பொறுப்புக்கூறல் விடயத்தில் சர்வதேசத்துடன் செய்துகொண்ட உடன்படிக்கைபடி இலங்கை செயற்படவேண்டும் என தெரிவிக்கப்படுகின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன்னின் பேச்சாளர் ஸ்டீபன் டுஜாரிக் இதனை தெரிவித்துள்ளார். நாளாந்த செய்தியாளர் சந்திப்பில் நேற்று எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அவர், இலங்கைக்கும் சர்வதேசத்துக்கும் இடையில் உடன்பாடுகள் இருக்கின்றன. எனவே இந்த உடன்பாடுகளுடன் இலங்கை குறித்து உடன்பாடுகளுக்கு அமைய செயற்படவேண்டும் என்று குறிப்பிட்டார். இந்த நிலையில் பொறுப்புக்கூறலை உறுதிப்படுத்தும் விடயத்தில் இலங்கைக்கும் சர்வதேச சமூகத்துக்கும்...
சீனி, பருப்பு, உருளைக்கிழங்கு, பெரிய வெங்காயம், செத்தல் மிளகாய், கருவாடு, பால்மா உள்ளிட்ட 15 வகையான அத்தியவசிய நுகர்வுப் பொருட்களின் விலைக் குறைப்பு பற்றிய அறிவிப்பு வெளியிடப்படவுள்ளது. வாழ்க்கைச் செலவு தொடர்பான அமைச்சரசை உபகுழு இன்று (12) பிற்பகல் ஜனாதிபதி அவர்கள் தலைமையில் ஜனாதிபதி அலுவலகத்தில் கூடிய போது இது தொடர்பாக விரிவாக கலந்துரையாடப்பட்டது. சதொச நிறுவனத்தினூடாக நுகர்வோருக்கான அத்தியவசியப் பொருட்களை வழங்குதல் தொடர்பாகவும் இங்கு கலந்துரையாடப்பட்டது. ஒரு பண்டம் உற்பத்தி செய்யப்பட்டது முதல் நுகர்வோரைச் சென்றடையும்...
  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்களான நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று சி்றிலங்கா பிரதமரையும், பாதுகாப்புத் தரப்பினரையும் சந்தித்துப் பேசவுள்ளனர். அலரி மாளிகையில் இன்று காலை சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை, அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள் மற்றும் தொழிலாளர் விவகாரங்களுக்கான...
  போருக்குப் பிந்திய நல்லிணக்க செயல்முறைகளை சிறிலங்கா முன்நோக்கி நகர்த்துவதற்கு, அதன் பங்காளராக இணைந்திருப்பதில் அமெரிக்கா உறுதிபூண்டுள்ளது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தெற்கு மத்திய ஆசிய விவகாரங்களுக்கான உதவிச் செயலர் நிஷா பிஸ்வால் தெரிவித்தார். கொழும்பில் நேற்று மாலை சிறிலங்கா வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீரவுடன் நடத்திய பேச்சுக்களை அடுத்தே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். ”சிறிலங்காவில் இன்னும் அதிகமான பணிகள் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. இதற்கு சிறிலங்காவுக்கு உதவ அமெரிக்கா தயாராக உள்ளது. இரண்டு...
  முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாயராஜ பக்ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த இரா­ணு­வப்­பா­து­காப்பு நீக்­கப்­பட்டு பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளமை பாது­காப்பு பேர­வையின் தீர்மா­ன­மே­யாகும். அதனை தடுக்க முடி­ யாது எனவும் பாது­காப்பு ஊட­கப்பேச்­சாளர் ஜெயநாத் ஜெய­வீர தெரி­வித்தார். முன்னாள் பாது­காப்பு செய­லாளர் கோத்­த­பாய ராஜபக் ஷவிற்கு வழங்­கப்­பட்­டி­ருந்த 50 இரா­ணுவ வீரர்­களில் 25 இரா­ணு­வத்தை நீக்கி அதற்கு பதி­லாக பொலிஸ் விசேட அதி­ர­டிப்­ப­டை­யினர் நிய­மிக்­கப்­பட்­டுள்­ளனர். நேற்றுக் காலையில் இருந்து அமு­லுக்கு வரும் வரையில்...
  சிறிலங்காவில் என்ன நடக்கிறது என்பது உலகம் முழுழுவதிலும் உள்ள மக்களுக்கு முக்கியமான விடயமாக இருக்கிறது என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர், ரொம் மாலினோவ்ஸ்கி தெரிவித்தார். சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அவர், நேற்று மாலை நிஷா பிஸ்வாலுடன் இணைந்து சிறிலங்கா வெளிவிவகார அமைச்சரைச் சந்தித்துப் பேசினார். இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ரொம் மாலினேவ்ஸ்கி, “நல்லிணக்க மற்றும் மறுசீரமைப்பு செயற்பாடுகளில் சிறிலங்கா அரசாங்கம்...
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேற்று மாலை 6.20 மணியளவில் UL 207 விமானத்தினூடாக இலண்டன் பயணமானார். பிரித்தானியாவின் ஸ்ராபோர்ட்சியர் பல்கலைக்கழகத்தில் கற்று வந்த தனது புதல்வி தரணியின் பட்டமளிப்பு விழாவில் பங்கேற்கவே சிறிலங்கா அதிபர் லண்டன் செல்லவுள்ளார். சிறிலங்கா அதிபர் மைத்திரிபால சிறிசேனவின் இரண்டாவது புதல்வியான தரணி சிறிசேன, பிரித்தானிய பல்கலைக்கழகத்தில் சட்டபீடத்தில் கல்வி கற்று பட்டம் பெறவுள்ளார். பட்டமளிப்பு விழாவில் பங்கேற்க தனிப்பட்ட பயணமாக லண்டன் செல்லும் சிறிலங்கா அதிபர், வரும்...
  சிறிலங்காவுக்குப் பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உதவிச் செயலர்கள் நிஷா பிஸ்வால் மற்றும் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச் சந்தித்துப் பேச்சு நடத்தவுள்ளனர். தெற்கு மத்திய-ஆசிய விவகாரங்களுக்கான உதவி இராஜாங்கச் செயலர் நிஷா பிஸ்வால் மற்றும், ஜனநாயகம், மனித உரிமைகள், தொழிலாளர் விவகாரங்களுக்கான உதவிச் செயலர் ரொம் மாலினோவ்ஸ்கி ஆகியோர் இன்று காலை கொழும்பிலுள்ள அமெரிக்கத் தூதரின் இல்லத்தில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பைச்...
அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட பொகவந்தலாவ பகுதியில் சிறு தொழில் வியாபாரம் செய்கின்றவர்களை ஊக்கப்படுத்தும் முகமாக நுவரெலியா மாவட்டச் செயலகத்தின் சிறுதொழில் முயற்சியாண்மை பிரிவின் மாவட்ட பயிற்சி அபிவிருத்தி உத்தியோகத்தர் சதீஸ் தலைமையில் தொடர்ச்சியாக மூன்று நாட்கள் பொகவந்தலாவ பௌத்த விகாரையில் இடம்பெற்ற வியாபார வழிகாட்டல் பயிற்சி நெறியில் கலந்துக்கொண்டவர்களை இங்கு காணலாம். நோட்டன்பிரிஜ் நிருபர் மு.இராமச்சந்திரன்  
மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களின் பன்முகப்படுத்தப்பட்ட நிதியிலிருந்து நுவரெலியா மாவட்டத்தில் மிகவும் வறிய குடும்பங்களைச் சேர்ந்தவர்களுக்கும் தற்காலிக கூடாரங்களில் வசித்து வருகின்ற குடும்பங்களுக்கும் கூரைத்தகடுகள் மத்திய மாகாணசபை உறுப்பினர் சக்திவேல் அவர்களினால் 12-7-2016 கொட்டக்கலை பிரதேச சபை காரியாலயத்தில் வழங்கப்பட்டன. இதன்போது நுவரெலியா பிரதேச சபை செயலாளர் விஜேந்திரன் உட்பட இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் முக்கியஸ்தர்களும் கலந்துக்கொண்டனர்.இங்கு உரையாற்றிய மத்திய மாகாண சபை உறுப்பினர் சக்திவேல் தெரிவிக்கையில்,...