கடந்த 24.04.2016 அன்று வவுனியா மாவட்டத்தில் பொருளா தார மத்திய நிலையம் அமைப்பதற்கான காணி ஒதுக்கீடு தொடர்பாக முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு த.தே.கூட்டமைப்பின் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்களும், வட மாகாணசபையின் உறுப்பினர்களும் கையொப்பமிட்டு கடிதம் அனுப்பியுள்ள நிலையில், இதில்; குறிப்பிடப்பட்ட ஒருசிலர் தற்பொழுது வடக்கு சுகாதார அமைச்சர் சத்தியலிங்கத்திற்கு எதிராகச் செயற்படுவதில் பல அரசியல் பின்னணிகள் இருக்கின்றது. மான்புமிகு முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்களுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்தினை இங்கு தருகின்றோம். 24.04.2016. வவுனியா. மான்புமிகு...
  வெளிநாட்டுக்கு பணிப்பெண்ணாகச் வேலைவாய்ப்பு பெற்றுச்சென்று அங்கு பல்வேறு பிரச்சினைகளுக்கு முகங்கொடுத்த பெண்கள் 15பேர் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளனர். குவைத்துக்கு வீட்டுப்பணிப்பெண்களாகச் சென்றவர்களே இவ்வாறு நாடு திரும்பியுள்ளனர். தாம் சேவைபுரிந்த வீடுகளில் பல்வேறு துன்பங்களுக்கு முகங்கொடுத்த இந்த பெண்கள், குவைத் தூதரகத்தில் தஞ்சமடைந்தனர். வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் மேற்கொண்ட நடவடிக்கையையடுத்து அவர்கள் நாட்டுக்கு மீண்டும் அழைத்துவரப்பட்டுள்ளனர். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக நாடு திரும்பிய இந்த பெண்கள், தமது வீடுகளுக்குச் செல்ல தேவையான...
  வங்கதேசத்தில் உலகின் மிக வயதான சிறைக்கைதியாக கருதப்பட்ட பெண்மணி சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். நூறு வயதைத் தாண்டியவராகக் கருதப்படும் ஒஹிதுன்னிசா என்ற அவர், இருபது வருடங்களுக்கு முன்னர், குடும்பத் தகராறில் கொலை செய்ததாக குற்றச்சாட்டில் தவறாக தண்டிக்கப்பட்டார். நாட்டின் தலைமை நீதிபதி சுரேந்திர குமார் சின்ஹாவின் தலையீட்டால், மேல் முறையீட்டு நீதிமன்றம் அவரை விடுவித்தது. ஒஹிதுன்னிசா தனது பார்வையை இழந்துவிட்டார் என்றும் பிறர் துணையால் மட்டுமே தற்போது அவரால் நகர முடிகிறது என்றும் கூறப்படுகிறது. ஆயுள்...
  மன்னார் – பள்ளிமுனை கிராமத்தில் கடற்படைக்கென காணி அளக்கும் முயற்சி பொது மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளது. பள்ளிமுனை பகுதியில் 22 குடும்பங்களுக்கு சொந்தமான காணியை கடற்படையின் தேவைக்கென அளக்கும் முயற்சி இன்று புதன்கிழமை காலை முன்னெடுக்கப்பட்டது. இதற்கு காணி உரிமையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்த போதிலும், பிரதேச செயலரின் அனுமதியுடனேயே தாம் காணி அளக்கும் நடவடிக்கையில் ஈடுபட தயாரானதாக நிலஅளவையாளர்கள் தெரிவித்துள்ளனர். குறித்த காணி ஏற்கனவே அரசாங்கத்தால் கையகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் இதற்கு எதிராக கடந்த 2013 ஆம்...
  மத்திய பிரதேசத்தில் ரூ.4 கோடிக்கு விலை பேசப்பட்ட எருமை மாட்டை விற்க அதன் உரிமையாளர் மறுப்பு தெரிவித்துள்ளார். மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள அக்மியா கிராமத்தை சேர்ந்தவர் முன்னாசிங். விவசாயான இவர் 100 மாடுகளுடன் பண்ணை ஒன்று நடத்தி வருகிறார். இந்த பண்ணையில் ஹீரா என்ற பெயர் சூட்டப்பட்ட எருமை மாட்டை வளர்த்து வருகிறார். இந்த மாட்டுக்கு 5 வயது ஆகிறது. 4 ஆண்டுகளுக்கு இதை அரியானா மாநிலத்தில்...
“மத்திய மாகாணத்தில் தனியார் பஸ் வண்டிகளுக்கு இதன் பின்னர், பயணிகள் போக்குவரத்து அனுமதிப்பத்திரம் வழங்கப்படமாட்டாது” என மத்திய மாகாண போக்குவரத்து, வீதி அபிவிருத்தி, மின்சாரத்துறை அமைச்சர் எதிரிவீர வீரவர்தன தெரிவித்தார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த அவர், மத்திய மாகாணத்தில் தற்போது அளவுக்கு அதிகமாக பஸ்கள் காணப்படுவதுடன், அதற்கான போக்குவரத்து அனுமதிப்பத்திரமும் வழங்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக, பஸ்களுக்கு இடையில் கடும் போட்டி நிலவுவதாகவும் சிலவேளைகளில் பஸ் ஊழியர்கள் மத்தியில் சண்டைகள்...
  எதிர்வரும் உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலை தொகுதிவாரித் தேர்தல் முறைமையின் கீழ் நடாத்தத் திட்டமிட்டுள்ளதாக ஸ்ரீலங்கா ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அமைப்பாளர்களை நேற்றைய தினம் இரவு ஜனாதிபதி மாளிகையில் சந்தித்து கலந்துரையாடிய போதே ஸ்ரீலங்கா ஜனாதிபதி இந்தத் தகவலைத் கூறியிருக்கின்றார். ஸ்ரீலங்காவில் தற்போது நடைமுறையிலுள்ள விகிதாசார தேர்தல் முறைமைய மாற்றி புதிய தேர்தல் முறைமையை அறிமுகப்படுத்துவதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுத்துவரும் நிலையிலேயே 2017 ஆம் ஆண்டு...
தலைவர் அமிர்தலிங்கம் அவர்களின் 89ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு வடக்கு மாகாண பாடசாலை மாணவர்களுக்கு இடையிலான பேச்சுப் போட்டி – 2016. போட்டி நிபந்தனைகள் கீழ்ப்பிரிவு – தரம் 6, 7, 8 (3 நிமிடங்கள்) 1. தமிழர் தாயகத்தின் தங்கத் தலைவன் 2. மன்னுயிர் வாழ தன்னுயிர் தந்த தலைவன் 3. அமிர்தலிங்கம் அமிழ்தினும் இனியவன் மத்தியபிரிவு – தரம் 9, 10, 11 (5 நிமிடங்கள்) 1. தந்தை செல்வாவின் ஆணையின் தளபதி அமிர்தலிங்கம் 2. ஈழத் தமிழரின் இனிய காவலன்...
மத்திய மாகாண கல்வி அமைச்சின் 60 இலட்சம் ரூபா நிதி ஒதுக்கீட்டில் நிர்மாணிக்கப்படவுள்ள கொத்மலை குமார தசாநாயக்க வித்தியாலயத்தின் கட்டிடத்திற்கான அடிக்கல் நாட்டும் விழா பாடசாலை அதிபர் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மத்திய மாகாண ஆளுநர் கௌரவ நிலூக்கா ஏக்கநாயக்க, மத்திய மாகாண விவசாய, இந்து கலாசார மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அமைச்சர் மருதப்பாண்டி ராமேஸ்வரன், மத்திய மாகாண சபை உறுப்பினர் சுமார தசாநாயக்க மற்றும் கொத்மலை பிரதேச சபை...
மலையக தேயிலை மலைகளில் குளவி கொட்டுக்களில் பாதிப்புக்குள்ளாகும் தொழிலாளர்கள் அவ்வாறான சந்தர்ப்பங்களில் தன்னை  பாதுகாத்தல் மற்றும் குளவி கூடுகளை   பாதுகாப்பாக அகற்றுதல்  போன்ற விழிப்புணர்வு பயிற்சி திட்டம் மஸ்கெலியா பிரவுன்ஸ்வீக் தோட்டத்தில் 17.07.2016 ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்றது. பேராதெனிய பூச்சிகள் பாதுகாப்பு திணைக்களத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந் நிகழ்வில் தேன்பூச்சிகளில் தேன் எடுப்பது போன்ற பயிற்சிகளும் வழங்கப்பட்டது. மஸ்கெளியா காட்மோர் பிரவுன்ஸ்வீக் பிரதேச தோட்டங்களை சேர்ந்த தொழிலாளர்களுக்கு மேற்படி பயிற்சிகள் வழங்கப்பட்டது. மலையகம் தழுவிய...