யாழ்ப்பாண வாசிகள் அனைவரும் எதிர்வரும் ஐந்து வருடங்களில் கடல் நீரைக் குடிநீராகப் பயன்படுத்தும் அவலம் நேரிடும் என்றும் யாழ். குடாநாடு, கடலுக்குள் மூழ்கிவிடும் அபாயம் தோன்றுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதெனவும் விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். விஞ்ஞானிகளால் விடுக்கப்பட்டுள்ள இந்த எச்சரிக்கை தொடர்பில் வட மாகாண மக்களைத் தெளிவுபடுத்திய வட மாகாணசபையின் விவசாயத்துறை அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன், யாழ்ப்பாண மக்கள், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்வார்களாயின் மேற்கண்ட அபாயத்திலிருந்து தப்பிக்க முடியும் என்றும்...
தமிழ் மக்களுக்கு யாரும் துரோகம் இழைத்துவிடமுடியாது. மக்களுக்கான அரசியல் தீர்வினை பெறும் விடையத்தில் தமிழ்த் எதிர்க் கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெளிவான பார்வையுடன் இருக்கிறார் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கிளிநொச்சி மாவட்ட கிளையினுடைய புத்தாண்டு ஒன்றுகூடல் நிகழ்வு இன்று கிளிநொச்சியில் அறிவகம் பணிமனையில் இடம்பெற்றது. இந்நிகழ்வானது கட்சியின் கிளிநொச்சி மாவட்ட கிளையின் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில்...
2015ம் ஆண்டுக்கான பன்முகப்படுத்தப்பட்ட நிதி ஒதுக்கீட்டில் சுமார் ஒன்பது இலட்சத்து ஐம்பாதாயிரம் ரூபா நிதியானது (950,000.00)வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களால் கிராம அபிவிருத்தி திணைக்களத்தினூடாக பயன்படுத்தப்பட்டுள்ளது. இதில் முல்லைத்தீவு மாவட்டத்தின் ஐந்து பிரதேசங்களிலும் உள்ள 42 சங்கங்கள் உள்வாங்கப்பட்டு அவற்றுக்கு தலா 25 நாற்காலிகள் வழங்கப்பட்டதோடு ஐம்பாதாயிரம் ரூபாய் நிதியானது (50,000.00) தையற்பயிற்சி பெறும் மாணவிகளின் பயிற்சித்துணிக்கொள்வனவுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இம்முன்னெடுப்பு தொடர்பில் வடமாகாணசபை உறுப்பினர்...
எவனோ ஒருவன் மன பலத்தை கொண்டிருக்கின்றோனோ தனது இலட்சத்திற்கு இறுதி வரை போராடிகின்றவனே வெற்றி பெறுவான் - தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் தமிழரசு கட்சியின் தலைவருமான மாவை சேனாதிராஜா தெரிவிப்பு மலையக மக்கள் முன்னணியின் தலைவர் அமரர்.பெரியசாமி சந்திரசேகரனின் 6 வது சிரார்த்த தினம் 01.01.2016 அன்று ஹட்டன் ஸ்ரீ கிருஷ்ணபவன் மண்டபத்தில் நடைபெற்றது.(க.கிஷாந்தன்) அகிம்சை போராட்டம் அடக்கி ஒடுக்கப்பட்ட போது அது ஆயுத போராட்டமாக மாறியது. அந்த...
  இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்து விடுவிக்கப்பட்ட பளை, வீமன்காமம் வடக்குப் பகுதியதில் அமைந்திருந்த இராணுவத்தின் பாரிய படைமுகாமிற்குள் வதை கூடங்கள் இருந்தமைக்கான தடயங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. குறித்த படைமுகாமிற்குள் இருந்த மக்களுடைய வீடுகளுக்குள்ளே மாற்றங்கள் செய்யப்பட்டே இவ்வாறான வதை கூடங்களாக பயன்படுத்தப்பட்டமை கண்டறியப்பட்ட தடயங்கள் ஊடாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. வலி.வடக்கு இராணுவ உயர்பாதுகாப்பு வலயமாக இருந்த பகுதியில் 468.5 ஏக்கர் நிலப்பரப்பு மக்களுடைய மீள்குடியேற்றத்திற்கான கடந்த 29ம் திகதி விடுவிக்கப்பட்டது. இவ்வாறு விடுவிக்கப்பட்ட நிலப்பரப்பில்...
    வங்கிகளில் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் வைப்புக்களை அரசுடமையாக்க தீர்மானித்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி அறிவித்துள்ளது. இந்த நடைமுறை ஏற்கனவே வங்கிகள் சட்டத்தில் காணப்படும் ஒன்று என மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரன் தெரிவித்துள்ளார். 10 வருடங்களுக்கு அதிக காலம் செயலிழந்துள்ள கணக்குகளில் காணப்படும் பணம் இந்த சட்டத்தின்படி மத்திய வங்கியின் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்படும் எனவும் அவர் மேலும் கூறியுள்ளார்.
  மலர்ந்துள்ள புத்தாண்டு தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இன்று (வெள்ளிக்கிழமை) பொலனறுவைக்கு விஜயம் செய்து பொதுமக்களை சந்தித்து வாழ்த்துக்களை பரிமாறிக் கொள்ளவுள்ளார். இதற்காக பொலன்னறுவை ஹிங்குராங்கொடை அருகே அமைந்துள்ள புலதிசி புத்தி மண்டபத்தில் நிகழ்வு ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிகழ்வில் கலந்து கொண்டு மக்களைச் சந்திக்கும் ஜனாதிபதி, பொலனறுவையில் நடைபெறும் முக்கிய மதவழிபாட்டுத் தலங்களில் நடைபெறும் வழிபாடுகளிலும கலந்து கொள்ளவுள்ளார். அத்துடன், அங்குள்ள சுதந்திரக் கட்சியின் மூத்த உறுப்பினர்கள் நேரில்...
  இராணுவ உயர் பாதுகாப்பு வலயமாக இருந்து கடந்த நான்கு நாள்களுக்கு முன்னர் மக்கள் மீளக்குடியேற அனுமதிக்கப்பட்ட வலி.வடக்கு தெல்லிப்பழை பிரதேச செயலாளர் பிரிவுக்கு உட்பட்ட இடங்களில் உள்ள பொருள்களை திருடிச் செல்வதில் ஒரு கும்பல் திட்டமிட்டு செயல்படுகின்றபோதிலும் இதனை கட்டுப்படுத்த பொலிஸாரோ அரச அதிகாரிகளோ உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லையென பாதிக்கப்பட்ட மக்கள் கவலை தெரிவிக்கின்றார்கள். காணிகள் விடுவிக்கப்பட்ட முதல் நாளே அங்கு சென்ற திருடர்கள் இராணுவத்தினர் கைவிட்டு சென்ற...
  இலங்கை போக்குவரத்து சபை பஸ்கள் மீதான தாக்குதல் சம்பவங்களை கண்டித்தும், தாக்குதல்களை மேற்கொள்வோரை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துமாறு கோரியும் இலங்கை போக்குவரத்து சபை ஊழியர்கள் இன்று வெள்ளிக்கிழமை காலை கண்டனப் பேரணி ஒன்றை நடத்தினர். யாழ்.மத்திய பஸ் நிலையத்திலிருந்து ஆரம்பமான பேரணி ஆஸ்பத்திரி வீதி வழியாக கண்டி வீதியை அடைந்து , கண்டி வீதி வழியாக மாவட்ட செயலகத்தை அடைந்தது. பேரணியாக வந்தவர்கள் யாழ்.மாவட்ட செயலகத்தினுள் செல்ல...
  சிறிலங்கா இராணுவத்தின் பிடியில் இருந்து அண்மையில் விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் வீடு ஒன்று, இரகசிய வதைமுகாமாகப் பயன்படுத்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது. பலாலி உயர் பாதுகாப்பு வலயத்தில் இருந்த பொதுமக்களின் 701 ஏக்கர் காணிகள் கடந்த 29ஆம் நாள் சிறிலங்கா படையினரால் விடுவிக்கப்பட்டன. இவ்வாறு விடுவிக்கப்பட்ட தையிட்டிப் பகுதியில் உள்ள வீடு ஒன்றின் கூரைக்கு கீழ்ப் புறம், முள்ளுக்கம்பிகளால், வேயப்பட்டுள்ளது. தம்மால் தடுத்து வைக்கப்பட்டிருப்பவர்கள் தப்பிச் செல்வதை தடுக்கவே இவ்வாறான முட்கம்பிக் கூரைகளை சிறிலங்காப் படையினர்...