வெள்ள நிவாரணம் வழங்குவதற்கு பெண் (வயது 24) ஒருவரிடம் பாலியல் இலஞ்சம் கோரிய அதிகாரி ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். வனாத்தவில்லு பிரதேச செயலகப் பகுதிக்குட்பட்ட கிராம சேவகர் (வயது 41) ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கடந்த மே மற்றும் ஜூன் மாதங்களில் ஏற்பட்ட மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு நிவாரணம் வழங்க ஒதுக்கப்பட்ட நிதியை வழங்கவே அவர் பாலியல் இலஞ்சம் கோரியுள்ளதாக தெரிய வந்துள்ளது. வெள்ள பாதிப்பு...
வாழ்வில் எந்தவொரு விடயத்தை எடுத்துக்கொண்டாலும் நேர்த்தியாக செய்து முடிப்பதில் பெண்களுக்கு நிகர் பெண்களே தான். இந்த விஷயத்தில் ஆண்களால் கிட்டவும் நெருங்க முடியாது. ஆண் ஒருவர் சமைத்த பின்னர் சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும், பெண் ஒருவர் சமைத்த சமையலறை எவ்வாறு இருக்கும் என்பதையும் பார்த்தாலே இந்த விஷயம் புரிந்து விடும். சரி இப்போது நாம் விடயத்திற்கு வருவோம், இராணுவப் பயிற்சி ஒன்றிற்கு அனுப்பப்பட்டிருந்த கல்லூரி மாணவிகள் பயிற்சியின் முடிவில் அணுவகுத்து...
டெல்லியில் மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ள இடத்தில், அத்தனைப் பேர் கூடி வேடிக்கை பார்க்க ஒரு இளம் பெண்ணை அவரது முன்னாள் காதலன் 30 முறைக்கும் மேலாக கத்தியால் வெறித்தனமாக குத்திக் கொலை செய்த செயல் அனைவரையும் நடுங்க வைத்துள்ளது. மக்கள் எல்லாம் இதைப் பார்த்து சிதறி ஓடுகிறார்கள். ஆனால் அந்த நபரோ யாரைப் பற்றியும் கவலைப்படாமல் அப்பெண்ணை வெறி கொண்டு குத்திக் கொன்றுள்ளான். 30 முறைக்கும் மேலாக அந்தப்...
தூய கடற்கரை - 2016 வேலைத்திட்டத்தின் கீழ் தேசிய கடற்கரை மற்றும் கடல்வளங்களின் பாதுகாப்பு வாரமும் கரையோர தூய்மைப்படுத்தும் செயற்திட்டம் இன்று திருகோணமலை மாவட்டத்தில் நடைமுறைப்படுத்தப்பட்டது. மகாவலி அபிவிருத்தி மற்றும் சுற்றாடல் அமைச்சுடன் கடல்சார் சூழல் பாதுகாப்பு அதிகாரசபை இதனை அமுல் படுத்தி வருகின்றது. இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் N.A.A புஸ்பகுமார பிரதம அதிதியாக கலந்து கொண்டதுடன் முப்படை அதிகாரிகள் மற்றும் முக்கிய பிரமுகர்கள், பாடசாலை சமூகம், மாணவர்கள்...
இலங்கையின் போலி நல்லிணக்கத்தின் உண்மையான நிலையை மதிப்பிட உறுப்பு நாடுகள் மற்றும் ஐ.நா. மனித உரிமை அலுவலகம் என்பனவற்றின் அரசியல் அழுத்தங்களை கடந்து சுயாதீனமான சர்வதேச விசாரணை ஆணைக்குழுவை ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவை நியமிக்கவேண்டும் என வலியுறுத்துகின்றேன் என்று வட மாகாண சபை உறுப்பினர் அனந்தி சசிதரன் தெரிவித்தார். யுத்தத்தின் இறுதி வருடத்தில் 150,000 க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ள நிலையில் 125 பேர் மட்டுமே சிறைகளில்...
வருடாந்தம் நடைப்பெற்று வருகின்ற முரளி கிண்ணம் கிரிக்கெட் சுற்றுப் போட்டி2016ஆம் ஆண்டுக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி இரணைமடு நிலும்பியசவில்ஆரம்பமாகியது. நேற்று மாலை இலங்கை கிரிகெட் அணியின் முன்னாள் தலைவரும், உலகின் தலைசிறந்த கிரிக்கெட் வீரர்களில் ஒருவருமான குமார் சங்ககார விஷேட அதிதியாக கலந்துகொண்டு குறித்த நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். நாளைய தினம் கடினப்பந்து கிரிக்கெட் சுற்றுப் போட்டிகள் யாழ்ப்பாணம், கிளிநொச்சி, ஒட்டுசுட்டான், மாங்குளம் போன்ற இடங்களில் நடைபெறவுள்ளது இப்போட்டியில் 23 அணிகளுக்கான...
யாழ். கந்தரோடை பிள்ளையார் நலன்புரி முகாம் மக்களுக்குத் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் ஊடாக விநியோகிக்கப்பட்டு வந்த குடிநீர் விநியோகம் கடந்த பத்து நாட்களுக்கு மேலாக நிறுத்தப்பட்டுள்ளமையால் முகாமில் வசிக்கும் மக்கள் குடிநீரைப் பெறுவதில் பெரும் சிரமங்களை எதிர்கொண்டு வருகின்றனர். கடந்த கால போர் நடவடிக்கைகள் காரணமாக கடந்த-1990ஆம் ஆண்டு வலி. வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த சுமார் 41 வரையான பொதுமக்கள் யாழ். கந்தரோடையில் தனியாருக்குச் சொந்தமான காணியொன்றில் பெரும்...
  கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில் ஏற்பட்ட தீ விபத்தினால் பாதிக்கப்பட்ட வர்த்தகர்கள் 25 பேருக்கு புலம்பெயர் உறவான எஸ். நாதன், நிதியுதவி வழங்கியுள்ளார். சுவிஸில் வசிக்கும் புலம்பெயர் உறவான, எஸ்.கே. அறிவுச் சோலை சிறுவர் இல்ல உரிமையாளர் எஸ்.கே.நாதன், கிளிநொச்சி பழக்கடை வர்த்தகர்கள் 23 பேருக்கு தலா பதினைந்தாயிரம் ரூபா வழங்கியுள்ளார். நேற்று காலை குறித்த இருபத்தைந்து வர்த்தகர்களுக்கும் இவ்வாறு நிதியுதவி வழங்கப்பட்டது. கடந்த வெள்ளிக்கிழமை இரவு கிளிநொச்சி சந்தைக் கட்டிடத் தொகுதியில்...
  பேரணியில் அனைவரும் கலந்துகொள்வோம் எதிர்வரும் 24ஆம் திகதி எமது உரிமைகளுக்காக நாம் குரல் கொடுக்கும்நாள். எனவே நாம் அனைவரும் ஓரணியில் திரண்டு எழுக தமிழ் பேரணியை வெற்றி பெறச்செய்வோம். தமிழ் மக்கள் பேரவை நடாத்தும் ‘எழுக தமிழ்’ பேரணி தொடர்பாக ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி விடுத்துள்ள பத்திரிகைச் செய்தியிலேயே அதன் தலைவர் மேற்கண்ட அறைகூவலை விடுத்துள்ளார். அவரது செய்தியில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது: தமிழ் மக்கள் பேரவை ஏற்பாடு செய்துள்ள ‘எழுக...
யுத்தம் மற்றும் ஏனைய அனர்த்தங்கள் காரணமாக கடந்த காலங்களில் வடக்கு மாகாணத்தில் 18 ஆயிரத்து 85 பேர் மாற்றுத்திறனாளிகளாக காணப்படுவதாக சமூக வலுவூட்டல் மற்றும் நலன்புரி அமைசச்ர் எஸ்.பி. திஸாநாயக்க தெரிவித்துள்ளார். வடமாகாணத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான மாதாந்தக் கொடுப்பனவை 4 ஆயிரத்து 163 பேர் பெறுகின்ற போதிலும், இந்நிலைமைக்கு ஆளாகியுள்ள 11 ஆயிரத்து 625 பேர் எவ்விதக் கொடுப்பனவையும் இதுவரை பெறவில்லை என்ற தகவலையும் அமைச்சர் வெளியிட்டார். நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை தமிழ்...