அதியுச்ச அதிகாரப்பகிர்வு! தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் முஸ்லிம் காங்கிரஸும் இணக்கம்!
Thinappuyal -0
புதிய அரசியலமைப்பில் தமிழ்,முஸ்லிம் சமூகங்களின் உரிமைகள், அபிலாஷைகள், நலன்களை அதியுச்ச அதிகாரப்பகிர்வின் ஊடாக பெற்றுக் கொள்வதற்காக ஒருமித்த கருத்தை முன்வைப்பதற்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இடையே இணக்கம் ஏற்பட்டுள்ளது.
இலங்கை ஜனநாயக சோசலிஸ குடியரசின் புதிய அரசியல் அமைப்பு உருவாக்கப்படுவதற்கான நடவடிக்கைகள் அடுத்த வருடம் முன்னெடுக்கப்படவுள்ளன.
இந்நிலையில் தமிழ்,முஸ்லிம் தேசிய சமூகங்களின் பிரதிநிதித்துவங்கள், இருப்புக்கள், பூரண பாதுகாப்பு மற்றும் நீடித்த – நிலையான அரசியல் தீர்வு...
தேசிய பொங்கல் விழா இம்முறை யாழ்ப்பாணத்தில் நடைபெறவுள்ளது
இவ்விழாவில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவும், பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவும் பிரதம அதிதியாக கலந்து கொள்வர்.
யாழ் வீரசிங்கம் மண்டபத்தில் தேசிய பொங்கல் விழா நிகழ்வுகள் நடைபெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
தேசிய பொங்கல் விழாவையொட்டி வலி.வடக்கு பகுதியில் 701.5 ஏக்கர் காணிகளில் மக்கள் மீள்குடியேற்றம் செய்யப்படவுள்ளமையை முன்னிட்டு வலி.வடக்கு இராஜேஸ்வரி அம்மன் ஆலயத்தில் விசேட பூஜைகள் நடைபெறவுள்ளன.
இந் நிகழ்வில் ஜனாதிபதி, பிரதமர் உட்பட மீள்குடியேற்ற அமைச்சர்...
தேசிய பிரச்சினைக்கான அர்த்தமுள்ள ஒரு தீர்வை பெற்றுக் கொடுக்க வேண்டும். எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தனின் புதுவருட வாழ்த்துச் செய்தி
Thinappuyal -
எதிர்க்கட்சித் தலைவரும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்பந்தன்2016ஆம் ஆண்டை வரவேற்று புதுவருட வாழ்த்துச் செய்தி வெளியிட்டுள்ளார்.
புதிய எதிர்பார்ப்புக்களைக் கொண்டு வந்திருக்கும் இந்தப் புதிய வருடத்தில் இலங்கை மக்கள் அனைவருக்கும் இது ஒரு வளம் நிறைந்த இனிய புத்தாண்டான அமைய எனது வாழ்த்துக்கள்.
இன்றுமொரு புதிய வருடத்தை வரவேற்கும் இத்தருணத்தில் இலங்கை வாழ் பல்லின சமூகங்கள் தமது வேறுபாடுகளைக் களைத்து மக்களின் உரிமைகளையும் மனித நேயத்தையும் சுதந்திரத்தையும் நல்வாழ்கையும் மதித்து பாதுகாக்கின்ற...
எச்.ஐ.வி தொற்றுக்குள்ளான 20 கர்ப்பிணித் தாய்மார்கள் இதுவரை அடையாளம் காணப்பட்டுள்ளதாக, சுகாதார அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
கர்ப்பிணிப் பெண்கள் குறித்து மேற்கொள்ளப்பட்ட எச்.ஐ.வி இரத்தப் பரிசோதனைகளில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளதாக, சுகாதார அமைச்சின் பாலியல் நோய்கள் மற்றும் எச்.ஐ.வி எயிட்ஸ் தடுப்பு வேலைத் திட்டம் தொடர்பான பணிப்பாளர் வைத்தியர் சிசிர லியனகே தெரிவித்துள்ளார்.
2013ம் ஆண்டு முதல் அனைத்து கர்ப்பிணித் தாய்மார்களையும் எச்.ஐ.வி பரிசோதனைக்கு உட்படுத்தும் வேலைத் திட்டம் சுகாதார அமைச்சால் மேற்கொள்ளப்பட்டு...
அம்பாறை உகன, ஹிமிதுராவ பகுதியில், முச்சக்கரவண்டி யொன்றிலிருந்து ஆண் மற்றும் பெண் ஆகிய இருவரது சடலங்களை புதன்கிழமை (30) மீட்டதாக பொலிஸ் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
இங்கினியாகல பகுதியைச் சேர்ந்த 42 வயதுடைய ஆணும் முல்லேரியாப் பகுதியைச் சேர்ந்த பெண்ணுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.
கள்ளக்காதல் காரணமாக இவ்விருவரும் தற்கொலை செய்துக்கொண்டிருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
சடலங்கள் அம்பாறை வைத்தியசாலையின் சவச்சாலையில் வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.
விஜய்யை வைத்து முருகதாஸ் இயக்கிய துப்பாக்கி படம் பிரமாண்ட வெற்றிபெற்றது. மும்பையில் படமான துப்பாக்கியில் விஜய் ராணுவ வீரராக நடித்திருந்தார்.
இன்னமும் மும்பை செண்டிமெண்டை மறக்காத முருகதாஸ், அடுத்து மகேஷ் பாபுவை வைத்து இயக்கவுள்ள படத்தையும் மும்பையிலேயே எடுக்க திட்டமிட்டுள்ளார்.
இப்போது சோனாக்ஷி சின்ஹா, அனுராக் கஷ்யாப், ராய் லட்சுமி அகியோர் நடிக்கும் ‘அகிரா’ படத்தை இயக்கிவரும் முருகதாஸ், இந்த படத்தை அடுத்த வருடம் ஏப்ரல் மாதத்தில் மகேஷ்பாபு படத்தை தொடங்குவார்...
விஜய் நடிப்பில் கடந்த அக்டோபரில் வெளிவந்த 'புலி' படத்திற்கு முதலில் 'கருடா' என தான் பெயரிட்டார்களாம். ஆனால் ஏதோ காரணங்களால் அதை மாற்றி 'புலி' என பெயர் வைத்துள்ளனர்.
இப்போது புலி படத்தை தயாரித்த ஷிபு தமீன்ஸ், விக்ரமின் அடுத்த படத்தை தயாரிக்கவுள்ளார். ஏற்கனவே பதிவு செய்து வைத்துள்ள 'கருடா' என்ற பெயரையே இந்த படத்திற்கு வைத்துள்ளனர்.
ஆனந்த் ஷங்கர் இயக்கத்தில் ஒரு படத்தை ஜனவரியில் தொடங்கவுள்ள விக்ரம், 'கருடா' படத்திற்கும்...
பாலா இயக்கத்தில் இந்த பொங்கலுக்கு தாரை தப்பட்டை படம் திரைக்கு வரவிருக்கின்றது. இப்படத்தை பார்க்க ரசிகர்கள் அனைவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்நிலையில் இப்படம் நேற்று சென்ஸார் சென்று ஏ சான்றிதழ் பெற்றுள்ளது. சில இடங்களை கட் செய்தால் யு சான்றிதழ் தருகிறோம் என கூறியும், பாலா மறுத்து விட்டாராம்.
அப்படியிருந்தும் படத்தில் 18 இடங்களில் கத்திரி விழுந்திருப்பதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றது.
ஐ, தங்கமகன் படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் எமி ஜாக்ஸன். இவர் அடுத்து ரஜினி, விஜய் போன்ற முன்னணி நடிகர்களுடம் இணைந்து நடித்து வருகிறார்.
இந்நிலையில் இவர் சமீபத்தில் தமிழ்கத்தில் முன்னணி நாளிதழ் ஒன்றிற்கு பேட்டியளித்துள்ளார். இதில் விஜய், தனுஷ் இதில் யார் உங்கள் பேவரட் என்று கேட்டுள்ளனர்.
அதற்கு அவர் தனுஷ் தான் மிகவும் பிடிக்கும் என கூறியுள்ளார். மேலும், அஜித்துடன் நடிக்க மிகவும் விருப்பமாக உள்ளதாகவும் அறிவித்துள்ளார்.
தனுஷ் நடிப்பில் சமீபத்தில் வந்த தங்கமகன் பெரும் நஷ்டத்தை அடைந்தது. இப்படத்தை கோபுரம் பிலிம்ஸ் தயாரித்தது.
இப்படம் சுமார் ரூ 10 கோடி வரை நஷ்டம் அடைந்ததாக கூறப்படுகின்றது. இதனால், தயாரிப்பு நிறுவனம் தனுஷ் மீண்டும் தங்கள் நிறுவனத்திற்கு ஒரு படம் நடிக்க வேண்டும் என கேட்டுள்ளது.
இதற்கு மௌனமாக இருந்த தனுஷ் தற்போது தலையாட்டியுள்ளாராம். விரைவில் இதுக்குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் என எதிர்ப்பார்க்கப்படுகின்றது.