திருவாளர் சம்பந்தன் அவர்களுக்கு உலகம் உண்மைகளை இனியேனும் அறியட்டும் யுத்தம் முடிந்து ஏழு ஆண்டுகள் கடந்து விட்டன. நீங்கள் உருவாக்கியதாக சொல்லப்படுகின்ற அரசு செயற்படத் தொடங்கி 20 மாதங்கள் ஆகிவிட்டன. மக்களிடமிருந்து பலாத்காரமாக பெறப்பட்ட காணிகள் தொடர்ந்தும் இழுபறி நிலையில்தான். கிளிநொச்சி நகரின் முதலாவதும்ரூபவ் முக்கியமானதுமான கிராமம் பரவிப்பாஞ்சான். இக்கிராமம் இராணுவத்தினரின் தலைமை செயலகமாக செயற்படுகின்றது. இத்தகைய அலங்கோலங்களுக்கு முடிசூட்டுவது போல் யுத்தத்தால் அடைந்த துன்பங்கள்ரூபவ் கஸ்டங்களரூபவ்; இழப்புக்கள் ஆகியவற்றுக்கு மத்தியில் பொதுமக்களின் நிலம் 617 ஏக்கர்...
வீட்டில் வளர்த்த நாகப் பாம்பு ஒன்று தீண்டி சுற்றாடல் ஆய்வாளர் ஒருவர் உயிரிழந்துள்ளார். ஆய்வு நோக்கத்திற்காக வீட்டில் வளர்த்து வந்த நாகப் பாம்பு ஒன்றே இவ்வாறு தீண்டியுள்ளது. காலியைச் சேர்ந்த 47 வதான அமல் விஜேசேகர என்பவரே இவ்வாறு சம்பவத்தில் உயிரிழந்துள்ளார். காலி கலேகானே பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நேற்று முன்தினம் இந்த நபரை வீட்டு வாயிட் கதவு அருகாமையில் இறந்து கிடந்த நிலையில் உறவினர்கள் மீட்டுள்ளனர். இலங்கைக்கே உரிய உயிரினங்கள் தொடர்பில் ஆய்வு...
இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையில் பாலம் ஒன்று அமைக்கப்படுமாயின் அதனை குண்டு வைத்து தகர்த்தெறியவும் தயாராக இருப்பதாக பிவித்துரு ஹெல உறுமய கட்சியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார். கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைத்த அவர், இந்தோனேசியாவின் ஜகர்த்தா நகரில் நடைபெறும் 12வது இஸ்லாமிய பொருளாதார மாநாட்டில் கலந்து கொண்ட அமைச்சர் கபீர் ஹசீம், கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கும் போது இந்தியாவையும் இலங்கையையும் இணைக்கும்...
இலங்கை வாழ் முஸ்லிம் மக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதி தொடர்பில் விசாரணை நடத்த தனியான நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் முஸ்லிம்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிகள் தொடர்பில் விசாரணை நடாத்த விசேட நீதிமன்றம் அமைக்கப்பட வேண்டுமென சுஹதாக்கால் என்ன அமைப்பு கோரியுள்ளது. கிழக்கு மாகாணத்தை மையமாகக் கொண்டு இந்த அமைப்பு இயங்கி வருகின்றது. 1990ஆம் ஆண்டில் தமிழீழ விடுதலைப் புலிகள் இரண்டு பள்ளிவாசல்கள் மீது தாக்குதல் நடத்தி 100 பேரை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச உள்ளிட்டவர்களை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் தொடர்ந்தும் வைத்திருக்க வேண்டிய எவ்வித தேவையும் கிடையாது. அக்கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த சில்வா சிங்கள ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்காணலில் இதனைத் தெரிவித்துள்ளார். இது குறித்து தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், கட்சியின் ஒழுக்க விதிகளை தொடர்ச்சியாக மீறி பாத யாத்திரை நடத்தி கட்சியின் தலைமையகம் மீது கல் வீசி, ஜனாதிபதியை தொடர்ச்சியாக இழிவுப்படுத்தி தாம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள்...
தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தமைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட வழக்கில், ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ நீதிமன்றத்தில் முன்னிலையாகியுள்ளார். இது தொடர்பில் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நேற்று முன்னிலையாகிய அவர், கேள்விகளுக்கு விளக்கம் அளித்துள்ளார். கடந்த 2008ஆம் ஆண்டு ஒக்டோம்பர் மாதம் 21ஆம் திகதி சென்னை எஸ்பிளனேடு, ராஜா அண்ணாமலை மன்றத்தில், "ஈழத்தில் என்ன நடக்கிறது?' என்பது தொடர்பான கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் கருத்து தெரிவித்த வைகோ மற்றும்...
திருகோணமலை மூதூரில் தமது 17 பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் நம்பிக்கையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என பிரான்ஸின் தொண்டு நிறுவனம் இலங்கை அரசாங்கத்திடம் கோரியுள்ளது. எக்சன் எகெய்ன்ட் ஹங்கர் என்ற இந்த தொண்டு நிறுவனத்தின் தலைவர் வேரோனிக்கியு என்ரியின்ஸ் (Veronique Andrieux) இலங்கை வந்துள்ள நிலையில் இந்தக்கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தப்படுகொலைகள் இடம்பெற்று 10 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையிலேயே இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நான்கு பெண்கள் உட்பட்ட தமது பணியாளர்கள் கொல்லப்பட்டமை தொடர்பில் இதுவரை எவரும்...
ஹம்பாந்தோட்டை நாடாளுமன்ற உறுப்பினர் சனத் நிஸாந்தவின் கட்சி உறுப்புரிமை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி அறிவித்துள்ளது. நேற்று கூடிய கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தின்போது இதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் செயலாளர் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார். கட்சியின் தலைமையை வெளிப்படையாகவே விமர்சித்து வந்த குற்றச்சாட்டே அவர் மீது சுமத்தப்பட்டுள்ளது.  
தமிழகம் ராமேஸ்வரம் ஆலயத்தில் ஆடித்தேரோட்டம் இன்று வெகு சிறப்பாக இடம்பெற்றது. தீர்தம், மூர்த்தி, தலம் ஆகிய முப்பெருமையுடைய ராமேஸ்வரம் புண்ணியத்திருத்தலம் காசிக்கு நிகரானது. கடந்த மாதம் 27ஆம் திகதி கொடியேற்றத்துடன், இவ்வாலயத்தின் ஆடித்திருவிழா ஆரம்பமாகியது. தொடர்ந்தும் 17 நாட்கள் நடைபெறும் இத்திருவிழாவில், ஒன்பதாம் நாளான இன்று தேர் திருவிழா வெகு சிறப்பாக இடம்பெற்றது. திருவிழாவின் முக்கிய நிகழ்வான தபசுமண்டகப்படி 6ஆம் திகதியும், 7ஆம் திகதி அருள்மிகு பர்வதவர்த்தினி அம்பாளுக்கும் - அருள்மிகு இராமநாதசுவாமிக்கும்...
வட மாகாண சபையினால் பல விதமான அபிவிருத்தி திட்டங்களை மருந்தங்கேணியில் மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். வடக்கு மாகாண சபையும் யாழ் மாவட்டச் செயலகமும் இணைந்து மருதங்கேணி நடத்திய குறை நிவர்த்தி நடமாடும் சேவையில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பாண்டியன்குளம், புளியங்குளம், செட்டிக்குளம், மடு ,நெடுந்தீவு போன்ற இடங்களில் முன்னைய...