பிரேசிலில் நிலத்துக்கு அடியில் 400 கிலோ எடையுள்ள ராட்சத அனகோண்ட பிடிபட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
வடக்கு பிரேசிலின் அல்டமிரா என்ற பகுதியில் அமைந்துள்ள பிலோமோண்டி அணையில் கட்டுமானத் தொழிலாளர்கள் வேலையில் ஈடுபட்டுவருகின்றனர்.
இந்நிலையில் கட்டுமானத்தொழிலாளர்கள் நிலப்பரப்பை அகலப்படுத்துவதற்காக வெடிவைத்து தகர்க்கும் போது, நிலத்துக்கு அடியில் உள்ள குகையில் ராட்சத அனகோண்டா இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
அதன் பின் ராட்சத கிரேன் கொண்டு அனகோண்டாவை வெளியில் எடுத்தனர். அதை அங்கிருந்த தொழிலாளர்கள் அளந்து...
அமெரிக்காவில் போதை மருந்துக்கு அடிமையாகி சுயநினைவற்ற தன் தாயை, அவரது குழந்தை அழுது கொண்டே எழுப்ப முற்படும் காட்சி காண்போரை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.
அமெரிக்காவில் Massachusetts நகரில் Lawrence என்ற பகுதியில் உள்ள Family Dollar store என்ற கடைக்கு 36 வயது மதிக்கத்தக்க தாயும், அவருடைய இரண்டு வயது குழந்தையும் சென்றுள்ளனர்.
தனக்கு தேவையான பொருட்களை குழந்தையின் தாய் எடுத்து கொண்டிருந்த போது திடீரென சுயநினைவற்று கிழே விழுந்து மயக்கமடைந்துள்ளார்.
இதைக்...
பிரான்ஸ் தலைநகர் பாரிசில் அரை நூற்றாண்டு பழமையான வாகனங்களுக்கு தடை விதித்ததால் பொதுமக்கள் சாலை வழியே நடந்தும் மிதிவண்டியிலும் சென்றுள்ளனர்.
பாரிஸ் நகரம் வாகன நெரிசல் மற்றும் மாசு காரணமாக கடுமையாக பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. இதன் காரணமாக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில் பாரிசில் world car free day கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக அரை நூற்றாண்டுகள் பழமையான வாகனங்களை பாரிஸ் நிர்வாகம் தடை செய்துள்ளது.
இதனால் பொதுமக்கள்...
வங்தேசத்தில் பெண் ஒருவர் தனது தோழியை மறக்க முடியாமல் அவளுடன் ஓட்டமெடுத்துள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
டக்காவை சேர்ந்த ஜன்னத் என்ற பெண்ணுக்கு கடந்த 2012 ஆம் ஆண்டு பேஸ்புக் மூலம் நைனா என்ற பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டது.
ஆரம்பத்தில் நட்புறவுடன் பழகி வந்த இவர்கள் இருவருக்கும், நாளடைவில் ஒருவித இனம் புரியாத அன்பு ஏற்பட்டுள்ளது.
நம் இருவரால் பிரிந்து வாழ முடியாது என்ற நிலைக்கு வந்துவிட்டார்கள். இந்நிலையில் தான் ஜன்னத்துக்கு, மகேஷ்...
பிரித்தானிய இளவரசர் வில்லியம் தனது மனவி மற்றும் குழந்தைகளுடன் கனடாவிற்கு 8 நாட்கள் சுற்றுப்பயணமாக மேற்கொண்டுள்ளார்.
நேற்று கனடா சென்றடைந்த அவர்களுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இது பிரித்தானியாவின் குட்டி இளவரசி சார்லோட்டிற்கு முதல் சுற்றுப்பயணம் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த பயணத்தின் முதல் நாள் நிகழ்வாக, Vancouver - இல் செயல்பட்டு வரும் சுகாதார சேவை மையத்துக்கு சென்றுள்ளனர்.
கர்ப்பிணி பெண்கள், குழந்தை பெற்றெடுத்த தாய்மார்கள் சந்திக்கும் போதை மருந்து மற்றும் மது...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும் இடையில் மோதல் நிலை தீவிரம் அடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஐ.நா பொதுசபை கூட்டத்தில் கலந்துக் கொண்ட 67 பேர் கொண்ட பிரதிநிதிகள் குழுவில் ஐக்கிய தேசிய கட்சியை சேர்ந்தவர்களும் கலந்து கொண்டிருந்தனர்.
குறித்த உறுப்பினர்கள் கட்சியின் அனுமதி பெற்று இந்த பயணத்தில் ஈடுபடவில்லை. எனினும் ஜனாதிபதியின் நேரடி தலையீட்டின் இணைந்து கொண்டுள்ளமையினால் மோதல் நிலை ஒன்று உருவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த குழுவின் ஐக்கிய தேசிய...
உண்ணாவிரதத்தில் ஈடுபட்டிருந்த 17 தமிழ் அரசியல் கைதிகளில் ஒருவர் அநுராதபுரம் சிறைச்சாலையில் இருந்து போகம்பரை சிறைச்சாலைக்கு நேற்று இடம் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கண்டி நீதிமன்றத்தில் நாளை வழக்கு விசாரணை நடைபெறவுள்ளமையினால்தான் குறித்த தமிழ் அரசியல் கைதி போகம்பரை சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டதாக சிறைச்சாலைகள் தலைமையகம் தெரிவித்துள்ளது.
இதேவேளை தொடர்ந்தும் அநுராதபுர சிறைச்சாலையில் ஏனைய 16 தமிழ் அரசியல் கைதிகளும் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்கள் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது...
வவுனியா, பேயாடி கூழாங்குளம் பகுதியில் வீட்டுத்திட்டம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் கூட இன்றி தாம் மிகவும் அவலநிலையில் அன்றாடம் வாழ்ந்து வருவதாக அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
யுத்த காலத்தில் வவுனியா, நொச்சிமோட்டை கிராம அலுவலர் பிரிவுகுட்பட்ட பேயாடி கூழாங்குளம் பகுதியில் உள்ள மக்களின் காணிகள் பல இராணுவ முகாமாக காணப்பட்டது.
எனினும் 2012 ஆம் ஆண்டுக்கு பின்னர் தமது காணிகளின் ஒரு தொகுதி விடிவிக்கப்பட்டு, 39 இற்கும் அதிகமான குடும்பங்கள்...
தியாகத் தீபம் திலீபனுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்வுகள் இன்று காலை 10.30 மணிக்கு யாழ்ப்பாணத்திலுள்ள திலீபனின் நினைவுத் தூபியில் நடாத்துவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
இந்த நிகழ்வில் கலந்து கொள்வதற்கு பல அரசியல் பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எனினும், 10.30 மணிக்கு ஆரம்பிக்கப்பட உள்ள குறித்த நிகழ்வுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த அரசியல்வாதியான மாவை சேனாதிராஜா 9 மணியளவில் வருகைத் தந்துள்ளார்.
இதன்போது திலீபனின் நினைவுத்தூபிக்கு அஞ்சலி செலுத்தி, தீபம் ஏற்றி வைத்து...
திருகோணமலை, சேருநுவர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட செல்வநகர் பகுதியில் இன்று காலை இடம்பெற்ற வாகன விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.
டிப்பர் ரக வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றும் மோதிக்கொண்டமையினால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இதன் போது மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு சிறுவர்களே உயிரிழந்துள்ளதாக சேருநுவர பொலிஸார் தெரிவித்தனர். சடலம் மூதூர் வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, டிப்பர் வாகனத்தின் சாரதி தப்பியோடியுள்ள நிலையில், அவரைக் கைது செய்வதற்கான...