நுண்ணறிவில் சிறந்த விஞ்ஞானியான அல்பட் என்ஸ்டைனின் சாதனை இலங்கை வம்சாவளி சிறுமியான நிஷி உக்லேயால் முறியடிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தின் மென்சா நிறுவனத்தினால் முன்னெடுக்கப்பட்ட நுண்ணறிவுத் தேர்வில் 10 வயது சிறுமியான நிஷி உக்கலே கலந்துகொண்டு சாதனையை முறியடித்துள்ளார். குறித்த இச்சிறுமி தனது முதலாவது தேர்வில் 162 புள்ளிகளையும் இரண்டாவது தேர்வில் 142 புள்ளிகளை பெற்றுக்கொண்டுள்ளார். இவரின் அறிவுத்திறமையைக்கண்டு வியந்த அவ் அமைப்பினர் இச்சிறுமியை அவர்களின் அமைப்பில் இணைத்துக்கொண்டுள்ளனர். இச்சிறுமி அல்பட் அய்ன்ஸ்டைனை விட 2 புள்ளிகள்...
மட்டக்களப்பு மாவடிவேம்பிலுள்ள உளநல அபிவிருத்தி நிலையத்தில் பல்தேவை தொழில்வழி கட்டிடத் தொகுதி நிர்மாணத்திற்கு அடிக்கல் நாட்டும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) நடைபெற்றுள்ளது. அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகராலயத்தின் நேரடி உதவித் திட்டத்தின் கீழ், 64 இலட்ச ரூபாய் செலவில் நவீன வசதிகளுடன் நிர்மாணிக்கப்படவுள்ள இந்த கட்டிடத் தொகுதியின் மூலம், ஒரே நேரத்தில் 50 இற்கு மேற்பட்டோர் தொழிற்பயிற்சிகளைப் பெற்றுக் கொள்ள முடியும். அடிக்கல் நாட்டும் நிகழ்வில் அவுஸ்திரேலிய உயர் ஸ்தானிகர் பிரைசி ஹட்செஸன்...
  ஊர்காவற்றுறை ஆதார வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர் ஒருவரிடம் சேஷ்டை செய்ததாக கூறப்படும் மூவரை ஊர்காவற்துறை பொலிசார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, வைத்தியசாலையில் கடமையாற்றும் பெண் ஊழியர், புதன்கிழமையன்று வைத்தியசாலைக்கு கடமைக்கு சென்றுகொண்டிருந்த போது, வீதியில் நின்றுகொண்டிருந்த மூவர் அப்பெண்ணிடம் சேஷ்டை புரிந்துள்ளனர். அவர்களிடமிருந்து தப்பித்து, வைத்தியசாலைக்கு சென்ற அப்பெண்கள் வீதியில் தமக்கு நேர்ந்ததை வைத்தியசாலை பணிப்பாளரிடம் தெரிவித்துள்ளார். பணிப்பாளர் உடனடியாக இதுதொடர்பில், பொலிஸாரின் கவனத்துக்கு கொண்டுவந்ததையடுத்து விரைந்துசெயற்பட்ட பொலிஸார்,...
  தற்போது நடைமுறையிலுள்ள பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு பதிலாக, எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் புதிய பாதுகாப்பு சட்டமூலத்தை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி தெரிவித்துள்ளார். புதிய சட்டமூலத்திற்கான நடவடிக்கைகள், சட்டமா அதிபர் திணைக்களத்தினூடாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக தெரிவித்துள்ள அவர், எதிர்வரும் ஜூன் மாத இறுதியில் அதன் முதற்கட்ட வரைபை அறிமுகப்படுத்த எதிர்பார்ப்பதாக மேலும் குறிப்பிட்டார். தற்போதைய சட்டமூலத்திலுள்ள குறைபாடுகள் நிவர்த்திக்கப்பட்டு, தற்போதைய நிலைமைக்கு ஏற்றவகையில் புதிய சட்டமூலம் அறிமுகப்படுத்தப்படுமெனவும் தெரிவித்துள்ளார். நாட்டில்...
  கடந்த ஜனாதிபதி தேர்தலுக்கு முதல் நாள், மஹிந்தவின் உயரதிகாரி ஒருவரின் சாரதியூடாக சுமார் 1260 கோடி ரூபாய் பணம் வங்கியிலிருந்து காசோலை மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டதாகவும், விசாரணைகளை மூடி மறைக்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் வழங்கப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்கள கேட்போர் கூடத்தில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். இதுகுறித்து அமைச்சர் மேலும் தெரிவிக்கையில்- ”தான் ஊழல் மோசடியில் ஈடுபட்டமை நிரூபிக்கப்பட்டால், தன்னைத்தானே...
வெள்ளவத்தை புகையிரத நிலையத்துக்கு அருகில் நேற்று புகையிரதத்தில் மோதுண்டு உயிரிழந்த இளைஞர் மற்றும் யுவதியும் தற்கொலை செய்து கொண்டுள்ளதாக தெரியவந்துள்ளது. மாத்தறையில் இருந்து மருதானை நோக்கி பயணித்த புகையிரதத்திலேயே நேற்று இவர்கள் மோதுண்டு உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. புகையிரதம் வரும் தண்டவாளத்தில் இருந்து சுமார் 50 மீட்டர் தூரத்தில் இவர்கள் இருவரும் தண்டவாளம் நடுவில் வந்து நின்றுள்ளதாகவும், தற்கொலை செய்து கொள்வதற்கே அவர்கள் அங்கு வந்துள்ளதாகவும் புகையிரத சாரதி தெரிவித்துள்ளார். பின்னர் புகையிரதத்தை நிறுத்த...
உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரித்தானியா சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, இன்று (வியாழக்கிழமை) லண்டலின் நடைபெறும் ஊழல் எதிர்ப்பு மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றவுள்ளார். இதன்போது, ஊழலுக்கு எதிராக இலங்கையில் முன்னெடுக்கப்படும் நடவடிக்கைகள், எதிர்கால செயற்பாடுகள் பற்றி ஜனாதிபதி தெளிவுபடுத்துவாரென எதிர்பார்க்கப்படுகிறது. குறித்த மாநாட்டையடுத்து, இன்று மாலை பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரனை ஜனாதிபதி சந்தித்து இருதரப்பு பேச்சுவார்த்தையில் ஈடுபடவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய விஜயத்தையடுத்து, நாளை இந்தியாவுக்கான விஜயத்தை ஆரம்பிக்கும் ஜனாதிபதி மைத்திரி, அங்கு...
அஸ்ஸாம் மாநில மருத்­து­வ­ம­னை ஒன்றில் 3 வயது சிறு­வ­னுக்கு சிகிச்­சையின் போது அளிக்­கப்­பட்ட இரத்­தத்தால் எய்ட்ஸ் நோய் பர­வி­யுள்­ளமை பெரும் அதிர்ச்­சியை ஏற்­ப­டுத்­தி­யுள்­ளது. கவு­காத்தி அரசு மருத்­து­வ­ம­னையில் கடந்த வருடம் ஏப்ரல் மாதம், குறித்த குழந்தை உடலில் 40 சத­வி­கித தீக்­கா­யங்­க­ளுடன் சிகிச்­சைக்­காக அனு­ம­திக்­கப்­பட்­டது. அங்கு 5 மாதங்கள் நடைபெற்ற சிகிச்­சையை அடுத்து கடந்த வருடம் ஒக்­டோபர் மாதம் 3ஆம் திகதி மருத்­து­வ­ம­னையில் இருந்து சிகிச்சை முடிந்து வீடு திரும்­பிய...
இறக்குவானை – கவுடுவாவ பிரதேசத்தில் இன்று அதிகாலையில் இடம்பெற்ற பஸ் விபத்தில் ஒருவர் பலியானதுடன் 17 பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பயணிகளை ஏற்றிவந்த பஸ்ஸொன்றும் கொள்கலன் லொறி ஒன்றும் நேருக்கு நேர் மோதியதனாலேயே குறித்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். குறித்த விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை இறக்குவானைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கிளிநொச்சி – பூநகரி, பள்ளிக்குடா பகுதியில் ஸ்ரீலங்கா கடற்படைக்கென காணி சுவீகரிக்கும் முயற்சி பொதுமக்களின் எதிர்ப்பினால் கைவிடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்றதாக அங்கிருக்கும் மக்கள் தெரிவித்தார். பள்ளிக்குடா பிரதேசத்தில் ஸ்ரீலங்கா கடற்படையின் தேவகளுக்கு எனத் தெரிவித்து 1/2 ஏக்கர் காணி சுவீகரிக்கும் நோக்கில் நில அளவீட்டாளர்களுடன் கடற்படையினர் இன்று காலை குறித்த பகுதிக்குச் சென்றுள்னர். எனினும் பிரதேச மக்கள் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்ததை அடுத்து கடற்படையினர் தமது...