மிகவும் நியாயமான மற்றும் அத்தியாவசிய விடயங்களின் அடிப்படையில், தான் பயன்படுத்திய வாகனம் குறித்து தேடும் தற்போதைய அரசாங்கத்தின் ஜனாதிபதியின் தலையீட்டில் ஒரு இலட்சத்து 50 ஆயிரம் ரூபா வாடகையில் மேல் மாகாண சபை உறுப்பினரான ஜாதிக ஹெல உறுமயவின் தேசிய அமைப்பாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்கவுக்கு வாகனம் ஒன்றை வழங்கியிருப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்ச தெரிவித்துள்ளார்.
பொலிஸ் நிதி மோசடி விசாரணைப் பிரிவில் வாக்குமூலம் அளிப்பதற்காக இன்று முற்பகல்...
மெய்யான ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் ஆட்சி அமைப்பார்கள் என மீன்பிடித்துறை அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.
பல்வேறு வழிகளில் தடைகள் ஏற்படுத்தப்பட்டாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தலைமையில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் ஈடுபடும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளர் என்ற ரீதியில் தாமும், கட்சியின் தலைவர் என்ற ரீதியில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும்...
ஒக்ரோபர் மாதம் 8ம் திகதி புதிய கட்சி அமைக்கப்படாது எனவும் புதிய அரசியல் கட்சி அமைப்பது தொடர்பில் மக்களே தீர்மானம் எடுக்க வேண்டுமெனவும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
பிலிமதலாவையில் நடைபெற்ற மத வழிபாட்டு நிகழ்வு ஒன்றில் பங்கேற்றதன் பின்னர் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
கூட்டு எதிர்க்கட்சியினரால் எதிர்வரும் 8ம் திகதி எஹலியகொடவில் நடத்தப்பட உள்ள பேரணி புதிய அரசியல் கட்சி அமைக்கும் நோக்கிலானதல்ல என அவர் தெரிவித்துள்ளார். குறித்த...
வடக்கில் கிளர்ச்சி ஏற்படும் என அரசாங்கம் அஞ்சவில்லை என பாதுகாப்பு ராஜாங்க அமைச்சர் ருவான் விஜேவர்தன தெரிவித்துள்ளார்.
வடக்கில் சில தரப்பினர் போராட்டங்களை நடத்திய போதிலும் வடக்கில் இராணுவ முகாம்கள் அகற்றுவதற்கு அரசாங்கம் ஒப்புக் கொள்ள மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசாங்கம் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவதில் அதிக முனைப்பும் கவனமும் செலுத்தி வருவதாகவும் இனங்களுக்கு இடையிலும் மதங்களுக்கு இடையிலும் சகவாழ்வை ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
எழுக தமிழ் போராட்டம்...
மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் – சரத் பொன்சேகா
Thinappuyal -
ஓய்வு பெற்ற மேஜர் கமால் குணரட்னவிற்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என முன்னாள் இராணுவ தளபதி பீல்ட் மார்ஸல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் அடையாள அட்டையை கொழும்பில் ஒப்படைக்குமாறு தாம் உத்தரவிட்டிருந்ததாகவும் எனினும், இந்த அடையாள அட்டை குணரட்னவிடம் இருப்பது அண்மையிலேயே தமக்கு தெரிய வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அடையாள அட்டையை ஒப்படைக்குமாறு உத்தரவிடப்பட்ட நிலையில் அவர் எவ்வாறு அடையாள...
மனிதன் விலங்குகளை வேட்டையாடியும் மீன்களை பிடித்து தனக்கு உணவாக்கி கொள்ளும் பழக்கத்தை கொண்டிருப்பது சாதாதரணமானது.
ஆனால், மனிதர்களில் பலர் விலங்குகள் உட்பட உயிரினங்களை நேசிப்பதையும் நாம் காண்கின்றோம்.
மீன்களை பிடித்து சமைத்தும் பொரித்தும் சாப்பிட விரும்புவது மனிதனின் இயல்பு.
ஆனால் , வரட்சியால் வற்றிப் போன குட்டையில் இருந்த மீன்களை இளைஞர்கள் சிலர் தண்ணீர் இருக்கும் இடத்திற்கு எடுத்துச் சென்று விட்ட சம்பவம் ஒன்று இலங்கையில் நடந்துள்ளது.
இலங்கையில் தற்போது பல இடங்களில் வரட்சியான...
இந்தியாவில் இருந்து கொண்டு வரப்பட்டதாக சந்தேகிக்கப்படும் 82 கிலோகிராம் கேரளா கஞ்சாவை மருதங்கேணி கடற்கரையில் வைத்து பளை பொலிஸார் இன்று மீட்டுள்ளனர்.
எனினும் குறித்த சம்பவத்தின்போது சந்தேகநபர்கள் தப்பிச்சென்றுள்ளதாக பளைப் பொலிஸ் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சம்பவம் தொடர்பாக தெரிய வருவதாவது,
இந்தியாவில் இருந்து கடல் வழியாக கேரளா கஞ்சா ஒரு தொகுதி மருதங்கேணி கடற்பரப்பினூடாக கொண்டு வருவதாக பொலிஸாருக்கு இரகசியத் தகவல் கிடைத்துள்ளது.
இதைத் தொடர்ந்து கிளிநொச்சி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்...
விடுதலைப்புலிகள் மீதான தடையை நீக்க ஒருபோதும் அனுமதிக்கப்போவதில்லை! – அமைச்சர் மங்கள சமரவீர
Thinappuyal -
ஐரோப்பாவில் விடுதலைப் புலிகள் அமைப்புக்கு எதிரான தடையை நீக்குமாறு கோரி விடுதலைப்புலிகளின் ஆதரவாளர்கள் சிலர் பரிந்துரை செய்துள்ள நிலையில் தாம் அதற்கு இடம் வழங்கப் போவதில்லை என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார்.
'விடுதலைப் புலிகள் மீதான தடையை இலகுவில் அகற்ற முடியாது' என அமைச்சர மங்கள நியூயோர்க்கின் வானொலி ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகளின் 71ஆவது மாநாட்டில் கலந்துக்கொள்ள அமெரிக்க சென்றுள்ள அமைச்சர் மங்கள,...
இலங்கையின் அரசியல் தளத்தில் அடுத்த ஜனாதிபதி தேர்தல் தொடர்பான வாத பிரதிவாதங்கள் தலைதூக்கியுள்ளன.
2020ம் ஆண்டில் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போவது யார்,? வெற்றி பெறப் போவது யார்? என்ற கேள்வி அரசியல்வாதிகளுக்கு அப்பால் பிராந்திய நாடுகளின் எதிர்பார்ப்பாக அமைந்துள்ளது.
இவ்வாறான நிலையில் அடுத்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க கூடிய வாய்ப்புள்ள மூன்று பேரின் பெயர்கள் பரவலாக பேசப்பட்டுள்ள வருகின்றன.
அந்த மூவரும் ஒரே மேடையில் அமர்ந்திருந்த புகைப்படம் ஒன்று தொடர்பில்...
இலங்கையின் வெவ்வேறு இடங்களில் இன்று இடம்பெற்ற விபத்துக்களில் மூவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்தார்.
வவுனியா பம்பைமடு மற்றும் அம்பாறை பொத்துவில், பூண்டுலோயா பகுதிகளில் இன்று காலை இடம்பெற்ற விபத்திலேயே குறித்த மூவரும் உயிரிழந்துள்ளனர்.வவுனியா பம்பைமடு வளாகத்திற்கு முன்பாக இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பெரியதம்பனையில் இருந்து வவுனியா மரக்கறி சந்தைக்கு வாழைக்குலையை மோட்டார் சைக்கிளில் ஏற்றிவந்தவர் மீது பெரியதம்பனை நோக்கி சென்ற தனியார் பேருந்து மோதியதில் இந்த...