எனக்கு சினிமாவில் நடிக்கும் எண்ணம் இல்லை என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா அதிரடியாக தெரிவித்துள்ளார். மகளிர் இரட்டையர் வரிசையில் அசத்தி வரும் இந்திய டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா, Ace against Odds என்ற பெயரில் சுயசரிதை புத்தகத்தை வெளியிட்டுள்ளார். இந்நிலையில் இது தொடர்பாக பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட போது அவரிடம் சினிமா குறித்து கேள்வி கேட்கப்பட்டது. இதற்கு பதிலளித்த சானியா மிர்சா, சினிமாவில் நடிக்க முடியும் என்ற நம்பிக்கை...
இங்கிலாந்தை அதன் சொந்த மண்ணில் வீழ்த்திய பாகிஸ்தான் அணி வீரர்கள் லார்ட்ஸ் மைதானத்தில் சல்யூட் அடித்து தங்களது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் செய்து 4 டெஸ்ட், 5 ஒருநாள் மற்றும் ஒரு டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. பாகிஸ்தான் அணி வீரர்கள் சரியாக உடற்பயிற்சி செய்வதில்லை, ஒழுக்கத்தை கடைபிடிப்பதில்லை மற்றும் உடற்தகுதி பிரச்சனை போன்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தது. இதனால் இந்த தொடரில் இடம்பெற்றுள்ள வீரர்கள்...
வற் வரியின் திருத்தச் சட்ட மூலம் இன்று (20) பாராளுமன்ற விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்படாது என பாராளுமன்ற பிரதி பொதுச்செயலாளர் நீல் இத்தவல தெரிவித்துள்ளார். நாளை (21) இடம்பெறவுள்ள கட்சி தலைவர்களின் சந்திப்பின் பின்னர் விவாதம் தொடர்பில் தீர்மானிக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார். இன்றைய தினம் வற் வரி திருத்தச்சட்டமூலம் தொடர்பில் பாராளுமன்ற விவாதம் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், உயர் நீதிமன்றத்தில் வற் வரிக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டதால் இது தொடர்பான...
  மிக் தாக்­குதல் விமான கொள்­வ­னவு தொடர்­பான கொடுக்கல் வாங்­கல்கள் சம்­பந்­தப்­பட்ட மூல ஆவணம் காணாமல் போனமை சம்­பந்­த­மாக விமா­னப்­ப­டையின் சட்­டப்­ப­ணிப்­பா­ள­ரிடம் விட­யங்­களை கேட்­ட­றிந்த கொழும்பு கோட்டை நீதிவான் லங்கா ஜய­ரத்ன, எதிர்­வரும் 25ஆம் திகதி இது சம்­பந்­த­மாக விப­ர­மான அறிக்­கையை தாக்கல் செய்­யு­மாறு நேற்­று­முன்­தினம் உத்­த­ர­விட்­டுள்ளார். வழக்­கிற்கு தேவை­யான முக்­கிய ஆவ­ண­மான மிக் விமான கொள்­வ­னவு தொடர்­பான மூல ஆவ­ணங்­களை சட்ட ரீதி­யாக எவ­ரு­டைய பொறுப்பில் வைக்­கப்­பட்­டி­ருந்­தன. அவை சரி­யான முறையில்...
  யாழ்ப்பாணப் பல்கலைக்கழக விஞ்ஞானபீடத்தில் கடந்த 16ஆம் திகதி இடம்பெற்ற மோதல் சம்பவம் தொடர்பில், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் ரி. சிசிதரன் யாழ்ப்பாணம் நீதவான் நீதமன்றத்தில் இன்று புதன்கிழமை (20) ஆஜராகினார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன், வணிக முகாமைத்துவபீட பீடாதிபதி ரி. வேல்நம்பி மற்றும் விரிவுரையாளர்கள் ஊடாக அவர் நீதிமன்றத்தில் ஆஜராகினார். இவரை நேற்றுச் செவ்வாய்க்கிழமை (19) இரவு விசாரணைக்கு அழைத்த கோப்பாய் பொலிஸார்,...
ஐரோப்பிய ஒன்றியத்துக்கான மீன் ஏற்றுமதித் தடை அண்மையில் நீக்கப்பட்ட நிலையில், ஐரோப்பிய நாடுகளின் மீன் தேவைக்கு ஏற்றளவுக்கு, மீன்களை விநியோகிக்க முடியாத நிலையில் இருப்பதாக சிறிலங்கா தெரிவித்துள்ளது. ஐரோப்பிய நாடுகள் 1000 மெட்ரிக் தொன் மீன்களை கோரியுள்ளன. ஆனால் உள்ளூரில் மீன்களின் கையிருப்பு குறைவாக இருப்பதால், இந்த தேவையை நிறைவு செய்ய முடியாதிருப்பதாக, சிறிலங்காவின் கடற்றொழில் அமைச்சர் மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார். ஐரோப்பிய ஒன்றியத்தின் தடை நீக்கப்பட்ட பின்னர், 200 மெட்ரிக்...
  சிங்கப்பூரிற்கு 3 நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டிருந்த பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்றிரவு 11.45 மணிக்கு மணியளவில் நாடு திரும்பியுள்ளார். பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்க, அமைச்சர்கள் மங்கள சமரவீர, மலிக் சமரவிக்ரம, பிரதி அமைச்சர் துஷ்மன்த மித்ரபால ஆகியோர் இந்த விஜயத்தில் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
  சிறிலங்காவில் எதிர்கால முதலீடுகள் மற்றும் திட்டங்கள் தொடர்பாக சீனாவுக்கும் சிறிலங்காவுக்கும் இடையில் பேச்சுக்கள் நடத்தப்பட்டுள்ளன. இரண்டு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார இராஜதந்திரம் தொடர்பாக, சீனத் தூதுவர் ஷியான் லியாங்குடன் நீண்ட- பயனுள்ள பேச்சுக்களை நடத்தியிருப்பதாக, சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார். விரைவில் ஆரம்பிக்கப்படவுள்ள முதலீடுகள், திட்டங்கள் தொடர்பாகவும், ஏனைய வழிமுறைகள் தொடர்பாகவும் பேச்சு நடத்தப்பட்டது என்று சிறிலங்காவின் பிரதி வெளிவிவகார அமைச்சர் ஹர்ஷ டி சில்வா...
  யாழ். பல்கலைக்கழகத்தில் கடந்த சனிக்கிழமை மாணவர்களுக்கிடையில் இடம்பெற்ற மோதல் தொடர்பாக தேவையான ஒழுக்காற்று நடவடிக்கையை பல்கலைக்கழக நிர்வாகமே மேற்கொள்ளும் என்றும், அதில் அரசாங்கம் தலையிடாது என்று சிறிலங்கா அமைச்சர் அனுரபிரியதர்சன யாப்பா தெரிவித்தார். நேற்று யாழ்.பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கலந்துரையாடலின் பின்னரே அவர் இவ்வாறு தெரிவித்தார். அமைச்சர்கள் டி.எம்.சுவாமிநாதன், அனுர பிரியதர்சன யாப்பா மற்றும், பிரதி அமைச்சர் கருணாரத்ன பரணவிதான ஆகியோர் நேற்று யாழ். பல்கலைக்கழகத்தில் நடந்த கலந்துரையாடலில் பங்கேற்றனர். துணைவேந்தர் வசந்தி அரசரட்ணம்...
உரிய வீசா அனுமதியில்லா 12000 வெளிநாட்டவர்கள் இலங்கையில் இருப்பதாக உள்விவகார மற்றும் வடமேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் எஸ்.பி. நாவீன்ன கொழும்பு பத்திரிகையொன்றுக்குத் தெரிவித்துள்ளார். வீசா இன்றி சுமார் பன்னிரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட வெளிநாட்டவர்கள் இலங்கையில் சட்டவிரோதமாக முறையில் தங்கியிருக்கின்றனர். சீனா, பாகிஸ்தான் மற்றும் பங்களாதேஸ் பிரஜைகளே இவ்வாறு சட்டவிரோதமான முறையில் அதிகளவில் தங்கியிருக்கின்றார்கள். இவ்வாறு சட்டவிரோதமான முறையில் வெளிநாட்டவர்கள் தங்கியிருக்க அனுமதியில்லை. இந்த அனைவரையும் கைது செய்து கூடிய விரைவில் நாடு கடத்த நடவடிக்கை...