கிழக்கு மாகாணத்தில் அதிகரித்து வரும் சுற்றுலாப் பயணிகளின் வருகையினை தொடர்ந்து விசேட பாதுகாப்பு ஒழுங்குகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இலங்கையில் நல்லாட்சி நிலவும் நிலையில் கிழக்கு மாகாணத்தின் இயற்கை எழில் கொஞ்சும் பகுதிகளை கண்டு களிப்பதற்கு அதிகளவான வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் வருகை தருகின்றனர்.
இந்த நிலையில் வருகை தரும் சுற்றுலாப் பயணிகளின் பாதுகாப்பு கருதி விசேட பாதுகாப்பு ஒழுங்குகளை பொலிஸ் திணைக்களம் மேற்கொண்டு வருகின்றது.
மட்டக்களப்பு மாவட்டத்தில் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வருகை...
கிழக்குப் பல்கலைக்கழகத்தில் முதுநிலை விரிவுரையாளராகக் கடமையாற்றி ஓய்வு பெற்ற பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழா மற்றும் கருணையோகம் புத்தக வெளியீட்டு விழா என்பன இன்று மட்டக்களப்பு நகர மண்டபத்தில் நடைபெற்றன.
பேராசிரியர் செ. யோகராசாவின் பணி நயப்பு விழாவில் போராசிரியர்கள், எழுத்தாளர்கள், பல்கலைக்கழக மாணவர்கள், ஊடகவியலாளர்கள், அரசியல் பிரமுகர்கள் என பலர் கலந்துகொண்டனர்.
இந்நிகழ்வில் நயப்புரைகளை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறைத் தலைவர் பேராசிரியர் ரமிஸ் அப்துல்லாஹ், கிழக்குப் பல்கலைக்கழக...
பலமான கடவுச்சீட்டுக்களை கொண்ட நாடுகளின் பட்டியலில் இலங்கை முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி 8 இடங்கள் முன்னேறி 87வது இடத்தை பெற்றுள்ளதாக 2016ஆம் ஆண்டுக்கான கடவுச் சீட்டு சுட்டெண் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், 39 நாடுகளுக்கு விசா பெற்றுக்கொள்ளாது இலங்கையர்கள் பயணிப்பதற்கு வாய்ப்பு கிட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஆறு மாதங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்ட அறிக்கையில் இலங்கைக்கு 95வது இடம் வழக்கப்பட்டிருந்தது. அதன் போதும் விசா இன்றி 39 நாடுகளுக்கு பயணிக்க கூடிய...
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு சிறுவர்கள் ஆலையங்களில் நேர்த்திக்கடன்களை நிறைவேற்றும் செயல் அண்மைய நாட்களாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த சிறுவர்களில் கூடுதலானவர்கள் இறுதிகட்ட போரின் போது கைகுழந்தைகளாக இருந்துள்ளதாகவும், கொடூர யுத்தத்தில் பாதிப்பு ஏற்படாமல் பாதுகாக்கும் படி கடவுளை வேண்டி நேர்த்திக்கடன் வைக்கப்பட்டதாகவும் சிறுவர்களின் பெற்றோர்கள் தெரிவிக்கின்றனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் அதிகளவு வெப்பநிலை ஏற்பட்டுள்ள இச்சூழ்நிலையில் ஒரு ஆலையத்தில் இருந்து இன்னுமொரு ஆலையத்திற்கு தலையில் பால்செம்பு சுமந்து, சிறுவர்கள் நடந்து சென்று நேர்த்திக்கடன்களை...
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு புதிதாக இரண்டு அங்கத்துவ அட்டைகள் அறிமுகம் செய்ய கட்சி தீர்மானித்துள்ளது.
வாழ்க்கையில் ஒரு தடவை மட்டுமே பெற்றுக்கொள்ள வேண்டிய வாழ்நாள் அங்கத்துவ அட்டை மற்றும் வருடாந்தம் புதுப்பித்துக் கொள்ளக்கூடிய அட்டை என இரண்டு பிரிவுகளில் இந்த அங்கத்துவ அட்டை அறிமுகம் செய்யப்படவுள்ளது.
முதல் கட்டமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் அங்கத்துவ அட்டைகள் விநியோகம் செய்யப்படவுள்ளது.
கட்சிக்கு புதிய உறுப்பினர்களை இணைக்கும் நாடு தழுவிய திட்டமொன்றின் அடிப்படையில்...
இராமநாதபுரம் மாவட்டம், சோழியக்குடி கடல் பகுதியில், தேவிபட்டினம் மரைன் போலீசார், நேற்று அதிகாலை ரோந்து சென்றனர்.
அப்போது பிளாஸ்டிக் கான்களை பிடித்து கரை சேர்ந்த, இருவர் சிக்கினர்.விசாரணையில், அவர்கள் கார்த்திக், 23, சாந்தகுமார்,42, என தெரிய வந்தது.
கடந்த 1992ல் இலங்கை, திருகோணமலையில் இருந்து தமிழகத்திற்கு அகதியாக வந்த இவர்கள் சென்னை, முகப்பேரில் வெளிப்பதிவில் தங்கி, விசைப்படகு பழுது பார்க்கும் மெக்கானிக் தொழில் செய்பவர்கள் என தெரியவந்தது.
சில நாட்களுக்கு முன், காரங்காடு...
யாழ்ப்பாணம், தெல்லிப்பளை குரும்பன்சிட்டி பிரதேசத்தின் பாழடைந்த கிணற்றில் இருந்து 160 குண்டுகள் உள்ளிட்ட ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தெல்லிப்பளை பொலிஸாரினால் நேற்று மாலை இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குண்டுகளைத் தவிர ஆர்.பீ.ஜி.51 குண்டுகள், எம்.பீ.எம்.ஜீ குண்டுகள் 1600 உள்ளிட்டவை இதன்போது மீட்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
பொலிஸ் விசேட பிரிவு, மற்றும் குண்டு செயலிழக்கும் பிரிவு ஆகியவை இணைந்து குண்டுகளை செயலிழக்கும் நடவடிக்கையை முன்னெடுத்துள்ளதாக தெல்லிப்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தமிழீழம் இது வெறும் வார்த்தையல்ல. தமிழீழம் என்பது ஒரு இனத்தின் வரலாறு, ஒரு மொழியின் வரலாறு, தமிழ் இன கலாச்சாரத்தின் மொத்த உருவம், வீரத்தின் அடையாளம், வெற்றியின் குறியீடு என்று சொன்னாலும் அது மிகையாகாது.
ஏனெனில் மேற்கூறிய அனைத்துக்குமான ஒரு உருவமாக தமிழீழம் காணப்பட்டது. நீண்டகால வரலாற்றை கொண்ட தமிழீழத்தில் இனவிடுதலையை வலியுறுத்தி கடந்த 30 ஆண்டுகளாக ஆயுத போராட்டம் இடம்பெற்றது.
அது வெறும் ஆயுதப் போராட்டமல்ல. புதையுண்டு போன தமிழினத்தின்...
முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்ராலிடம் விசாரணை செய்யுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
கப்ரால் ஆளுநராக பதவி வகித்த காலத்தில் மத்திய வங்கியில் மிகப்பெரிய அளவில் இடம்பெற்றுள்ள நிதி கொடுக்கல் வாங்கல் முறைகேடுகள் தொடர்பில் விரைவில் விசாரணைகள் நடத்துமாறு கோரப்பட்டுள்ளது.
ஆளுங்கட்சியின் உறுப்பினர்கள் சிலர் கடிதம் மூலம் பிரதமரிடம் கோரியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2006 தொடக்கம் 2015ம் ஆண்டு வரை இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக அஜித் நிவாட்...
பிறர் கண் பட்டதால் திருஷ்டி என வீட்டில் பெரியவர்கள் சொல்ல கேள்விப்பட்டிருப்பீர்கள்.
இந்த நவீன காலத்திலும் இதை நம்பவேண்டுமா என எண்ணுபவர்கள் உண்டு. கண் திருஷ்டி என்பது எல்லோரும் தன்னை நோக்குதல் என்பதுதான் என்கிறார்கள் ஜோதிடர்கள்.
அதாவது, ஒட்டுமொத்த பார்வையும் தன் மேல் விழுந்திருக்கிறது என்று சொல்வார்களே அதுதான். அந்தத் தெருவிலேயே பெரிய வீடு கட்டிவிட்டார்கள்.
அதனால் அந்தத் தெருக்காரர்கள் எல்லாம் போகும் போதெல்லாம் திரும்பித் திரும்பிப் பார்த்துவிட்டுப் போவார்கள்.
இதற்கு என்ன செய்ய...