தமிழ் மக்கள் பேரவையில் இருக்கும் முக்கிய தலைவர்களில் முதலமைச்சர் விக்னேஸ்வரன் தவிர மற்றவர்கள் அனைவரும் மக்களால் நிராகரிக்கப்பட்டவர்கள் என திரு சம்பந்தன் அவர்கள் தெரிவித்துள்ளார். ஐயா சம்பந்தன் அவர்களே .. நீங்கள் இதை கூறுவதற்கு முன்னர் உங்கள் கடந்த காலத்தை கொஞ்சம் திரும்பி பார்ப்பது சிறப்பு என கருதுகிறேன். 1989,1994, 2000 ஆண்டுகளில் நடந்த பாராளுமன்ற தேர்தல்களில் நீங்கள் போட்டியிட்டு தொடர்ச்சியாக படுதோல்வி அடைந்தவர் என்பதை மறந்து விட்டீர்களா? 2001 இற்கு பின்னர்...
விக்கினேஸ்வரன் ஐயாவின் கருத்தை நான் வரவேற்கின்றேன் தமிழ்மக்கள் மீது பற்றுள்ளவராக கொள்கையில் மாற்றம் இல்லாதவராக செயற்படுகின்ற தலைவராக விக்கினேஸ்வரன் ஐயா திகழ்கின்றார் உண்மையிலேயே தமிழர்களின் மீது உலகத்தின் கவனம் திரும்பிய போது அதை அற்ப ஆசைகளுக்கா உதாசினம் செய்தவர்கள் தமிழ்தேசியகூட்டமைப்பினர் இனி ஒருபோதும் தமிழ்மக்களுக்கு எதுவித தீர்வுகளையும் அவர்களால் பெற்று தரமுடியாது என்பது வெளிப்படை இன்று கிழக்கை முஸ்லிங்களிடம் தாரைவார்த்து கொடுத்துள்ளார்கள் இதுபோன்ற அசமந்த...
  தமிழ் மக்களின் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்களை ஆராய்வதற்கு 15 பேர் கொண்ட உபகுழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளதாக தமிழ் மக்கள் பேரவையின் இணைத்தலைவர் வைத்தியர் பி.லக்ஸ்மன் தெரிவித்தார். தமிழ் மக்கள் பேரவையின் இரண்டாவது கூட்டம் இன்று ஞாயிற்றுக்கிழமை யாழ். பொது நூலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது. தமிழ் மக்கள் பேரவையின் தலைவரும் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையிலேயே...
  முழு நாடாளுமன்றத்தையும், அரசியல் நிர்ணய சபையாக மாற்றும் யோசனையை முன்வைத்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ஜனவரி ஒன்பதாம் திகதி நாடாளுமன்றத்தில் உரையாற்ற உள்ளார். இச்சூழ்நிலையில், புதிய அரசியலமைப்பை தயாரிக்கும் தேசிய செயற்பாட்டில் வடகிழக்கு மாகாணங்களுக்கு வெளியே வாழும் பதினாறு லட்சம் தமிழ் மக்கள் தொடர்பில் தமிழ் முற்போக்கு கூட்டணி பொறுப்புணர்வுடன் செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது. இது கடந்த காலங்களின் தூரநோக்கற்ற அரசியல் அக்கறையீனம் காரணமாக தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வேளைகளில் மலையக...
  லிந்துலை நாகசேனை அகரகந்த தோட்டத்தில் இயங்கி வரும் பாரதி மொழிசங்கத்தின் 05 ஆண்டு நிறைவு விழா 27.12.2015 அன்று சங்கத்தின் தலைவர்  கு.மோகன்ராஜ்  தலைமையில் தோட்ட கலாசார மண்டப திடலில் நடைபெற்றது. இவ்விழாவில் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மயில்வாகனம் திலகராஜ், லிந்துலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி எஸ்.செல்வகுமார், தேசிய மொழிகள் ஒருமைபாட்டு அமைச்சின் பிரத்தியோக செயலாளர் ஜோதிவேல், தோட்ட அதிகாரி தாரக்க விஜயவர்தன ஆகியோர் கலந்துகொண்டனர். இவ்விழாவில்...
ஐ.எஸ் தீவிரவாத அமைப்பு ஆல்கான் என்ற படையை, தங்கள் அமைப்பின் சில முக்கிய மேற்பார்வைகளுக்காக நியமித்துள்ளது.இதில் பெண்களும் அடங்குவர், இந்நிலையில், தாயார் ஒருவர் தான் அணிந்திருந்த பார்தாவால் குழந்தையை மறைத்துவைத்துக்கொண்டு பாலூட்டியுள்ளார். அப்போது, அந்த இடத்திற்கு வந்த பெண் ஆல்கான் படையினர், அக்குழந்தையை வாங்கி மற்றொரு பெண்ணிடம் கொடுத்துவிட்டு, தாயாரை காட்டுமிராண்டித்தனமாக சிதைத்து கொன்றுள்ளனர். இத்தகவலை துருக்கியில் வசித்து வரும் ஆயிஸா என்ற பெண்மணி தெரிவித்துள்ளார், இவர் இதற்கு முன்னர் சிரியாவில்...
  ஜனவரி 9 ஆம் திகதி ஜனாதிபதி உரையாற்றி புதியதொரு அரசியல் அமைப்புச் சட்டம் உருவாகுவதற்கான பொறிமுறையினை ஆரம்பிக்கவுள்ளார். அதனுடாக உருவாக்கப்படவுள்ள புதிய அரசியலமைப்பில் தேசிய இனப்பிரச்சினைக்கான தீர்வு நிச்சயமாக உள்ளடக்கப்படும் என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவை பற்றிய கலந்துரையாடலொன்று யாழ். மாவட்ட அரச சார்பற்ற நிறுவனங்களின் இணையத்தில் நடைபெற்றது. இதன்போது 2016ஆம் ஆண்டு பிறக்கவுள்ள இந்த சந்தர்ப்பத்தில் அரசாங்கத்தில் இனப்பிரச்சினைக்கான சாத்தியக்கூறுகள் தென்படுகின்றதா என...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் சிறீதரனுக்கும், வடமாகாணசபையின் முதலமைச்சர் சி.வி.விக்கினேஸ்வரனுக்குமிடையில் இன்று காலை கலந்துரையாடல் ஒன்று யாழ்ப்பாணத்தில் இடம்பெற்றுள்ளது. சுமார் இரண்டு மணித்தியாலங்கள் நடைபெற்ற இக் கலந்துரையாடலின் பொழுது தமிழர் பேரவை பற்றிய உருவாக்கம் பற்றியும் அதனுடைய செயற்பாடுகள் குறித்தும் முதலமைச்சர் விக்னேஸ்வரனுடன் கலந்துரையாடிய பாராளுமன்ற உறுப்பின் சிறீதரன் அவர்கள் இப்பேரவை குறித்து முதலமைச்சர் விக்னேஸ்வரன் இவ்வாறு கூறியிருந்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிராகவோ அல்லது அதனுடைய செயற்பாட்டை...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராஜசிங்கத்தின் கொலையில் யார் தொடர்பு..? கொலை நடந்த இடம் எப்படி கொலைக்கான காரணம் என்ன..? கொலையில் நேரடித் தொடர்பாளர்கள் யார்..? இவை பற்றி மகிந்த அறிந்துள்ளாரா? நடந்து முடிந்த கொலை தொடர்பில் முன்னுக்குப் பின் முரனான கருத்துக்கள் நிலவும் காலங்களில் கூட்டமைப்பின் நடவடிக்கை என்ன..? அடுத்த கட்ட நகர்வுகள் விசாரணைகள் எப்படி அமையும்... கொலையாளிகள் இன்று எங்கு உள்ளனர்..? என்பது பற்றியெல்லாம்...