ஈழ மக்கள் ஜனநாயக கட்சியினரால் குறுகியகால ஏற்பாட்டில் செய்யப்பட்ட எழுக தமிழ் கூட்டு எழுச்சிப் பேரணியில் பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்று பேரணியை வெற்றியடையச் செய்துள்ளனர்.   யாழ்ப்பாணம் ஸ்ரான்லி வீதியில் அமைந்துள்ள கட்சியின் தலைமைச் செயலகத்திலிருந்து கட்சிக்கொடிகளையும் தமிழர்களது அரசியல் உரிமைகள் உள்ளிட்ட அபிலாசைகளையும் எடுத்தியம்பும் எழுச்சிக்கோசங்களுடன் பிரதான வீதியூடாக நகர்ந்த மக்கள் பேரணி காங்கேசன்துறை வீதி, ஆஸ்பத்திரி வீதியூடாக யாழ். மத்திய பேருந்து நிலையத்தை சென்றடைந்து பின்னர் அங்கிருந்து முனியப்பர்...
  எழுக தமிழ் பேரணி விக்னேஸ்வரன் தலைமையில் ஆரம்பம்.. யாழ்ப்பாணம் நல்லூர் கந்தசுவாமி கோயிலுக்கு முன்னால் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தலைமையில் எழுக தமிழ் பேரணி ஆரம்பமாகியுள்ளது. வடமாகாண முதலமைச்சர் தலைமையில், வடமாகண விவசாய அமைச்சர், வடமாகாண மீன்பிடி அமைச்சர் மற்றும் வடமாகாண சபை உறுப்பினர்கள், பொது அமைப்புக்கள், மதகுருமார், பல்கலைக்கழக மாணவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டுள்ளனர். இதேவேளை, பெருமளவிலான மக்கள், வடமாகாணத்தின் ஏனைய மாவட்டங்களிலிருந்து யாழ்ப்பாணத்திற்குபேருந்துகளில் வருகைதந்த வண்ணமே உள்ளதாகவும்...
  மகேஸ்வரி வேலாயுதத்தை சுட்டு கொன்றது ஈ.பி.டி.பியா?? நடந்தது என்ன? ஈ.பி.டி.பி முன்னாள் உறுப்பினரின் பகீர் வாக்குமூலம் ஈ.பி.டி.பி அமைப்பிலிருந்து விலகிய சுப்பையா பொன்னையா என்பவர் பல பகீர் தகவல்களை வெளியிட்டுள்ளார். சதா என்ற இயக்க பெயரால் அழைப்படும் இவர், 1990 ஆம் ஆண்டிலிருந்து 2008 ஆம் ஆண்டு வரை ஈ.பி.டி.பி அமைப்பில் அங்கம் வகித்ததாகவும், பின்னர் கட்சியுடன் ஏற்பட்ட முரண்பாட்டையடுத்து விலகிச் சென்றதாகவும் கூறியுள்ளார். கட்சியின் தீவிர செயற்பாட்டாளராக இருந்து பல...
  முஸ்லிம்கள் தமிழ் மொழியை தாய் மொழியாககொண்டபோதும் அவர்கள் தங்களை தமிழர்களாக அடையாளம் காட்டாமல் அரசியல் காரணங்களுக்காகவே முஸ்லிம்களாக அடையாளம் காட்டுகின்றார்கள் என்று வடமாகாண முதலமைச்சர் திரு விக்னேஸ்வரன் அண்மையில் மட்டக்களப்பில்  நடைபெற்ற  நிகழ்வொன்றில் குறிப்பிட்டுள்ளமை  முஸ்லிம்களின் தனித்துவத்தை அழிப்பதற்கான ஒரு சதி என அகில இலங்கை மக்கள காங்கிரஸ் செயலாளர் நாயகம் வை.எல்.எஸ். ஹமீட் தெரிவித்துள்ளார். இதுவிடயமாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, முதலாவது ஒரு சமூகத்தின் அடிப்படை அடையாளத்தை...
  அரசாங்கத்தின் நடவடிக்கைகளை கண்டித்து யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் ஊர்வலம் சம்பந்தன் தலைமையிலான தமிழ் தேசியக் கூட்டமைப்புக்கு பரிசோதனை களமாக அமையலாம் என்றும் வடக்கில் அவர்களுக்கான ஆதரவு எவ்வாறு இருக்கிறது என்பதை கணிக்க கூடியதாக இருக்கும் என இலங்கையின் பிரபல ஊடகவியலாளர் சுனந்த தேசப்பிரிய தெரிவித்துள்ளார். தற்போது ஜெனிவாவில் தங்கியிருக்கும் சுனந்த தேசப்பிரிய யாழ்ப்பாணத்தில் நடைபெற இருக்கும் எழுக தமிழ் பற்றி தனது கருத்தை வெளியிட்டார். சம்பந்தன் தலைமையிலான தமிழரசுக்கட்சி...
திருகோணமலை கடற்படை முகாமின் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாக கடமையாற்றி வந்த கடற்படை சிப்பாய் ஒருவர் இன்று காலை துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி உயிரிழந்துள்ளார். கடற்படை சிப்பாய் தற்கொலை செய்து கொண்டாரா அல்லது வேறு தரப்பினரின் அவர் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தனரா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாக திருகோணமலை துறைமுகம் பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொல்கொல்ல, பள்ளியகொல்ல பிரதேசத்தை வசிப்பிடமாக கொண்ட 36 வயதான கடற்படை சிப்பாயே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ஸ ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் முன்னிலையாகியுள்ளார். விமானப் படை விமானங்களை தவறாக பயன்படுத்தியமை தொடர்பில் வாக்கு மூலம் அளிப்பதற்காகவே இவர் இன்று (23) முன்னிலையாகியுள்ளார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதேவேளை, மூத்த நடிகர் ஜெக்சன் அந்தோணியிடம் இன்று ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழு விசாரணைகளை மேற்கொண்டுள்ளது. ஹம்பாந்தோட்டை துறைமுக திறப்பு விழாவின் போது இடம் பெற்ற நிதி மோசடி தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காக ஜெக்சன் அந்தோணி ஜனாதிபதி விசாரணை...
யாழ்ப்பாணம், கோப்பாய் பிரதேச நீர்வேலி பகுதியில் சிறிய தாயின் தாக்குதலுக்கு உள்ளான சிறுமியை மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்துமாறு யாழ் பதில் நீதவான் கே. அரியநாயகம், கோப்பாய் பொலிஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். சிறுமியை கோப்பாய் பொலிஸார் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்திய போதே நீதவான் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார். தாக்குதுலுக்கு உள்ளான சிறுமி, சிறுமியை தாக்கிய தாய் மற்றும் தந்தை ஆகியோர் இன்று யாழ் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டிருந்தனர். சிறுமி தாக்குதலுக்கு உள்ளாகி இருப்பதால் சிறுமியின் உடலில் ஏற்பட்டுள்ள...
திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர்களுக்கான தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பிலான விஷேட செயலமர்வு இன்று (23) காலை 9.00 மணிக்கு உப்புவெளி ஜெகப் ஹோட்டலில் ஆரம்பமானது. அரசாங்க தகவல் திணைக்களத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இச்செயலமர்வில் 40 ற்கும் மேற்பட்ட ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டனர். அரசாங்க தகவல் திணைக்களத்தின் பணிப்பாளர் கலாநிதி ரங்க கலன்சூரிய பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் என்.ஏ.ஏ.புஸ்பகுமார ஆகியோரும் கலந்து கொண்டனர்.  
அனுராதபுரம் சிறைச்சாலையில் தமிழ் அரசியல் கைதிகள் 20 பேர் தொடர்ந்து மூன்றாவது நாளாகவும் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதுசெய்யப்பட்டு நீண்டகாலமாக தாம் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாகவும், தமது வழக்கு விசாரணைகளை துரிதப்படுத்துமாறும் வலியுறுத்தி தமிழ் அரசியல் கைதிகள் கடந்த புதன்கிழமை முதல் உண்ணாவிரதத்தில் ஈடுபட்டுள்ளனர். தம்மீதான சட்ட நடவடிக்கைகளை துரிதப்படுத்துமாறும் இந்த தமிழ் அரசியல் கைதிகள் வலியுறுத்தியுள்ளனர். தமது வழக்குகளை தமிழ் பிரதேச நீதிமன்றங்களுக்கு மாற்றுவதுடன், சட்ட நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட...