மனோபாலா தயாரிக்க நட்டி நடிப்பில் அனைவரையும் ரசிக்க வைத்த படம் சதுரங்க வேட்டை. இந்த படத்தில் எப்படியெல்லாம் திருடலாம் என்பதை மிகவும் திரில்லிங்காக கூறியிருப்பார்கள். சமீபகாலமாக இந்த படத்தின் இரண்டாம் பாகம் வர இருப்பதாகவும் அதில் நாயகனாக அரவிந்த் சாமி நடிக்க இருப்பதாக ஏற்கெனவே தகவல்கள் வந்துவிட்டது. இந்நிலையில் அரவிந்த் சாமிக்கு ஜோடியாக நாயகி த்ரிஷா நடிக்க இருப்பது உறுதியாகியுள்ளது.
அஜித் மீது அவருடைய ரசிகர்கள் மிகுந்த அன்பு கொண்டவர்கள். அவர் தும்மினால் கூட இந்திய அளவில் ட்ரண்ட் செய்து விடுவார்கள். தற்போது இவர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார், இப்படத்தின் பர்ஸ்ட் லுக் தீபாவளிக்கு வரும் என கூறப்பட்டது. ஆனால் நமக்கு கிடைத்த தகவலின்படி பொங்கலுக்கு தான் பர்ஸ்ட் லுக் வரும் என கிசுகிசுக்கப்படுகின்றது. படம் ஏப்ரல்-14ம் தேதி தான் திரைக்கு வரும் என முன்பே கூறப்பட்டது. ஏற்கனவே படத்தை பற்றி ஒரு...
சிவகார்த்திகேயன் வளர்ச்சி நாளுக்கு நாள் வேறு லெவலுக்கு செல்கின்றது. அதிலும் சமீபத்தில் வந்த ரெமோ ட்ரைலர் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து 3 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர். இந்நிலையில் இந்த டீசர் வெளிவந்த 24 மணி நேரத்திலேயே 1.69 மில்லியன் பேர் பார்வையிட்டுள்ளனர், இதன் மூலம் அஜித்தின் வேதாளம், விக்ரமின் ஐ டீசர் சாதனையை இது முறியடித்துள்ளது. மேலும், வேதாளம் டீசரை தற்போது வரை 65 லட்சம் பேர் பார்வையிட்டுள்ளனர், இதையும் இன்னும்...
பிரபல நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ் சினிமாவில் தற்போது எல்லாருக்கும் பிடித்தமான தமிழ் பேசும் நடிகையாக வலம் வருகிறார். இந்நிலையில் முன்னணி ஹீரோக்களுடன் நடித்து வரும் கீர்த்தி, மிக விரைவில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதியுடன் டூயட் ஆட போகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரிப்பில் ரேணிகுண்டா இயக்குனர் பன்னீர் செல்வம் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிக்க இருக்கும் படத்தில் தான் கீர்த்தி நடிக்க இருக்கிறார். மேலும் தனக்கு விஜய் சேதுபதி மிகவும் பிடித்த...
இந்தியாவின் உரி ராணுவ முகாமில், பாகிஸ்தானை சேர்ந்த பயங்கரவாத அமைப்பின் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 18 இந்திய ராணுவவீரர்கள் பலியானார்கள். அதில் வீரர் சுனில் குமார் வித்யார்த்தியும் ஒருவர், அப்படி தன் தந்தை இறந்த செய்திகேட்டு இதயம் உடைந்த நிலையிலும் அவருடைய மகள்கள் பள்ளியில் அன்றைய தேர்வை வந்து எழுதினார்கள். அது அவர்கள் குடும்ப தைரியமாக பாராட்டப்பட்டாலும் பார்த்தவர்களும் கேட்டவர்களும் அதை தாங்கும் தைரியமில்லாமல் உருகினர். உருக்கமான தேர்வு சுனில் குமார் வித்யார்த்திக்கு இரண்டு...
இரு கைகளை இழந்த போதிலும் தன் பல்லை வைத்து வயது முதிர்ந்த தன் தாய்க்கு சாப்பாடு ஊட்டி விடும் மனிதரின் வாழ்க்கை சம்பவங்கள் கேட்போரை நெகிழ்ச்சியடைய செய்கின்றது. Chen Xinyin (48) என்னும் நபர் சீனாவில் வசித்து வருகிறார். இவருக்கு இரு கைகளும் கிடையாது. அவர் ஏழு வயதாக இருக்கும் போது நடந்த மின்சார விபத்து ஒன்றில் தன் இரு கைகளையும் இழந்துள்ளார். பின்னர் தனது 20 தாவது வயதில் தனது...
சிங்கங்களுக்கு திருமணம் செய்து கொண்டாடிய நிகழ்வு ஒன்று பங்களாதேஷ் மிருகக்காட்சி சாலையில் இடம்பெற்றுள்ளது. சுமார் 400 விருந்தினர்கள் பங்கேற்க பலூன்களுக்கு இடையே “நோவா” எனும் பெண் சிங்கத்திற்கும், “நபா” எனும் புதிதாக வந்துள்ள ஆண் சிங்கத்திற்கும் திருமணம் நடைபெற்றுள்ளது. இது வழக்கத்திற்கு மாறான நிகழ்வுதான் என்றாலும் மிருகக்காட்சி சாலையை அலங்கரிக்கவும், சிங்கங்களை வரவேற்கும் வகையிலும் நிகழ்ச்சி நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பள்ளிக்குழந்தைகளை மகிழ்ச்சியளிப்பதற்காக திருமணத்திற்கு முன்னதாக நிகழ்ச்சிகளும் நடாத்தப்பட்டுள்ளது. மேலும் இத்திருமண நிகழ்ச்சில், 10...
ஆக்சிஜனை வளமைக்கு மாறாக குறைவாக உள்வாங்குவதால் திபெத்திய மக்கள் அதிக நாட்கள் உயிர்வாழ்வதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவிக்கின்றது. சீனா திபெத்தில் வசிக்கும் மக்கள் அதிக காலம் உயிர்வாழ்கிறார்கள். அங்கு 60 வயதுக்கு மேற்பட்டோர் அதிக எண்ணிக்கையில் உள்ளனர். 100 வயதிற்கும் மேல் ஏராளமானோர் வாழ்வதாக புள்ளிவிபரம் தெரிவிக்கின்றது. இருந்தும் சீனாவில் மற்ற பகுதிகளில் இந்த அளவுக்கு மக்கள் அதிக காலம் உயிர் வாழ்வதில்லை. எனவே இது தொடர்பாக சீனாவில் உள்ள அறிவியல்...
பிரான்ஸ் கடலில் சுற்றுலா சென்ற பெல்ஜியம் இளைஞர்கள் பயணித்த படகு விபத்துக்குள்ளாகி பாறையில் சிக்கி கொண்ட சம்பவம் வீடியோவாக வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரான்சின் தெற்கு பகுதியான செயின்ட் ட்ரோப்ட்ஸ் கடற்கரையில் பெல்ஜிய நட்டைச் சேர்ந்த இளைஞன் ஒருவன் தனது தந்தைக்கு சொந்தமான படகில் நான்கு நண்பர்களுடன் சுற்றுலா சென்றுள்ளார். அவர்கள் பயணித்த படகு கடலில் உள்ள பாறையின் மேல் மோதி சிக்கி கொண்டதை அடுத்து இளைஞர்களின் சுற்றுலா பயணம் பாதியிலே...
பிரபல ஹாலிவுட் ஜோடிகள் பிராட் பிட், ஏஞ்சலினா ஜுலி பிரிவதற்கு தான் காரணமில்லை என பிரபல ஹாலிவுட் நடிகை மரியான் கோட்டில்லார்ட் தெரிவித்துள்ளார். கடந்த சில தினங்களுக்கு முன்னர் ஹாலிவுட் நடிகர் பிராட் பிட்டுடன் வாழ பிடிக்கவில்லை என அவரது மனைவியும், ஹாலிவுட் நடிகையுமான ஏஞ்சலினா ஜுலி விவாகரத்து கோரியிருந்தார். நான் விவகாரத்து வாங்குவதற்கு பிராட்பிட்டுக்கும், பிரான்ஸ் நடிகை மரியான் கோட்டில்லார்ட்டுக்கும் இடையே உள்ள கள்ளத்தொடர்பு தான் காரணம் என ஏஞ்சலினா...