அமெரிக்க விமான நிலையங்களில் பயணிகளிடம் இருந்து பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களை பொதுமக்களின் பார்வைக்கு அதிகாரிகள் வைத்துள்ளனர். விமான பயணிகள் ஆயுதங்களை கொண்டு செல்ல தடை இருந்த போதும் அதை மீறி ஆயுதங்களை எடுத்துச் செல்ல பயணிகள் முயற்சிப்பதுண்டு. அந்த வகையில் அமெரிக்க விமான நிலையங்களில் இருந்து தடையை மீறி எடுத்துச் செல்ல முயன்ற ஆயுதங்களை அதிகாரிகள் பறிமுதல் செய்து வருகின்றனர். இந்த ஆண்டு முழுவதும் இதுபோன்று பறிமுதல் செய்யப்பட்ட ஆயுதங்களின் குவியலை சம்பந்தப்பட்ட...
ரஷ்யா அரசு அதிகாரிகளுக்கு ஜனாதிபதி புடின் எழுதிய புத்தகத்தை புத்தாண்டு பரிசாக வழங்கியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யா ஜனாதிபதி விளாடிமிர் புடின் தாம் இதுவரை பேசிய கருத்துக்கள் அடங்கிய 400 பக்க புத்தகத்தை அரசு அதிகாரிகளுக்கு புத்தாண்டு பரிசாக வழங்கியுள்ளார். ஜனாதிபதி மாளிகையால் தெரிவு செய்யப்பட்டுள்ள அரசு அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு இந்த 400 பக்க புத்தகம் வழங்கப்பட்டுள்ளது.புத்தகத்தை பெற்றுக்கொள்ளும் அதிகாரிகள் அதை முழுமையாக வாசிக்கவும், அந்த புத்தகத்தை அலுவலகத்தில் பாதுகாக்கப்பட...
விளையாடி முடித்த பிறகு தசைகள் எல்லாம் சக்தியை இழப்பதோடு மட்டுமல்லாமல் வியர்வை வழியாக தாது உப்புக்களும் வெளியேறி விடுகின்றன.அதனால் தண்ணீர் மற்றும் நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உண்ண வேண்டும். ப்ரெஷ் ஜூஸ், உலர் பழங்கள், மில்க் ஷேக் வகைகள், ஸ்வீட் லஸ்ஸி, பிரெட் ஜாம், ஃப்ரூட் பன், ஃப்ளேவர்டு மில்க், வாழைப்பழம் ஆகியவை, விளையாடி முடித்து வந்ததும் சாப்பிடலாம். வெப்பமான காலநிலையில், வியர்வை அதிகமாக வெளியேறும்போது, உப்பு சேர்த்த உணவுகளைத் தேர்ந்தெடுத்துச்...
அன்மையில் 'தமிழர் பேரவை' என்னும் புதிய அமைப்பொன்று உருவாக்கப்பட்டு அதன் தலைவராக வடமாகாண முதலமைச்சர் 'விக்னேஸ்வரன்' அவர்கள் நியமிக்கப்பட்டுமுள்ளார். இப்பேரவை உருவாக்கப்பட்டதன் நோக்கம் என்ன? அதன் பின்னணி யாது? என்னும் வினாக்கள் பல்வேறு தரப்பினரிடமிருந்தும் தற்போது வெளிக்கிளம்ப ஆரம்பித்துள்ளன. இப் பேரவையின் உருவாக்கத்தில் சம்பந்தன் அவர்கள் மீது அதிருப்தியும், காழ்ப்புணர்வும் கொண்டுள்ள அரசியல், சமூகம் தொடர்பிலான பிரமுகர்களும், ஊடகவியலாளர்களும் பின்னணியில் இருந்துள்ளமை நன்கு தெரியவருகின்றது. இதன் காரணமாகவே, சம்பந்தன் அவர்களும், விக்னேஸ்வரன்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பைச் சார்ந்தவர்கள் கட்சித் தலைமையின் அனுமதியைப்பெறாமல் ஓர் அமைப்பை உருவாக்குவதை நாம் விரும்பமாட்டோம். தமிழ் மக்களின் ஏகோபித்த ஆதரவைப் பெற்ற கூட்டமைப்பை எவராலும் பிளவுபடுத்தவே முடியாது. இவ்வாறு கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை அமைப்பின் உருவாக்கத்திற்கு இப்போது என்னால் பதிலளிக்கமுடியாது. பொறுத்திருந்துதான் பதில் வழங்குவேன் என்றும் அவர் குறிப்பிட்டிருக்கின்றார். அரசியல் தீர்வுக்கான யோச னைகளை முன்வைக்கப்போவதாகக் கூறி 'தமிழ் மக்கள் பேரவை'...
'இலங்கை மக்கள் சமாதானம், செழிப்பு, நல்லிணக்கம் ஆகியவற்றை நோக்கிய வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தைத் தொடர்கையில் அமெரிக்கா உறுதியான விதத்தில் அதற்கு உதவும் என இலங்கைக்கு விஜயம் செய்துள்ள அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் ஆலோசகரும், அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் உயர்நிலைப் பதவிகளிலொன்றான அரசியல் விவகாரங்களுக்கான கீழ்நிலைச் செயலாளர் பதவியைப் பொறுப்பேற்கவுள்ளவருமான தோமஸ் ஷனோன் அவர்கள் தெரி வித்துள்ளார். தன்னுடைய இலங்கைப் பயணத்தின்போது திருகோணமலைக்கும் விஜயம் மேற்கொண்டுள்ள இந்த அமெரிக்க...
அண்மைக்காலமாக அமெரிக்க இராஜ்ஜியப் பிரதிநிதிகள் இலங்கைக்கு ஒருவர் பின் இன்னொருவராக விஜயம் செய்துவருவது தெரிந்ததே. என்றைக்கு மஹிந்த ராஜபக்ஷ அவர்களுடைய கைவசமாயிருந்த ஆட்சியதிகாரம் மைத்திரி-ரணில் தரப்பினருக்குக் கைமாற்றப்பட்டதோ அன்றிலிருந்தே இப்பிரதிநிதிகளின் இலங்கை வருகை அசாதாரணமாக அதிகரித்துமுள்ளது. இவர்கள் இலங்கைத் தீவுக்கு அதுவும் ஐ.தே.கவின் ஆட்சியதிகாரம் இடம்பெற்றிருக்கும் இன்றைய கால கட்டத்தில் இலங்கைக்கு அடிக்கடி விஜயம் செய்வதோடு வடக்குக்- கிழக்குத் தமிழர் தரப்பின் அரசியல் பிரதி நிதிகளான சம்பந்தன், சுவாமிநாதன்,...
தமிழீழ விடுதலைப்புலிகளின் போராட்டம் மௌனிக்கப்பட்டு 06 ஆண்டுகளைக்கடந்து ஏழாவது ஆண்டினை அண்மித்திருக்கும் இந்நேரத்தில் விடுதலைப்புலிகளின் புலனாய்வுப்பொறுப்பாளர் பொட்டு அம்மான் அவர்கள் எரித்தெரியாவில் தங்கியிருப்பது இலங்கை அரசிற்கு பெரும் நெருக்கடியான நிலைமையைத் தோற்றுவித்துள்ளது. 30வருடகாலப் போராட்ட வரலாற்றில் விடுதலைப் புலிகளுடைய புலனாய்வுப் பிரிவானது அரசாங்கத்திற்கு மாத்திரமல்லாது, சர்வதேசத்திற்கும் சிம்மசொப்பணமாகத் திகழ்ந்தது. மாவிலாறில் ஆரம்பித்த யுத்தம் முள்ளிவாய்க்காலில் முடிவுக்குக் கொண்டுவரப்பட்டபோது பொட்டு அம்மான் அவர்கள் இறுதிநேரத்தில் வலிந்த தாக்குதல் ஒன்றினை நடாத்தி...
  இலங்கைக்கான மக்களின் தீர்ப்பாயம் (Permanent People’s Tribunal on Sri Lanka) தனது இரண்டாவது அமர்வை ஜெர்மனியின் பிரேமன் (Breman) நகரத்தில் ஒழுங்கு செய்திருந்தது. இந்த அமர்வை ஏற்பாடு செய்வதில் முன்னின்று செயற்பட்ட நிறுவனங்கள் அயர்லாந்தைச் சேர்ந்த இலங்கையில் சமாதானத்திற்கான மக்கள் அமைப்பும் பிரேமன் நகரத்தில் இயங்கி வரும் மனித உரிமைகள் அமைப்புமாகும். இந்த இரு அமைப்புகளிலும் தீவிரமாகவும் மிகுந்த அர்ப்பணிப்பு உணர்வோடும் பணியாற்றுபவர்களில் பலர், தமிழ் மக்களின் விடுதலைப்...
  விடுதலைப் புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் சமாதானப் பேச்சுவார்த்தைகள் நடந்து கொண்டிருந்தபோது அமெரிக்கா இன்னுமொரு நடவடிக்கையிலும் இறங்கியது. 2007இல் இலங்கை அரசுடன் Acquisition and cross services Agreement (ACSA) எனப்படும் இராணுவ ஒப்பந்தத்தை ஏற்படுத்தியது. NATOவுக்கு வெளியே உள்ள நாடுகளுடன் நெருக்கமான இராணுவ உறவுகளையும் பயிற்சிகளையும் பேணுவதற்காக அமெரிக்கா உருவாக்கியிருப்பதே ACSA. இந்த ஒப்பந்தம் தொடர்பான விவரங்கள் இரகசியமாகவே பேணப்பட்டன. ‘இராணுவத் தளபாடங்கள் இந்த ஒப்பந்தத்தில்’ சம்பந்தப்படவில்லை என...