக்கின் ஐந்து மாவட்டங்களையும் சேர்ந்த விழிப்புலனற்ற முன்னாள் போராளிகளின் பிள்ளைகளுக்கு கல்வி ஊக்குவிப்பு உதவிகள் வழங்கும் நிகழ்வு நேற்று யாழ். வணிகர் கழக மண்டபத்தில் வணிகர் கழகத் தலைவர் இ. ஜெயசேகரம்...
யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற 'எழுக தமிழ்' எழுச்சிப் பேரணியானது தென்பகுதியில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருக்கின்றது.
அரசாங்க அமைச்சர்கள் மற்றும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உட்பட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் எழுக தமிழ் தொடர்பான தமது எச்சரிக்கைகளையும், அதிருப்திகளையும் வெளிப்படுத்தியிருக்கின்றனர்.
தமிழ் மக்கள் பேரவையின் ஏற்பாட்டில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி. விக்கினேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த எழுக தமிழ் பேரணியானது தென்பகுதியில் பெரும் சர்ச்சையை கிளப்பியிருக்கின்றது.
எழுக தமிழ் பேரணியைத் தொடர்ந்து கருத்து தெரிவித்த...
படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் சடலம் இன்று மீண்டும் தோண்டி எடுக்கப்பட்டது.
லசந்த விக்ரமதுங்கவின் சடலத்தை தோண்டி எடுத்து மீண்டும் பிரேத பரிசோதனைகளை மேற்கொள்வதற்கு கல்கிஸ்சை நீதவான் மொஹமட் சஹாப்தீனால் கடந்த 8 ஆம் திகதி இந்த அனுமதி வழங்கப்பட்டிருந்தது.
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் பிரேத பரிசோதனை அறிக்கைக்கும், இரசாயன பகுப்பாய்வு அறிக்கைக்கும் இடையில் முரண்பாடு காணப்படுவதாக குற்றப் புலனாய்வு திணைக்களம் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளது.
இந்த முரண்பாடுகளை தணிக்கும் வகையில் பரிசோதனைகளை...