யால தேசிய சரணாலயம் தற்பொழுது மூடப்பட்டுள்ளது. எனினும், பிரபல அமைச்சர் ஒருவர் இரவில் இரகசியமாக குறித்த சரணாலயத்துக்கு சென்று வருவதாக கூட்டு எதிர்க்கட்சி தெரிவித்துள்ளது. கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டி.வி.சாணக இதனை தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், நாட்டிற்கு வரும் சுற்றுலா பயணிகளில் 90 வீதமானோர் தென் மாகாணத்திற்கு செல்லாமல் போக...
ஹமாஸ் மற்றும் விடுதலைப் புலிகள் அமைப்பு ஆகியவற்றை ஐரோப்பிய ஒன்றியத்தின் பயங்கரவாத அமைப்புகள் பட்டியலில் இருந்து நீக்குமாறு ஐரோப்பிய ஒன்றிய நீதிமன்ற ஆர்வலர் ஒருவர் இன்று தெரிவித்துள்ளார் என அந்நாட்டு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. ஏனெனில், இந்த அமைப்புகள் பயங்கரவாத தாக்குதலில் ஈடுபட்டது என்பதற்கான எந்த சாட்சியங்களும் நிரூபிக்கப்பட வில்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பாலஸ்தீனம் மற்றும் இலங்கை குழுக்களுக்கு இடையில் நீண்டகால பிணக்கு தொடர்பில் இணக்கப்பாடு ஏற்பட்டாலும் ஐரோப்பிய நீதிமன்றத்தின்...
மத்தல சர்வதேச விமான நிலையம், ஹம்பாந்தோட்டை துறைமுகம் மற்றும் ஸ்ரீலங்கன் விமான சேவையின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 19 வெளிநாட்டு நிறுவனங்கள் முன் வந்துள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அதற்கமைய மத்தல சர்வதேச விமான நிலையத்தின் நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 7 நிறுவனங்களும், ஹம்பாந்தோட்டை துறைமுக நிர்வாகம் பெற்றுக் கொள்வதற்கு 2 நிறுவனங்களும், ஸ்ரீலங்கன் விமான சேவை நிர்வாகத்தை பெற்றுக் கொள்வதற்கு 10 நிறுவனங்களும் அரசாங்கத்திற்கு யோசனை முன்வைத்துள்ளதாக...
வவுனியாவில் நீர்வடிகாலமைப்பு சபையால் குழாய் மூலம் விநியோகிக்கப்படும் நீரில் மண் கலந்து வருவதாக வவுனியா நகரையண்டி வாழும் மக்கள் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் அவர்கள் மேலும் தெரிவித்துள்ளதாவது, வவுனியா நகரையண்டிய கற்குழி, வைரவபுளியங்குளம், குருமன்காடு போன்ற பகுதிகளுக்கான குழாய் நீரில் மண் கலந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் அந்நீரை குடிப்பதற்கும், சமைப்பதற்கும் பயன்படுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், காலைவேளைகளிலும், சில தினங்களில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறுகின்றது. இதனால் நீர் கறுப்பு மற்றும் கலங்கல்...
பிள்ளைகளை பாடசாலைக்கு சேர்த்துக்கொள்ளும் வேளையில் அதிபர்கள் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருபவர்கள் தொடர்பில்1954 எனும் தொலைபேசி இலக்கத்தினூடாக தெரியப்படுத்த விசேட திட்டம் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. அரச பாடசாலையில் பிள்ளைகளை தாம் சேர்க்க செல்லும் வேளைகளில் நிதி மற்றும் பாலியல் இலஞ்சம் கோருவதாக பெற்றோர்கள் குற்றம் சாட்டியத்தினை அடுத்து குறித்த சேவை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழு தெரிவித்துள்ளது. எனினும் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் குறித்த இயக்கத்தின் ஊடாக தெரியப்படுத்த முடியும்...
இது வரைக்காலமும் புதிய கட்சி ஆரம்பிக்கப்படாது சுதந்திரக்கட்சியே எமது உயிர், உண்மையான சுதந்திரக்கட்சியின் உறுப்பினர்கள் நாம் என கூறிவந்தார் மஹிந்த. தற்போதைய நிலவரப்படி அவருடைய அரசியல் வாழ்வு தடுமாறிப்போயிள்ள நிலையில் புதிய கட்சி ஆரம்பிக்க உள்ளதாகவும் கட்சியின் சின்னம் போன்றவை அறிமுகப்படுத்தி விட்டதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. எவ்வாறாயினும் மஹிந்த கடந்த காலத்தில் தன் மூலமாகவும் தன் குடும்பம் மூலமாகவும் ஒரு வகை மக்கள் செல்வாக்கை சேர்த்து வைத்திருந்தார். அவர் மீது எத்தகைய...
இலங்கையில் இருந்து கப்பல் மூலம் கடத்தப்படவிருந்த பறவைகள் மீட்கப்பட்ட சம்பவம் ஒன்று வரலாற்றில் முதல் தடவையாக கொழும்பு துறைமுகத்தில் இடம்பெற்றுள்ளது. இந்த வாரத்தில் இடம்பெற்ற இந்த சம்பவத்தின்போது 11 கிளிகள், 6 லவ்பேட்ஸ் மற்றும் 10 சிவப்பு வர்ண புல்புல் குருவிகள் என்பன கைப்பற்றப்பட்டன. இந்த பறவைகள் அடைக்கப்பட்ட ஒரு பெட்டிக்குள் இருந்து கைப்பற்றப்பட்டுள்ளன. எனினும் குறித்த பறவைக்கடத்தல் கண்டுபிடிக்கப்பட்டபோது 10கிளிகளும் 4 லவ்பேட்ஸூம் இறந்துவிட்டன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மாலைத்தீவை சேர்ந்த இரண்டுபேர்...
சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மேலும் நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சலாவ இராணுவ முகாம் வெடி விபத்துச் சம்பவத்தில் முற்றுமுழுதாக வீடுகள் சேதமடைந்த குடும்பங்களுக்கு எதிர்வரும் மூன்று மாத காலத்திற்கு நட்டஈடு வழங்கப்பட உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இது தொடர்பிலான அமைச்சரவை பத்திரத்தை தமது அமைச்சு அனர்த்த முகாமைத்துவ அமைச்சுடன் இணைந்து சமர்ப்பிக்க உள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க கூறியுள்ளார். சலாவ வெடி விபத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் வழங்குவது குறித்து...
உணவுகளை அளவுக்கு மீறி நாம் சாப்பிடும் போது அந்த உணவே நமக்கு விஷமாகும். இதனை தான் ’அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு’ என்று நம் முன்னோர்கள் சொல்லி வருகின்றனர். அதுமட்டுமின்றி ஒரு சில உணவுகளை ஒருசேர ஒரே நேரத்தில் எடுத்துக் கொள்ளக்கூடாது. அப்படி எடுத்துக் கொள்ளும் பட்சத்தில் பின்விளைவுகளை சந்திக்க நேரிடும். தேனும், நெய்யும் சம அளவில் கலந்தால் நஞ்சாகிவிடும். எனவே இரண்டையும் சேர்த்து உண்ணக்கூடாது, இவற்றில் ஏதாவது ஒன்றை ஒரே...
கடந்த ஒரு மாதக்காலமாக எதிர்ப்பார்க்கப்பட்ட, இந்திய வர்த்தக இராஜாங்க அமைச்சர் நிர்மலா சித்தாராமனின் இலங்கைக்கு விஜயம் செய்யவுள்ளார். எதிர்வரும் 26ஆம் திகதி இலங்கைக்கு விஜயம் செய்யும் அவர் இரண்டு நாட்கள் இலங்கையில் தங்கியிருப்பார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேவேளை, 27ஆம் திகதி அவர் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவை சந்தித்திக்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. குறித்த சந்திப்பில், இலங்கை இந்திய பொருளாதார உடன்படிக்கை (எட்கா) தொடர்பில் கலந்துரையாபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.