நல்லைக்குமரனின் 24 ஆவது மலர் வெளியீடு இன்று புதன்கிழமை யாழ.நாவலர் மண்டபத்தில் நடைபெற்றது. யாழ்.மாநகர சபையின் ஏற்பாட்டில் யாழ்.மாநகர ஆணையாளர் பொ.வாகீசன் தலைமையில் நல்லைக்குமரன் மலர் வெளியீடு நடைபெற்றது. நல்லை ஆதின குருமுதல்வர் ஸ்ரீலஸ்ரீ சோமசுந்தர பரமாச்சாரிய சுவாமிகள் மற்றும் வாசுதேவக்குருக்கள் சைத்தன்ய சுவாமிகளின் ஆசியுரைகள் இடம்பெற்றன. நல்லைக்குமரன் மலர் வெளியீட்டு நிகழ்விற்கு பிரதம விருந்தினராக வடமாகாண முதலமைச்சர் சீ.விக்னேஸ்வரன் கலந்துகொண்டு முன்னாள் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் தி.இராசநாயகத்திற்கு பொன்னாடை போர்த்தியும்...
தனது பேத்தியின் பிறந்த தினத்திற்காக கசிப்பு காய்ச்சிய 51 வயதுடைய பாட்டனை அலவத்துகொடை பொலிஸார் கைது செய்துள்ளனர். பொலிஸாருக்கு கிடைத்த தகவல் ஒன்றின்படி சம்ப இடத்திற்கு விரைந்த பொலிஸார், கண்டி அலவத்துகொடை பிரதேசத்தில் கசிப்பு காய்ச்சிக் கொண்டிருந்த குறித்த சந்தேக நபரை கைது செய்துள்ளனர். தனது மகளது புதல்வியின் (பேத்தியின்) பிறந்த தின கொண்டாட்டத்திற்காக கசிப்பு தயாரித்தகாக கைதுசெய்யப்பட்ட நபர் பொலிஸாரிடம் தெரிவித்துள்ளார். கைதுசெய்யப்பட்டவரிடமிருந்து 375 மில்லிலீற்றர் கசிப்பையும் கசிப்பு தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படும்...
ஸ்ரீலங்காவின் சட்டத்தில் இருப்பதற்கு, தகுதியற்ற சட்டம் என்று அரசாலேயே விமர்சிக்கப்பட்ட பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் தமிழ் அரசியல் எதற்காக இன்னும் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர் என எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன் நேற்று சபையில் கேள்வி எழுப்பியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு உடன் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும் என்றும் அரசை வலியுறுத்தியுள்ளார். தமிழ் அரசியல் கைதிகள் விடுதலை குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் நேற்று பேச்சுவார்த்தை நடத்தியுள்ள சம்பந்தன்,...
  கொழும்பு – பம்பலப்பிட்டியில் கடத்தப்பட்ட வர்த்தகரை விடுவிக்க வேண்டுமாயின் இரண்டு கோடி ரூபாவை கப்பபமாக செலுத்த வேண்டுமென கடத்தற்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மொஹமட் ஷகீம் என்ற குறித்த வர்த்தகரை கடத்தியவர்கள், அவரது தந்தையை தொலைபேசி மூலம் தொடர்புகொண்டு கப்பம் குறித்து அறிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று முன்தினம் கடத்தப்பட்டவரின் தந்தையுடன் தொலைபேசியில் தொடர்புகொண்ட கடத்தல்காரர்கள் இரண்டு கோடி ரூபாய் கப்பம் கோரியுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர். உங்கள் மகன் எங்களிடம் பாதுகாப்பாக இருக்கின்றார், அவரை...
 இந்த சோதனையில் பல லட்சம் மதிப்பிலான வைப்பு பத்திரங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. கருகலைப்பு மையம் திருவண்ணாமலை அவுல்காரத் தெருவில் உள்ள வீட்டில் கருக்கலைப்பு மையம் இயங்கி வருவதாகவும், கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து கருக்கலைப்பு செய்வதாகவும் சென்னை மருத்துவ ஊரக நலப்பணிகள் துறைக்கு புகார்கள் வந்தன. அதன்பேரில் ஊரக மருத்துவ நலப்பணிகள் இணை இயக்குனர் குருநாதன், உதவி கமிஷனர் நரசிம்மன், கண்காணிப்பாளர் கமலகண்ணன் ஆகியோர் தலைமையில் 10 பேர்...
ஐ.எஸ் தீவிரவாதிகளால் மீண்டும் கற்பழிக்கப்படுவோம் என அஞ்சி, 17 வயதான யாஸிதி சிறுமி ஒருவர் தன்னையே எரித்துக் கொண்ட சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. யாஸ்மின் என்ற சிறுமியே இக்கொடூர செயலில் ஈடுபட்டுள்ளார். தற்போது ஜேர்மனியில் டாக்டர் Jan Ilhan Kizilhan நடத்தி வரும் மையத்தில் உளவியல் சிகிச்சை பெற்று வருகிறார் யாஸ்மின். யாஸ்மின் வாழ்க்கையில் நடந்த கொடுமைகளை டாக்டர் Jan Ilhan Kizilhan தற்போது உலக மக்களுடன்...
  செப்டம்பர் மாதம் முதலாம் திகதி முதல் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் பயன்படுத்தல் மற்றும் விற்பனை செய்தல் அமுலுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக பாதுகாப்பு தொடர்பான தேசிய சபை தெரிவித்துள்ளது. இதனை பாதுகாப்பு தொடர்பான தேசிய சபையின் தலைவர் சிசிர கோதாகொட தெரிவித்துள்ளார். இந்நிலையில் பாதுகாப்பான மோட்டார் சைக்கிள் தலைக்கவசங்கள் எதிர்வரும் காலங்களில் இந்தோனேஷியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படவுள்ளது. மோட்டார் சைக்கிள் விபத்துகள் நாட்டில் அதிகரித்துள்ளதால் குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
ஜப்பானில் பள்ளிக்கான நுழைவுத் தேர்வில் தோல்வி அடைந்த காரணத்தினால் மகனை கத்தியால் குத்திக் கொலை செய்த தந்தையின் வெறிச்செயல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஜப்பானை சேர்ந்தவர் Kengo Satake(48), இவரது மகன் Ryota (12). Kengo Satake அங்குள்ள பிரபல தனியார் பள்ளியில் தனது மகனை சேர்ப்பதற்காக சென்றுள்ளார். இப்பள்ளியில் சேர்க்க வேண்டுமென்றால் நுழைவு தேர்வு வைக்கப்படும் என பள்ளி நிர்வாகம் தெரிவித்துள்ளது . இதன் காரணமாக அவர் சிறுவனுக்கு பயிற்சி அளித்து...
தற்போது பிரித்தானியாவில் கோடைகாலம் நிலவி வருவதாலும். வெப்பம் அதிகமாக காணப்படுவதாலும் பல தமிழர்கள் கடல்கரைகளுக்கு செல்வது வழக்கமானதொன்றாக உள்ளது. கடந்த சில தினங்களுக்கு முன்னர் குடும்பம் மற்றும் நண்பர்களோடு பூலி (சான் டவுன்) பீச்சுக்கு சென்ற ஈழத் தமிழ் இளைஞர் ஒருவர் பரிதாபமாக கடலில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உடனடியாக (ஆகாய)ஏர்- அம்பூலன்ஸ் அழைக்கப்பட்டு அவரது உயிரைக் காப்பாற்ற மருத்துவர்கள் எவ்வளவோ முயற்ச்சி மேற்கொண்டும் அது பலனளிக்கவில்லை. தமிழர்களே பிரித்தானிய கடல் பற்றி...
பேஸ்புக் மற்றும் ஸ்கைப் போன்ற சமூகவலைதளங்களை பயன்படுத்துவதற்கு சிறைக்கைதிகளுக்கு அனுமதி வழங்கலாம் என முன்னோடி திட்டத்தின் கீழ் சிறைச்சாலை பரிசோதகர் குழு பரிந்துரை செய்துள்ளது. பிரித்தானியாவில் உள்ள சிறைச்சாலைகளில் உள்ள கைதிகளுக்கு தங்கள் குடும்பதினருடன் பேசுவதற்கு ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்படுகிறது. அந்த நேரத்தில் இவர்களுக்கு வரும் அழைப்புகள், சிறை கண்காணிப்பாளரின் முன்னிலையில் இவர்களுக்கு கொடுக்கப்படும், அதனை இவர்கள் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இந்த கைப்பேசி அழைப்புக்கான தொகையை, சிறைக்கைதிகளின் ஊதியத்தில் இருந்து எடுத்துக்கொள்ளப்படுகிறது. இந்நிலையில்...