முதல் டெஸ்டில் இமாலய வெற்றி: தென்ஆப்பிரிக்காவை 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது இங்கிலாந்து
Thinappuyal -0
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் தென் ஆப்பிரிக்கா 241 ஓட்டங்கள் வித்தியாசத்தில் படுதோல்வியடைந்தது.தென் ஆப்பிரிக்கா- இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி டர்பன் நகரில் நடைபெற்றது.
இதில் முதல் இன்னிங்சில் இங்கிலாந்து 303 ஓட்டங்களும், தென்ஆப்பிரிக்கா 214 ஓட்டங்களும் எடுத்தது.
பின்னர் 89 ஓட்டங்கள் முன்னிலையில் இங்கிலாந்து அணி 2வது இன்னிங்சை தொடங்கியது.
தொடக்க வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர். ஆனால் ரூட் (73) அரைசதம், காம்ப்டன் 49...
அவுஸ்திரேலிய தொடருக்கு தயாராகாமல் புத்தாண்டு கொண்டாட காதலி அனுஷ்காவுடன் சுற்றுலாவுக்கு கிளம்பி விட்டார் விராட் கோஹ்லி.இந்திய அணி அடுத்த வருடம் அவுஸ்திரேலியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 5 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் பங்கேற்கிறது.
இதில் முதல் ஒருநாள் போட்டி ஜனவரி 11ம் திகதி பெர்த்தில் நடக்கிறது.
இந்த நிலையில் டோனி தலைமையிலான இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.
குறிப்பாக தற்போது டெஸ்ட் அணித்தலைவராக உள்ள கோஹ்லி, ஒருநாள் போட்டிக்கும்...
நியூசிலாந்து அணிக்கு எதிரான டி20 தொடருக்கு இலங்கை அணியின் தலைவராக தினேஷ் சந்திமால் தெரிவு செய்யப்பட்டுள்ளார்.இலங்கை கிரிக்கெட் அணி நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் செய்து விளையாடி வருகிறது. இதில் டெஸ்ட் தொடரை 2-0 என இலங்கை இழந்துள்ளது. தற்போது ஒருநாள் தொடர் நடந்து வருகிறது.
இந்த நிலையில் காயம் காரணமாக டி20 அணித்தலைவர் மலிங்கா இந்த தொடரில் இருந்து விலகியுள்ளார்.
இதைத் தொடர்ந்து தினேஷ் சந்திமால் டி20 அணியை வழிநடத்துவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும்,...
பிக் பாஷ் டி20 தொடரில் பிரிஸ்பேன் ஹேட் அணிக்கு எதிரான போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணி 15 ஓட்டங்களால் வெற்றி பெற்றது.பிக் பாஷ் லீக் டி20 தொடர் அவுஸ்திரேலியாவில் நடைபெற்று வருகிறது. இதில் நேற்று நடந்த ஆட்டத்தில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ்- பிரிஸ்பேன் ஹேட் அணிகள் மோதியது.
இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஹோபர்ட் அணி அதிரடியாக விளையாடி 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட் இழப்பிற்கு 194 ஓட்டங்களை எடுத்தது.
சங்கக்காரா 19...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் 5 விக்கெட்டுகள் வீழ்த்தியதன் மூலம் தென் ஆப்பிரிக்க சுழற்பந்துவீச்சாளர் டேனி பியட் புதிய சாதனை படைத்துள்ளார்.இந்தப் போட்டியில் 2வது இன்னிங்சில் இங்கிலாந்து 326 ஓட்டங்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது.
தென்ஆப்பிரிக்கா வேகப்பந்து வீச்சாளர் ஸ்டெயின் காயம் காரணமாக வெளியேறினாலும் அந்த அணியின் ’ஆஃப் ஸ்பின்னர்’ பியட் சிறப்பாக பந்து வீசி 5 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.
கடந்த 50 ஆண்டுகளில் தென் ஆப்பிரிக்காவின் ’ஆஃப்...
தெமட்டகொடை பகுதியில் பாராளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமச்சந்திரவுக்கு சொந்தமான டிபென்டரில் ஒருவரைக் கடத்தி, தாக்கியதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதான இரு சந்தேகநபர்களும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர். இதேவேளை இந்த சம்பவம் குறித்து முன்னதாக நால்வர் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த நிலையில், குறித்த இருவரும் நேற்று கைதானமை குறிப்பிடத்தக்கது. கைதான இருவரையும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்திய போது, இவர்களை ஜனவரி 4ம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதவான் உத்தரவு பிறப்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
2015ஆம் ஆண்டில் இதுவரை, 110 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக, எல்லைகளற்ற செய்தியாளர்கள் அமைப்புத் தெரிவித்துள்ளது. அவ்வமைப்பு நேற்று வெளியிட்ட அறிக்கையிலேயே, இவ்விடயம் தெரிவிக்க பட்டுள்ளது. இவ்வாறு கொல்லப்பட்டுள்ள 110 பேரில் 49 பேர், அவர்களது பணிக்காக அல்லது வேண்டுமென்றே இலக்கு வைக்கப்பட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். 18 பேர், அவர்களது பணியின்போது கொல்லப்பட்டுள்ளனர். மீதி 43 பேர், தெளிவற்ற காரணங்களால் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களுக்கு மேலதிகமாக, மக்கள் ஊடகவியலாளர்கள் 27 பேரும், ஊடகப் பணியாளர்கள் 7 பேரும்,...
2015ஆம் ஆண்டு கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகள், ஜனவரி மாதம் மூன்றாம் திகதி வெளியிடப்படும் என பரீட்சைத் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சைப் பெறுபேறுகளை www.doenets.lk என்ற இணையத்தளத்தில் பார்வையிட முடியும்.
அத்துடன், கொழும்பு மற்றும் ஸ்ரீ ஜயவர்தனபுர கல்வி வலயங்களுக்கு உட்பட்ட பாடசாலைகளுக்கு, பரீட்சைப் பெறுபேறுகள் வெளியிடப்படும் அதே நாள் காலையில் ஏனைய பகுதிகளுக்கான பெறுபேறுகள் பரீட்சைகள் திணைக்களத்தால் பாடசாலைகளுக்கு அனுப்பி வைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்முறை உயர்தர பரீட்சைக்கு சுமார் 309,069...
பிரபல சிங்கள ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கடத்தல் வழக்கில் தொடர்புடைய இன்னுமொரு இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளார். இரண்டொரு நாட்களுக்கு முன்னர் குறித்த இராணுவப் புலனாய்வாளர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் திணைக்கள தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அபேரத்ன எனப்படும் குறித்த இராணுவப் புலனாய்வாளர் பிரகீத் கடத்தல் சம்பவம் நடைபெற்றிருந்த காலகட்டத்தில் சாதாரண சார்ஜண்ட் தர அதிகாரியாக இருந்துள்ளார். எனினும் அதன் பின்னர் சில வருடங்களுக்குள்ளாக அவருக்கு லெப்டினன்ட் பதவி வரை பதவி உயர்வுகள்...
சென்னை மக்களை புரட்டிப்போட்ட வெள்ளம் தற்போது வற்றிய நிலையிலும், பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை திரும்பவில்லை.
வெள்ளத்தால் உடமைகளை இழந்த மக்கள், அரசாங்கம் மற்றும் தொண்டு நிறுவனங்கள் செய்த நிவாரண உதவியால் பயனடைந்தாலும், அது முழுமையான பயன் என்று சொல்லிவிட முடியாது,
தற்போது கொஞ்சம் கொஞ்சமாக வெள்ளத்தில் இருந்து மீண்டுகொண்டிருக்கும் சென்னை மக்கள், வெள்ளத்தின் போது தாங்கள் சந்தித்த பிரச்சனைகள், கிடைத்த உதவிகள் மற்றும் வெள்ளத்திற்கான காரணங்கள் குறித்து தங்கள் கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.