பிரித்தானியாவின் கிரேட்டர் லண்டன் பகுதியில் சாலையின் நடுவே அமர்ந்து பெண்மணி ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கிரேட்டர் லண்டனில் உள்ள Greenford பகுதியில் அமைந்துள்ள சாலையில் பாலத்தை கடக்கும் பொருட்டு ஏராளமான வாகனங்கள் வரிசையாக சென்றுகொண்டிருந்தன. ஆனால் வாகனங்கள் அனைத்தும் வேகம் குறைவாகவும் நிதானமாகவும் செல்வதை கண்ணுற்ற இருச்சக்கர வாகனத்தில் வந்த நபர் ஒருவர் காரணம் என்னவென வினவியுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது பாலத்தின் அருகாமையில் சாலையின் நடுவே பெண்மணி ஒருவர்...
பருவமாற்றத்தால் அமெரிக்கா முன்னைய வருடங்களை விட இவ்வருடம் அதீத பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளது.  45 இற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்ததுடன், பல்லாயிரக்கணக்கான டொலர் பெறுதியான அழிவுகளைச் சந்தித்துள்ளது. ஒரு வாரகாலத்தில் அதிக வீச்சுள்ள சுழல் காற்று மையங்கள் ஏற்பட்டதே உயிர் இழப்புக்கான காரணங்கள். போன்ற பல தகவல்களை லங்காசிறி வானொலியின் நிஜத்தின் தேடல் நிகழ்ச்சியில் ஆய்வாளர் சுதர்மா பகிர்ந்து கொண்டார்.
கேரளாவில் அழகான குழந்தையை வைத்திருந்ததால், பெற்ற தாயை சந்தேகப்பட்டு போலீசார் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளனர். கோழிக்கோடு மாவட்டம் நாதபுரம் நல்லாச்சி டவுண் பகுதியில், பெண் ஒருவர் 4 மாத கைக் குழந்தையுடன் பிச்சை எடுத்துக் கொண்டிருந்தார். கிழிந்த சேலையுடன் அலங்கோலமான கோலத்துடன்,அந்த பெண் இருந்தார். ஆனால் அவர் கையில் வைத்திருந்த குழந்தை சிவப்பு நிறத்துடன் நல்ல துணிகள் உடுத்தப்பட்டு உறங்கிக் கொண்டிருந்தது. இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் அந்த பெண்...
2016ம் ஆண்டு ஜனவரி முதலாம் திகதி நாடு பூராகவும் உள்ள அரச திணைககளங்களில் தேசிய கொடி ஏற்றி தேசியகீதம் பாடப்படுவதுடன் படைவீரர்களுக்கு அங்சலி செலுத்த அரச திணைக்களங்களுக்கு அரசாங்க நிர்வாகம் மற்றும் முகாமைத்துவ அமைச்சினால் பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது நாளை ஜனவரி முதலாம் திகதி வட மாகாணம் உட்பட நாடு பூராகவும் உள்ள அரச திணைக்களங்களில் காலை 9 மணிக்கு தேசியக்கொடி எற்றப்பட்டு தேசிய கீதம் பாடப்படுவதுடன், படைவீரர்கள் உட்பட நாட்டுக்காக...
இலங்கையின் அரசியல் வரலாற்றிலே இருவேறுபட்ட துருவங்களாக விளங்கித் தமக்குள் பகைமை பாராட்டிச் சிங்கள மக்களிடம் வாக்குகளைப்பெற்று மாறி மாறி ஆட்சிசெய்து வந்த ஐ.தே.க, ஸ்ரீ.ல.சு.க ஆகிய இருபெரும் அரசியல் கட்சிகள் முதற்றடவையாக இவ்வருடம் தைமாதம் இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலின்போதும் அடுத்ததாகக் கடந்த ஆவணி மாதம் நடைபெற்ற நடாளுமன்றத்துக்கான பொதுத்தேர்தலின்போதும் என்றுமேயில்லாதவாறு இரு கட்சிகளினதும் ஓரு பகுதியினர் கூட்டுச்சேர்ந்து போட்டியிட்டதோடு இரு தேர்தல்களின்போதும் ஐ.தே.க கட்சியே அதிகாரத்தைக்கைப்பற்றியுமிருந்தது. கடந்த ஆவணித் திங்கள்...
தேசியத்தலைவர் என்று கூறுகின்ற ஒரேயொரு தலைவர் தான் இருந்திருக்கிறார், அது வேலுப்பிள்ளை பிரபாகரன் மட்டும் தான், அதற்கு முன்பும் அப்படி ஒரு தேசிய தலைவர் இருந்ததில்லை, அதற்கு பின்னும் என்னுமொரு தேசியத்தலைவர் உருவாகப் போவதில்லை என வடக்கு மாகாண அவைத் தலைவர் சீ.வீ.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார். யாழ் மாட்டின் வீதியில் அமைந்துள்ள இலங்கை தமிழரசு கட்சியின் அலுவலகத்தில் நேற்று மாலை நடைபெற்ற யாழ் மாவட்ட தமிழரசு கட்சின் கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலையே...
மட்டக்களப்பு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாலமீன்மடு மட்டிக்கழியில் உள்ள வாவியில் இருந்து நேற்று புதன்கிழமை மாலை ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்று  இரவு 7.30மணியளவில் மட்டிக்கழி வாவிப் பகுதியில் மீன்பிடியில் ஈடுபட்டிருந்தவர்கள் சடலம் ஒன்று மிதப்பதைக் கண்டு வழங்கிய தகவலின் அடிப்படையில் சடலம் மீட்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர் கரடியனாறு பகுதியை சேர்ந்த 57வயதுடைய திருஞானச்செல்வம் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்தனர். கரடியனாறு பகுதியை சேர்ந்த இவர் நாவலடியில் உள்ள உறவினர்களின் வீட்டில்...
புதுவருடத்தை முன்னிட்டு சுவிஸ் மண்ணில் மாபெரும் கலை நிகழ்வு கோலாகலமாக இடம்பெறவுள்ளது. சுவிஸ் தமிழர்கள் 17வது தடவையாக நடாத்தும் மாபெரும் புத்தாண்டு நிகழ்வு நாளை பிற்பகல் 15.00 மணிக்கு Stadthalle Dietikon, Fondlistrasse 15, 8953 Dietikon ZH எனுமிடத்தில் இடம்பெறவுள்ளது. ஐரோப்பா -சுவிஸ் வாழ் ஈழத்துக் கலைஞர்கள் இந்த நிகழ்வில் கலந்து சிறப்பிக்கவுள்ளனர். மேலும் சுவிஸ் தமிழர் பண்பாட்டுக் கழக கலைஞர்களுடன் இணைந்து, தமிழகத்திலிருந்து பின்னணிப்பாடகர் ஸ்ரீராம், இசையமைப்பாளர் ஜீவராஜா கலந்து...
பெண் ஒருவரின் அந்தரங்கப் படங்களை வைத்துக்கொண்டு தனது ஆசைக்கு இணங்குமாறு அப்பெண்ணை மிரட்டிய ஒருவரை பருத்தித்துறைப் பொலிஸார் நேற்று கைது செய்துள்ளனர். யாழ். வடமராட்சி, பருத்தித்துறையில் இடம்பெற்றுள்ள இந்தச் சம்பவம் பற்றி தெரியவருவதாவது, பருத்தித்துறை பொலிஸ் பிரிவைச் சேர்ந்த குறித்த பெண் தனது அந்தரங்கப் படங்களை தனது கைத்தொலைபேசியில் உள்ள 'வைபர்' மூலம் அதே பகுதியில் வசிக்கும் ஆண் நண்பருக்கு அனுப்பியுள்ளார். அவரும் அந்தப் படங்களை தனது கைத்தொலைபேசியில் தரவிறக்கம் செய்து வைத்துள்ளார். இந்த...
தமிழ்நாட்டின் தனுஷ்கோடிக்கும் இலங்கையின் தலைமன்னாருக்கும் இடையேயான பாலம் அமைக்கும் இந்தியாவின் யோசனையை இலங்கை அரசாங்கம் நிராகரித்ததோடு எதிர்ப்பையும் வெளியிட்டுள்ளது. இப் பாலம் அமைக்கும் திட்டமென்பது இலங்கையின் சூழலியலை பாதிப்பது மட்டுமல்லாது உயிரியல் பன்முகத் தன்மையையும் பாதிப்படையச் செய்யும் என்றும் அரசாங்கம் நேற்று அறிவித்தது. பெலவத்தையிலுள்ள நெடுஞ்சாலைகள் அமைச்சின் கேட்போர் கூடத்தில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் மாநாட்டிலேயே அரசு சார்பில் கருத்து தெரிவித்த நெடுஞ்சாலைகள் மற்றும் உயர்கல்வி அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல...