தமிழ் மக்கள் பேரவையின் செயற்குழு உறுப்பினர்களுக்கும், தமிழரசுக் கட்சியினருக்கும் இடையில் நடந்த பேச்சுவார்த்தையில் “எழுக தமிழ்!” பேரணியில் தம்மால் பங்குபற்ற முடியாது என்று தமிழரசுக் கட்சி தரப்பு தெரிவித்திருப்பதாக தெரியவருகின்றது. எதிர்வரும் செப்ரெம்பர் 24ஆம் திகதி நடைபெறவிருக்கும் “எழுக தமிழ்!” எழுச்சிப் பேரணியில் பங்குபற்றுமாறு தமிழரசுக் கட்சியையும் அழைப்பதற்காகவே தமிழ் மக்கள் பேரவையினர் இந்த சந்திப்பில் கலந்துகொண்டனர். யாழ்ப்பாண வர்த்தகர் சங்க தலைவர் திரு. ஜெயசேகரம் அவர்களின் ஏற்பாட்டில், அவரது வீட்டில்...
2016 ஆம் ஆண்டு தேசிய மட்டத்தில் பாடசாலைகளுக்கிடையில் நடைபெற்ற 15 வயதுக்குட்பட்ட கபடிப்போட்டியில் தேசிய மட்டத்தில் 01 ஆவது இடம் பிடித்து தங்கப்பதக்கம் வென்ற மன்னார் கட்டையடம்பன் ரோமன் கத்தோலிக்க தமிழ் கலவன் பாடசாலையின் மாணவர்களை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு கடந்த வெள்ளி 16-09-2016 மாலை 4 மணிக்கு இடம்பெற்றது. குறித்த தேசிய சாதனையாளர்களை மடு சந்தியில் இருந்து ஊர்வலமாக மளுவராயர் கட்டையடம்பன் புனித செபமாலை மாதா ஆலயம் வரை...
மன்னார் மாவட்ட புனர்வாழ்வு பெற்ற போராளிகள், யுத்தத்தில் பிள்ளைகளை இழந்த முன்னாள் போராளிகளின் குடும்பங்கள், அரசியல் கைதிகளின் குடும்பங்கள், ஏனைய போராட்டக் குழுக்களில் இருந்து உயிர் நீத்த போராளிகளின் குடும்பங்கள் ஆகியோருக்கான வடக்கு கிராம அபிவிருத்தி அமைச்சரின்  மேற்படிக் குடும்பங்களை வாழ்வாதாரத்தில் உயர்த்தும் திட்டத்திற்கு அமைவாக, 2016 ஆம் ஆண்டிற்கான மன்னார் மாவட்டத்தில் தெரிவான ஒரு தொகுதி பயனாளிகளுக்கான வாழ்வாதார உதவிப் பொருட்கள் வழங்கிவைக்கும் நிகழ்வு 19-09-2016 திங்கள்...
வவுனியாவிலிருந்து 22 கிலோமீற்றர் தூரத்தில் அமைந்துள்ள கள்ளிக்குளம் கிராமத்தின் காட்டுப்பகுதி. இங்கு 9 குடும்பங்களை சேர்ந்த 30 உறுப்பினர்கள் எந்தவிதமான அடிப்படை வசதிகளுமின்றி வாழ்ந்து வருகிறார்கள். உலகம் நாகரீகத்தின் உச்சியை தொட்டுக்கொண்டிருக்கும் நிலையில் கள்ளிக்குளத்தின் காட்டுப்பகுதியில் கைவிடப்பட்ட நிலையிலிருக்கும் மக்களின் நிலைமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 30 வருடகாலமாக இலங்கையில் நடைபெற்ற உள்நாட்டு யுத்தம் 'காற்றில் அகப்பட்ட பஞ்சு போல்' வடக்கு கிழக்கு தமிழ் மக்களை அதிகளவில் பாதித்ததுடன் அவர்களை...
ஸ்பெயின் லீக் கால்பந்து போட்டியில் தொடர்ச்சியாக 16 வெற்றிகள் பெற்ற ரியால் மாட்ரிட் அணி, பார்சிலோனா அணியின் சாதனையை சமன் செய்துள்ளது. ஸ்பெயின் தலைநகர் மாட்ரிட் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை ரியல் மாட்ரிட் அணியும், எஸ்பேன்யால் அணிகளும் மோதின. இதில் ரியல்மாட்ரிட் அணி சார்பில் ரோட்ரிகஸ் ஒரு கோல் முதல் பாதியிலும், பென்ஸீமா இரண்டாவது பாதியிலும் ஒரு கோல் அடித்து அசத்தினர். கடைசி வரை போராடிய எஸ்பேன்யால் அணியால் ஒரு கோல் கூட...
பிரேசிலில் நடந்து முடிந்த பாராலிம்பிக் போட்டியின் நிறைவு விழாவில் தங்கம் வென்ற தமிழக வீரர் மாரியப்பன் இந்திய தேசியக் கொடியை ஏந்தி சென்றுள்ளார். பிரேசில் நாட்டில் ரியோ டி ஜெனிரோ நகரில் பாராலிம்பிக் போட்டிகள் கடந்த செப்டம்பர் 7 ஆம் திகதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வந்தது. இப்போட்டியில் 160 நாடுகளிலிருந்து 4.342 வீரர்கள் கலந்து கொண்டனர். 11 நாட்கள் நடத்தப்பட்ட இந்த பாராலிம்பிக் திருவிழாவானது நேற்று அதிகாலை மரக்கானா மைதானத்தில்...
நியூயோர்க் Sheraton New York Times Square ஹோட்டலில் இன்று (செப் 19) இடம்பெற்ற கிளின்டன் பூகோளஅமையத்தின் 2016 வருடாந்த மாநாட்டின் விசேட அழைப்பாளராக ஜனாதிபதி கௌரவ மைத்ரிபால சிறிசேன அவர்கள்கலந்து கொண்டார். கிளின்டன் மன்றத்தின் உப தலைவர் செல்ஸியா கிளின்டன் இக்கூட்டத்தின் ஆரம்ப உரையினை நிகழ்த்தினார். உலகலாவிய ஒற்றுமையினை உறுதிப்படுத்துவதற்கு இலங்கை வழங்கிவரும் பங்களிப்புக்கு இம்மாநாட்டின்போதுபாராட்டுத் தெரிவிக்கப்பட்டது. இத்தாலிய பிரதமர் Matteo RENZI மற்றும் சுவீடனின் பிரதமர் Stefan Löfven உள்ளிட்ட...
இந்தியாவில் 1.3 பில்லியன் மக்கள் தொகை உள்ள நாட்டில் 150கி.மீற்றர் வேகத்திற்கு பந்துவீசும் வேகப்பந்து வீச்சாளர்கள் இல்லாதது வருத்தமளிப்பதாக பிரட் லீ தெரிவித்துள்ளார். டிஎன்பிஎல் போட்டிகளுக்காக இந்தியா வந்துள்ள அவுஸ்திரேலியா முன்னாள் வேகப்பந்து வீச்சாளர் பிரட் லீ அது முடிவற்ற நிலையில் தற்போது பேட்டி அளித்துள்ளார். அவர் கூறுகையில், வேகப்பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட வேண்டுமென்றால் உடற்பயிற்சி செய்ய வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். உடற்பயிற்சி செய்வது உடலுக்கு மட்டுமில்லாமல் மனதிற்கும் வலுசேர்க்கும். இதன்...
அமெரிக்காவில் நடைபெற்ற சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் தங்கம் வென்றும் முதல்வரை சந்திக்கமுடியவில்லை என பிளாட்னி மாறனின் தாய் தனலட்சுமி கூறியுள்ளார். தமிழ்நாட்டின் ஓட்டேரி பகுதியைச் சேர்ந்தவர் தனலட்சுமி. இவருக்கு பிளாட்னி மாறன் என்ற மகன் உள்ளார். இவர் முதலமைச்சருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில், என் மகன் 15 வயதில் இருந்தே சிறப்பு ஒலிம்பிக் பிரிவில் பங்கெற்று வருவதாகவும், அதில் பல பதக்கங்கள் பெற்று தமிழ்நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளான் எனவும், தற்போது கூட...
முகநூல் காதல் விவகாரத்தினால் வவுனியா பாரதிபுரத்தினை சேர்ந்த ரவீந்திரகுமார் சதீஸ் என்ற இளைஞன் கடந்த (18.09.2016) சவுதியில் தற்கொலை செய்துள்ளார். வவுனியா விநாயகபுரம் பாரதிபுரத்தைச் சேர்ந்த ரவீந்திரன் சதீஸ்(24வயது) என்ற இளைஞன் கடந்த 18மாதங்களுக்கு மேலாக சவுதி அரேபியாவில் சாரதியாக பணிபுரிந்து வந்துள்ளார்.இவர் நேற்று அதிகாலை 5.30மணியளவில் அவரது அறையில் ( சவுதிஅரேபியாவில்) தற்கொலை செய்துள்ளார். முகநூலில் ஏற்ப்பட்ட காதல் விவகாரத்தினால் இவர் தற்கொலை செய்துள்ளதாக இவரது குடும்பத்தினர் சந்தேகம் தெரிவித்தனர். மேலும் இவரது...