கிளிநொச்சி வன்னேரிக்குளம் பகுதியில் நிர்மாணிக்கப்பட்டு வருகின்ற சுற்றலாமையத்தின் ஆரம்பகட்ட பணிகளை பார்வையிடுவதற்காக பாரளுமன்ற உறுப்பினர் சிறீதரன் விஜயம் ஒன்றை மேற்க்கொண்டு இருந்தார். கரைச்சி பிரதேச சபையில் மக்கள் பிரதிநிதிகளின் பிரசன்னம் இருந்த போது 2014ம் ஆண்டு பிரதேச சபை உறுப்பினர் தயாபரன் அவர்களால் முன்மொழியப்பட்டு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட இவ்வலயத்தின் பணிகள் வனவளத்தினைக்களத்தினுடைய உரிமை கோரல் காரணமாக தடுக்கப்பட்டு இருந்தது  இவ்விடயம் மாவட்ட அபிவிருத்தி குழுவில் ஆராய்ப்பட்டதுடன்  மாகாண முதலமைச்சரின்...
கிளிநொச்சி, பூநகரி பிரதேச செயலகப் பிரிவின் சில பகுதிகளில் ஒருவகை தொற்று நோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழந்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பூநகரி பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்ட ஞானிமடம், கருக்காய்தீவு ஆகிய கிராமங்களில் கடந்த இருவாரங்களாக ஒருவகை தொற்றுநோய்க்கு இலக்காகி கால்நடைகள் உயிரிழப்பது தொடர்பில் பதிவாவதாக எமது செய்தியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். குறிப்பாக உயிரிழந்த மாடுகளின் வாயிலிருந்து நுரை வெளியேறுவதுடன், வயிறு மற்றும் கழுத்துப் பகுதிகளில் வீக்கம் போன்ற அறிகுறிகள் காணப்படுவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதுதொடர்பாக பிரதேச...
வடபுலத்தில் நடைபெறவுள்ள எழுக தமிழ் போராட்டம், எழுக இலங்கை போராட்டத்துக்கு உரிய அழுத்தங்களை தர வேண்டும். எழுக தமிழ் போராட்டமும், எழுக இலங்கை போராட்டமும் ஒன்றை ஒன்று புரிந்துக்கொண்டால் இரண்டுக்கும் இடையில் முரண்பாடு எழ தேவையில்லை. எழுக இலங்கை அல்லது எழுக இலங்கையர் என்று அழைக்கும் போது அது, எழுக தமிழ், எழுக சிங்களம், எழுக முஸ்லிம் என்ற ஒட்டுமொத்த இலங்கையரை விளிப்பதாகத்தான் அர்த்தப்பட வேண்டும். இலங்கையர் என்ற...
உரிமைக்காக குரல் கொடுக்க ஓரணியில் திரண்டு “எழுக தமிழ்’ பேரணியை வெற்றிபெறச் செய்வோம் என்று  பாராளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான  தர்மலிங்கம் சித்தார்த்தன் அழைப்பு விடுத்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் எழுக தமிழ் பேரணி தொடர்பாக அவர் வெளியிட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நாளை  24 ஆம் திகதி தமிழ் மக்களின் உரிமைகளுக்காக குரல் கொடுக்கும் நாள். இந்தப் பேரணியில் தமிழ் பேசும்...
வாழைச்சேனை பிரதேசத்தின் மருதநகர் பகுதியைச் சேர்ந்த வீரக்குட்டி ஜெயராஜ் என்பவர் புதிய தொழில் நுட்பத்தின் மூலம் மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளார். மின்சாரம் மற்றும் எரிபொருள் இன்றி நீர் இறைக்கும் இயந்திரம் ஒன்றை கண்டுபிடித்துள்ளமை தொடர்பாக ஊடக சந்திப்பு வாழைச்சேனை பிரதேச செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இச்சந்திப்பின் போது பிரதேச செயலாளர் வா.வாசுதேவன், உதவிப் பிரதேச செயலாளர் திருமதி.நிரூபா பிருந்தன், கண்டுபிடிப்பாளர் வீரக்குட்டி...
இலங்கையின் சமகால ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பதவியேற்று சில வருடங்கள் கடந்துள்ள நிலையில், உலக பிரபல்யம் அடைந்துள்ளார். இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபாலவுக்கு சர்வதே விருது ஒன்று வழங்கப்பட வேண்டும் என சர்வதேச ரீதியாக ஆதரவு குரல்கள் வெளியிடப்பட்டுள்ளது. சர்வதேச அமைதி, நல்லிணக்க ஊக்குவிப்பு மற்றும் போதைப்பொருள் கடத்தலை தடுத்தல் என்பனவற்றில் ஜனாதிபதியின் அர்ப்பணிப்பை அடிப்படையாக கொண்டு விருது வழங்கப்பட வேண்டும் என கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. பிரபல நாடுகள் பலவற்றின் சமூக நலத்துறைக்காக செயற்படுகின்ற...
பீ. ஆர். சீ. விளையாட்டுக் கழகத்தின் கிரிக்கெட் வீரரான 23 வயதான பூர்ண சீ. பிரபாஷ்வர வாகன விபத்தில் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். பொரலஸ்கமுவ, ரத்தனப்பிட்டிய பிரதேசத்தில் நடந்த வாகன விபத்தில் இவர் உயிரிழந்துள்ளார். கிரிக்கெட் வீரர் சென்ற மோட்டார் சைக்கிள், கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர் சென்ற ஜீப் வண்டியுடன் மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்துச் சம்பவம் தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளதுடன் ஹோமாகம நீதவான் நீதிமன்றத்தில்...
அம்பாறை-பொத்துவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கோமாரி ஹளுகொல்லப் பகுதியில் மோட்டார் சைக்கிள் விபத்தில் ஒருவர் பலியாகியுள்ளதுடன், மற்றுமொருவர் காயமடைந்த நிலையில் கோமாரி பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்த விபத்து ,நேற்று (22) இரவு இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார். பொத்துவில் பிரதேசத்தில் மேசன் வேலையை முடித்துவிட்டு விநாயகபுரத்திலுள்ள அவரது வீட்டுக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பிக்கொண்டிருந்தபோது, பஸ்ஸொன்றுக்கு இடம் விட முற்பட்டதாகவும் இதன்போது, வீதி வளைவுக்கு அருகில் இருந்த கம்பமொன்றுடன் மோட்டார் சைக்கிள் மோதி விபத்துக்குள்ளானதாக...
அபிவிருத்தி என்ற போர்வையில் எங்கள் பூர்வீக நிலங்களை சூறையாடப்படுகின்றது. இதற்கு நா ங்கள் ஒரு போதும் இடமளிக்க கூடாது என மாகாண அமைச்சர் ஜங்கரநேசன் தெரிவித்தார். தெரிவு செய்யபட்ட விவசாயிகள் மற்றும் விவசாய அமைப்புக்களுக்கான மாகாண சபையின் குறித்தொகுபட்ட நிதி ஊடாக விவசாய உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு கிளிநொச்சி விவசாய பிராந்திய பணியகத்தில் இன்று நடைபெற்றது. இதன் போது பிரதம விருந்தினாராக கலந்த கொண்ட மாகாண விவசாய அமைச்சர் ஜங்கரநேசன் மேற்கண்டவாறு...
தர்மபுரம் பொலிஸ் உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ் பொறுப்பதிகாரி ஆகியோரை திட்டிய குற்றச்சாட்டில் உழவனூர் பகுதியைச் சேர்ந்த பெண்ணொருவர் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார் குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரிய வருவதாவது, கடந்த மாதம் பொலிசார் தர்மபுரம் உழவனூர்ப் பகுதியில் கசிப்பு உற்பத்தி நிலையத்தினை முற்றுகை இட்டுள்ளனர். குறித்த உற்பத்தி நிலையத்தில் இருந்த சந்தேக நபர் பொலிசார் முன்னிலையிலையே தப்பி ஓடியதனை அடுத்து சந்தேக நபரை இனம் கண்டு...