குழந்தையின் அழுகுரலினை வைத்தே அக்குழந்தை என்ன காரணத்திற்காக அழுகிறது என்பதனை கண்டுபிடிக்கும் புதிய மொபைல் அப்ளிகேஷன்(Mobile Apps) அறிமுகமாகியுள்ளது.The Infant Cries Translator என்ற இந்த அப்ளிகேஷனில் இதுவரை 2 லட்சத்திற்கும் மேற்பட்ட குழந்தைகளின் அழுகை சத்தங்கள், மற்றும் அக்குழந்தைகள் அழும் பல்வேறு நேரங்கள் சேகரித்துவைக்கப்பட்டுள்ளன. அதனை அடிப்படையாக கொண்டு இந்த அப்ளிகேஷன், அக்குழந்தை எதற்காக அழுகிறது என்பதை கண்டுபிடித்து விடுகிறது. குழந்தைகள் பசியால் அழுகிறதா, தூக்கத்திற்காக அழுகிறதா அல்லது ஏதேனும்...
கொழும்பு காலி வீதி மற்றும் ஆர். ஏ. டி மெல் மாவத்தை (டுப்ளிகேசன் வீதி) ஆகிய பாதைகளின் இரு மருங்கு மற்றும் குறித்த வீதிகள் தொடர்புபடும் அனைத்து கிளை வீதிகளின் இரு மருங்குகளிலும் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு கட்டணம் அறவிடுவதற்கு கொழும்பு மாநகர சபை தீர்மானித்துள்ளது. அதற்கமைய தெஹிவளை மேம்பாலம் தொடக்கம் கலதாரி சுற்றுவட்டம் வரையும், ஆர். ஏ. டி மெல் மாவத்தையில் தம்மாராம வீதி தொடக்கம் லிபேட்டி சுற்றுவட்டம் வரையும்...
கடந்த ஆண்டினை காட்டிலும் இந்த ஆண்டு திடீர் விபத்துக்களின் எண்ணிக்கை உயர்வடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. புத்தாண்டு காலத்தில் கடந்த ஆண்டை விடவும் இந்த ஆண்டில் அதிகளவான விபத்துக்கள் இடம்பெற்றுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பீடு செய்யும் போது இந்த ஆண்டில் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் திடீர் விபத்து காரணமாக சிகிச்சை பெற்றுக் கொண்டவர்களின் எண்ணிக்கை 20 வீதத்தினால் உயர்வடைந்துள்ளது என வைத்தியசாலையின் பணிப்பாளர் அனில் ஜாசிங்க தெரிவித்துள்ளார். இதன்படி கடந்த 30 மற்றும் 31ம் திகதிகளில்...
தெமடகொட பகுதியில் வைத்து இளைஞனொருவன் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பில், கைதான 8 சந்தேக நபர்களும் எதிர்வரும் 4 ஆம் திகதி அடையாள அணிவகுப்பில் நிறுத்தப்பட இருப்பதாகவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்தது. இச்சம்பவம் தொடர்பில் 11வயது சிறுமியின் வாக்குமூலமும் நேற்று சட்ட மா அதிபரிடம் கையளிக்கப்பட்டுள்ளதாகவும், கொழும்பு மாவட்ட ஐ.தே.க பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரவுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பது குறித்து சட்டமா அதிபரின் ஆலோசனையை கோரியிருப்பதாகவும் பொலிஸ்...
இலங்கை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்தினால் வழங்கப்படும் கடவுச்சீட்டுக்கான கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. நேற்று முதல் அமுலுக்கு வரும் வகையில் கட்டண உயர்வு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக குடிவரவு குடியகல்வுத் திணைக்களப் பேச்சாளர் லக்ஸான் சொய்சா தெரிவித்துள்ளார். அனைத்து நாடுகளுக்குமான வெளிநாட்டுக் கடவுச்சீட்டு மற்றும் 16 வயதுக்கும் குறைந்த சிறுவர்களுக்கான அனைத்து நாடுகளுக்குமான கடவுச்சீட்டு ஆகியனவற்றின் கட்டணங்கள் இவ்வாறு உயர்த்தப்பட்டுள்ளன. அனைத்து நாடுகளுக்குமான சாதாரண சேவை கடவுச் சீட்டு கட்டணம் 2500 ரூபாவிலிருந்து 3000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளது. ஒருநாள் சேவையில...
ஜனாதிபதி ஆணைக்குழுவிற்கு சாட்சியமளிப்போருக்கு அழுத்தம் கொடுத்தால் சிறைத்தண்டனை விதிக்கப்படும் என பாரிய நிதி மோசடிகள் தொடர்பான ஜனாதிபதி ஆணைக்குழுவின் செயலாளர் லெசில் டி சில்வா தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஆணைக்குழுவின் எதிரில் சாட்சியமளிக்கும் சாட்சியாளர்களை அச்சுறுத்தி அழுத்தம் கொடுப்போரை சட்ட ரீதியாக தண்டிக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரமுண்டு. இவ்வாறு அழுத்தம் பிரயோகிப்போருக்கு சிறைத்தண்டனை பெற்றுக்கொடுக்க ஆணைக்குழுவிற்கு அதிகாரம் காணப்படுகின்றது. தமக்கு பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு வருவதாக ஆணைக்குழுவில் சாட்சியமளித்த சிலர் முறைப்பாடு செய்துள்ளனர். இவ்வாறான சம்பவங்கள் தொடர்பில்...
2016ம் ஆண்டு யாழ். குடாநாடு, குற்றமில்லாத சமாதானமான மாவட்டமாக மாற்றுவதற்கு நீதிபதிகள் பிரகடனம் செய்துள்ளதாக யாழ். உயர் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் தெரிவித்தார். நேற்று வெள்ளிக்கிழமை யாழ். நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்ற 2016ம் ஆண்டிற்கான அரச உத்தியோகத்தர்களுக்கான சத்திய பிரமாண நிகழ்வின் பின்னர் உத்தியோகத்தர்கள் மத்தியில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், அரச உத்தியோகத்தர்களாகிய நீங்கள் மாவட்ட நீதிபதிகள் மற்றும் நீதிவான்களுக்கான ஒத்துழைப்புக்கள் வழங்கப்பட வேண்டும்....
காணாமல்போனோர் தொடர்பில் விசாரணை நடத்திவரும் மக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை அடுத்தவாரம் சந்திக்கவுள்ளது. ஆணைக்குழுவின் செயற்பாடு தொடர்பில் கலந்துரையாடும் நோக்கிலேயே மேற்படி குழு ஜனாதிபதியைச் சந்திக்கவுள்ளது. இதன்போது தமது ஆணைக்குழுவின் பதவி காலத்தை மேலும் ஆறுமாத காலத்துக்கு நீடிக்குமாறு ஜனாதிபதியிடம் ஆணைக்குழுவினர் கோரிக்கை விடுப்பர் என அறியமுடிகின்றது. பரணகமகுழுவின் பதவிக் காலம் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 16ஆம் திகதியுடன் முடிவடைகின்றது. அதன் பின்னர் மேற்படி ஆணைக்குழுவின் பதவி காலத்தை...
நாட்டின் சுகாதாரத் துறையை மேம்படுத்துவதற்கு 50 மில்லியன் அமெரிக்க டொலர்களை நன்கொடையாக வழங்குவதற்கு சீன அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக சுகாதார மற்றும் சுதேச மருத்துவ அமைச்சு அறிவித்துள்ளது. இந்த நிதியில் பெரும்பாலான பகுதி சுதேச மருத்துவத்துறையின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் மற்றைய பகுதி அரச வைத்தியசாலைகளின் அபிவிருத்தி உட்பட ஏனைய சுகாதார துறைகளின் மேம்பாட்டுக்கு பயன்படுத்தப்படவுள்ளதாகவும் அமைச்சு தெரிவித்துள்ளது. சீன நன்கொடை நிதியினைப் பயன்படுத்துவதற்கான செயற்திட்டமொன்றை வரைந்து தருமாறு சுகாதார அமைச்சர், சுகாதார அமைச்சின்...
மட்டக்களப்பு ஏறாவூர் பற்று பிரதேச செயலக பிரிவுக்குப்பட்ட சித்தாண்டி -1 மற்றும் மாவடிவெம்பு ஆகிய கிராம சேவகர் பிரிவுக்குப்பட்ட பொது மக்களின் குடியிருப்பு பகுதிகளில் அத்துமீறி உள் நுளைந்த ஒரு குழுவினர் அங்கு அமைத்துள்ள குடிசைகள் பலவற்றை உடைத்து நாசமாக்கியுள்ளனர். அதுமட்டுமின்றி, குடியிப்புக்களில் உள்ள பயிர்களையும் வெட்டி பிடிங்கி எரிந்ததுடன் வேலிகளையும் பிடிங்கி எரிந்துள்ள சம்பவமொன்று நேற்று முந்தினம் வியாழக்கிழமை நடைபெற்றுள்ளது. குறித்த பகுதி தனக்கு சொந்தமானது என்று உள் நுளைந்த...