மேற்கிந்திய தீவுகள் அணிக்கு எதிரான 2வது டெஸ்டில் அவுஸ்திரேலியா 177 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளது.அவுஸ்திரேலியா–மேற்கிந்திய தீவுகள் அணிகள் மோதிய 2வது டெஸ்ட் போட்டி மெல்போர்ன் மைதானத்தில் நடந்தது. இதில் அவுஸ்திரேலியா முதல் இன்னிங்சில் 3 விக்கெட் இழப்புக்கு 551 ஓட்டங்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. மேற்கிந்திய தீவுகள் முதல் இன்னிங்சில் 271 ஓட்டங்களில் சுருண்டது. பின்னர் ”பாலோஆன்” கொடுக்காமல் 280 ஓட்டங்கள் முன்னிலையுடன் 2வது இன்னிங்சை தொடங்கிய அவுஸ்திரேலியா 3...
எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு அந்திம கிரியைகள் செய்வதற்கான தகரபந்தல்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மத்திய அரசு நேரடியாகவே வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும் எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு...
இலங்கை அணிக்கு எதிரான 2வது ஒருநாள் போட்டியில் அதிரடியில் மிரட்டிய நியூசிலாந்து அணி 10 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.நியூசிலாந்து 250 பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்றது. இதன் மூலம் அதிக பந்துகள் மீதமுள்ள நிலையில் வெற்றி பெற்ற அணிகள் வரிசையில் 7வது இடம் பிடித்தது. மேலும், 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெறுவது ஒருநாள் அரங்கில் இது 48வது முறையாகும். நியூசிலாந்து 8 முறை 10 விக்கெட்...
தென்ஆப்பிரிக்க அணியின் அதிரடி வீரர் டிவில்லியர்ஸ் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற திட்டமிட்டுள்ளார்.தென் ஆப்பிரிக்க அணியின் ஒருநாள் போட்டி தலைவராக உள்ள டிவில்லியர்ஸ், மூன்று வித கிரிக்கெட் போட்டிகளிலும் அதிரடியில் அசத்தக் கூடியவர். துடுப்பாட்டத்தை தவிர, விக்கெட் கீப்பராகவும் செயல்படுவார். அவர் இதுவரை 23 டெஸ்டில் கீப்பராக செயல்பட்டுள்ளார். தற்போது இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் முதல் 2 டெஸ்ட் போட்டிகளில் விக்கெட் கீப்பராக செயல்படுகிறார். இந்த நிலையில்...
அர்ஜெண்டினா கால்பந்து அணியின் தலைவரும், பார்சிலோனா கிளப் அணியின் முன்னணி வீரருமான லியோனல் மெஸ்சி உலக கால்பந்து விருதை தட்டிச் சென்றார்.ஏழாவது உலக கால்பந்து விருது துபாயில் நடைபெற்றது. இந்த விருதைப் பெறுவதற்காக மெஸ்சி அர்ஜெண்டினாவில் இருந்து துபாய் வந்திருந்தார். விருதை வென்ற மெஸ்சி கூறுகையில் ‘‘இந்த விருதை பெறுவது மிகவும் சிறப்பானது. ஆனால், இந்த வாய்ப்பை உருவாக்கி தந்தவர்கள் எனது அணி வீரர்கள். இது எனக்கு மிகவும் சிறப்பான வருடமாக...
போலிக் கலாச்சாரத்தைப் பின்பற்றிக்கொண்டு அதற்கு உயர் பெறுமதிகளைக் கொடுத்து தாய் நாட்டின் சிரேஷ்டத்துவத்தையும் அபிமானத்தையும் சீரழிப்பதற்கு ஒரு போதும் இடமளிக்கப் போவதில்லை  என  ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். பத்தரமுல்லையில் இன்று காலை இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துக்கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டார். பல்லாயிரம் ஆண்டுகளாக பேணப்பட்டு வந்த கலாச்சாரப் பண்புகள் மற்றும் எமக்கே உரித்தான பண்புகள்  ஆகியவற்றை  பாதுகாத்து முன்னேற்றமடைந்த நாடொன்றை பெற்றுக்கொடுக்கும் எதிர்பார்ப்புடனே ஜனவரி 8 ஆம் திகதி...
கொழும்பில் இடம்பெற்ற ’என்றிக் லைவ்’ என்ற இசை நிகழ்ச்சி தொடர்பாக குமார் சங்கக்காராவுக்கு எதிர்ப்பு கிளம்பி உள்ளது.கடந்த 20ம் திகதி கொழும்பில் ’என்றிக் லைவ்’ இசை நிகழ்ச்சியை சங்கக்காரா, ஜெயவர்த்தனேயின் நிறுவனம் ஒன்று நடத்தியது. இதில் மதுபானங்கள் பரிமாறப்பட்டதாகவும், இலங்கையின் கலாசாரத்துக்கு கேடு விளைவிக்கும் பல நிகழ்வுகள் இடம்பெற்றதாகவும் குற்றம் சாட்டப்பட்டது. இதனையடுத்து அந்த இசை நிகழ்ச்சிக்காக தாங்கள் மன்னிப்பு கேருவதாகவும், நிகழ்ச்சியைக் காண வருகை தந்திருந்தவர்களின் பணத்தை திரும்ப வழங்குவதாகவும்...
கடந்த 24 மணித்தியாலங்களில் யாழில் அதிகமான மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இன்றைய தினம் காலை 8 .30 மணியுடன் நிறைவடைந்த 24 மணித்தியாலங்களில் பல பகுதிகளில் கடும் மழை பெய்துள்ளது. இதனடிப்படையில் யாழ்ப்பாணத்தில் அதிக மழை வீழ்ச்சியாக 103.4 மில்லி மீற்றர் மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதேவேளை பளை பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட இத்தாவில் கோவில் காடு பகுதியில் அண்மையில் வீசிய பலத்த காற்றினால் 12 வீடுகள் சேதமடைந்தன. இவ்வாறு வீசிய பலத்த காற்றினால்...
டோனியின் வாழ்க்கை வரலாறு குறித்த திரைப்படம் வெளியாகும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளது.இந்திய கிரிக்கெட் அணியின் சாதனை தலைவரான டோனி, இந்திய அணிக்கு 2 உலகக்கிண்ணங்களை வென்று கொடுத்தவர். கடந்த ஆண்டு அவர் டெஸ்ட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்று விட்டநிலையில், தற்போது டி20 மற்றும் ஒருநாள் போட்டி தலைவராக உள்ளார். இந்த நிலையில் அவரது வாழ்க்கை வரலாறு பற்றி ’சொல்ல மறந்த கதை ’(M.S. Dhoni – The Untold Story) என்ற...
எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு அமைச்சின் பங்களிப்புடனேயே மீள்குடியேற்ற நடவடிக்கைகள் நடைபெறும் என வடமாகாண புனர்வாழ்வு அமைச்சர் ப.சத்தியலிங்கம் தெரிவித்துள்ளார். அமைச்சரின் குறித்தொதுக்கப்பட்ட நிதியின் கீழ் வவுனியா மீள்குடியேற்ற கிராமங்களான கல்மடு, மறவங்குளம் பொது அமைப்புகளுக்கு அந்திம கிரியைகள் செய்வதற்கான தகரபந்தல்களை வழங்கி வைத்து உரையாற்றும்போதே இவ்வாறு தெரிவித்தார். அவர் தொடர்ந்து தெரிவிக்கையில், இதுவரை காலமும் மத்திய அரசு நேரடியாகவே வடக்கில் மீள்குடியேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தது. எனினும் எதிர்காலத்தில் மாகாண புனர்வாழ்வு...