இலங்கையிலுள்ள எந்தவொரு முஸ்லிம் பிரஜையும் ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் தொடர்பு வைத்தவர்கள் அல்லர் என தபால், தபால் சேவை மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் அப்துல் ஹலீம் தெரிவித்துள்ளார். அரசியல் இலாபம் பெறும் நோக்கில் சிலர் வெளியிடும் அறிவிப்புக்கள் ஏற்றுக் கொள்ள முடியாதவை எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐ.எஸ். அமைப்புடன் தொடர்பு வைத்திருந்ததாக கூறப்பட்ட இலங்கையர்கள் குறித்து கடந்த காலங்களில் தகவல்கள் வெளியிடப்பட்டன. இருப்பினும், அந்த அமைப்பிற்கு இலங்கைக்குள் செயற்படுவதற்கு எந்த அவகாசமும்...
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையினுடைய புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அறிவகம் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்...
மன்னார் மறைமாவட்டத்தின் புதிய ஆயரை தெரிவு செய்வதற்காக நால்வரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மன்னார் ஆயர் இல்ல உள்ளக தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன் திடீர் சுகவீனமுற்ற மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு யோசேப் ஆண்டகை கொழும்பு வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
மேலதிக சிகிச்சைக்காக சிங்கபூரிற்கு அழைத்து செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. கடந்த மூன்று மாதங்களாக சிங்கபூரில் சிகிச்சை பெற்று வந்த மன்னார் மறை...
கடந்த காலத்தில் அதிகாரத்தில் இருந்த அனைத்து ஆட்சியாளர்களும் ஒவ்வொரு வகையில் நாட்டுக்கு நல்லதையே செய்துள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். 2016ம் ஆண்டின் புதுவருடப் பிறப்பையொட்டி பொதுமக்களுடன் வாழ்த்துக்களைப் பரிமாறிக் கொள்ளும் நிகழ்வு நேற்று பொலன்னறுவையில் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கண்டவாறு வலியுறுத்தியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்டுள்ள அவர், இலங்கை சுதந்திரம் அடைந்தது முதல் இந்நாட்டில் இரண்டு கட்சிகளின் தலைமையிலான அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு...
இவர்கள் எங்கே…? இறுதி யுத்தத்தில் சிறைப்பிடிக்கப்பட்ட தமிழர்கள் எங்கே…? சிங்களமும் ஐநாவும் பொறுப்பு கூறுமா…?
இராணுவத்திடம் சிக்கி அவஸ்தைப்பட்ட வி.புலிகளின் வெளிவரா ஆதாரம்…..
கடைசி நாளான 2009 மே 17ம் திகதி வட்ட வாய்க்கால் பகுதியில் இராணுவத்திடம் சரணடைந்தனர் அவர்கள் யார் எனும் விடயம் மாமமாக உள்ள நிலையில் கடத்தப்பட்டு காணாமற்போகச் செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட தடுத்து வைக்கப்பட்டிருந்த கிரிதல இராணுவ...
பிலிப்பைன்ஸ் நாட்டில் தீய ஆவிகளை விரட்ட பொதுமக்கள் ஒன்று கூடி பட்டாசு கொளுத்தியதில் ஒருவர் உயிரிழந்து, ஆயிரம் குடிசைகளும் தீக்கிரையான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.பிலிப்பைன்ஸ் நாட்டில் புத்தாண்டு கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக துரதிர்ஷ்டத்தை துரத்தும் சடங்கு ஒன்றை நடத்தி வருகின்றனர்.
இந்த சடங்கில் அதிக சத்தம் தரும் பட்டாசுகளை கொளுத்தி அந்த ஆண்டில் தொடர்ந்து வந்த துரதிர்ஷ்டத்தை பொதுமக்கள் துரத்தி வந்துள்ளனர்.
இந்த ஆண்டும் வழமையாக அரசின் அறிவுத்தல்களுக்கு இடையே கோலாகலமாக...
அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராய்வதற்கான தமிழ் மக்கள் பேரவையின் உப குழுவில் வடமாகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் சார்பாக இலங்கையின் முன்னாள் சட்ட மா அதிபரும் விடுதலைப்புலிகளின் அரசியல் விவகார குழுவின் உறுப்பினராக பணியாற்றியவருமான சிவா பசுபதி நியமிக்கப்படுவார் என்று நம்பகமாக அறியவருகிறது.
தமிழ் மக்கள் பேரவையின் 2 ஆவது கூட்டம் கடந்த வாரம் யாழ்ப்பாணத்தில் நடைபெற்றபோது அரசியல் தீர்வு சம்பந்தமாக ஆராயும்பொருட்டு அமைக்கப்பட்ட உபகுழுவில் 15 பேர் இடம்பெறுவர் என்றும்...
புதிதாகப் பெறப்படும் கடவுச் சீட்டுக்கான கட்டணங்கள் நாளை முதல் அதிகரிக்கப்படவுள்ளன என குடிவரவு குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் நிஹால் ரணசிங்க தெரிவித்தார்.
வரவு செலவு திட்ட யோசனைக்கு அமைய கட்டண அதிகரிப்பு முன்னெடுக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
அதற்கமைய, ஒரு நாள் சேவையூடாக பெற்றுக் கொள்ளப்படும் அனைத்து நாடுகளுக்குமான கடவுச் சீட்டுக்கான கட்டணமாக 10,000 ரூபா அறவிடப்படவுள்ளது.
இதுவரையில் குறித்த கடவுச் சீட்டுக்கு 7,500 ரூபா பணமே அறவிடப்பட்டது.
மேலும் சாதாரண சேவையில் அனைத்து நாடுகளுக்குமான...
குவைத் நாட்டில் பணிபுரிந்துவரும் தனது மனைவியை இலங்கைக்கு அழைத்து வருவதற்கு உதவுமாறு நுவரெலியா, நானுஓயா லென்டல் தோட்டத்தைச் சேர்ந்த பெருமாள் சசிக்குமார் என்பவர், முகவர் நிலையத்தை கோரியுள்ளார்.
மேற்படி நபரின் மனைவியான வனிதா (வயது 26) என்பவர், கணவரின் பாதுகாப்பில் தனது இரு பிள்ளைகளையும் விட்டுவிட்டு, ஹட்டனிலுள்ள முகவர் நிலையமொன்றினூடாக 2015 மார்ச் 13ஆம் திகதியன்று பணிப்பெண்ணாக குவைத்துக்குச் சென்றுள்ளார்.
அங்குச் சென்ற அவர் பல்வேறு பிரச்சினைகளை எதிர்கொண்டுள்ளதாகத் தனது கணவரிடம்...
எகிப்து நாட்டில் நைல் நதியில் படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளதில் அதில் பயணம் செய்த 18 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
விபத்துக்குள்ளான படகு கப்ர் எல்-ஷெர் ஷெயிக் மற்றும் பெஹிர ஆகிய இரண்டு நகரங்களுக்கு இடையே போக்குவரத்தில் ஈடுபட்டு வந்தது.
தலைநகர் காய்ரோவின் வடக்கு பகுதியில் இருந்து 1470 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கப்ர் எல்-ஷெய்க் மாகாணத்தில் இந்த விபத்து ஏற்பட்டது. படகில் சுமார் 22 பேர் பயணம் செய்ததாக எகிப்து...