வவுனியா நகரில் செய்தி சேகரித்துக் கொண்டிருந்த போது ஊடகவியலாளர் ஒருவர் தாக்கப்பட்டமை தொடர்பில் நாளை அடையாள அணிவகுப்பு இடம்பெறவுள்ளது. கடந்த வியாழக்கிழமை வவுனியா நகரசபையினால் போக்குவரத்துக்கு இடையூறாக வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொண்டவர்களை அகற்றிய போது வர்த்தகர்களுக்கும், நகரசபைக்கும் இடையில் முரண்பாடு ஏற்பட்டது. இதனை பதிவு செய்து செய்தி சேகரித்த ஊடகவியலாளர் ஒருவர் மீது வர்த்தகர் ஒருவரால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. இச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட சந்தேக நபரை 28 ஆம்...
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தர்மலிங்கம் சித்தார்த்தன் சம்பந்தமாக விசாரணை நடத்தப்பட வேண்டும் என அந்த கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினரான மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார். தமிழ் மக்கள் பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டமை தொடர்பாக இந்த விசாரணை நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார். புளொட் அமைப்பின் தலைவரான சித்தார்த்தன் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பிடம் அனுமதியின்றி அந்த பேரவையின் கூட்டத்தில் கலந்து கொண்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வடக்கு முதலமைச்சர் தலைமையிலான தமிழ்...
வானிலையில் ஏற்பட்டுள்ள குழப்ப மாற்றநிலை காரணமாக இன்று நாட்டின் அனைத்து பாகங்களிலும் பலமான காற்று வீசுவதற்கான சாத்தியம் காணப்படுகின்றது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. அத்துடன் நாட்டின் வடக்கு கிழக்கு வடமத்திய தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சில நேரங்களில் இன்று இடியுடன் கூடிய மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுகிறது என வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது. இம்மழைவீழ்ச்சியினளவு 100 மில்லிமீற்றரைத் தாண்டலாம் எனவும் எதிர்வு கூறப்பட்டுள்ளது. அத்துடன் மத்திய...
வவுனியா, குருமன்காடு, கரப்பங்காடு பகுதியில் மூன்று கடைகள் உடைக்கப்பட்டு துணிகரத் திருட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது. கரப்பங்காட்டிலுள்ள அழகு சாதனப் பொருட்கள் விற்பனை நிலையம், பலசரக்கு வியாபார நிலையம், தொலைபேசி விற்பனை நிலையம் ஆகிய மூன்று கடைகள் உடைக்கப்பட்டு பணம் மற்றும் பொருட்கள் கொள்ளையிடப்பட்டுள்ளன. இன்று காலை குறித்த வர்த்தக நிலையங்களை திறப்பதற்கு அதன் உரிமையாளர்கள் வந்து பார்த்த போதே கடை உடைக்கப்பட்டு திருட்டு போயிருந்தமை தெரியவந்தது. இதனையடுத்து வவுனியா பொலிசில் முறைப்பாடு பதிவு...
யாழ் நெடுந்தீவில் சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்தபின் கொலை செய்த ஈ.பி.டி.பி கட்சி உறுப்பினர் கிருபாவிற்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நெடுந்தீவுப் பகுதியில் கடந்த வருடம் பாலியல் துஸ்பிரயோகத்திற்கு உட்படுத்திய பின்னர், கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்ட சிறுமி, வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவரே மேற்படி கிருபா என்பவர் எனவும், இவர் ஈ.பி.டி.பி கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சில்வஸ்ரின் அலன்ரின் அவர்களின் மெய்பாதுகாவலர்...
  (முதன் முதலாக காட்சி ஊடகத்திற்கு விடுதலை புலிகளின் முன்னாள் தளபதி தயா மோகன் அளித்த பேட்டி தந்தி டிவியில் ஒளிபரப்பு) விடுதலைப்புலிகள் இயக்கத்தில் முக்கிய தளபதியாக இருந்த தயாமோகன், விடுதலைப்புலிகள் இயக்கத்தில் 20ஆண்டு காலம் பணியாற்றியவர். கருணா, விடுதலைப்புலிகள் இயக்கத்தில் இருந்து பிரிந்து சென்றபோது கிழக்கு மாகாண அரசியல் பொறுப்பாளராகப் பணியாற்றியவர் தயாமோகன். 2009 மே மாதம் முள்ளிவாய்க்கால் போர் முடிவுற்றதாக அறிவிக்கப்பட்ட பின்னர் காட்டுக்குள் இருந்து ஜீன் மாதம்...
  தமிழ் மக்கள் அவைக்குள் அங்கத்துவம் பெற்றிருப்பவர்கள் எவரும் பின்கதவு வழியாக வந்தவர்கள் இல்லை. எல்லோரும் முன்கதவால் வந்தவர்களே என நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கு வடக்கு முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் பதிலடி கொடுத்துள்ளார். இன்றைய தினம் தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வின் நிறைவில் இடம்பெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், தமிழ் மக்கள் அவைக்குள் மக்களால் அங்கீகரிக்கப்படாதவர்கள், அங்கீகரிக்கப்படாத கொள்கைகளுடன் நுழைந்து அவற்றை மீண்டும் முன்கொண்டுவர முயற்சிக்கிறார்கள் என கூறிய கருத்து...
  தமிழ் மக்கள் அவைக் கூட்டத்திற்கு வருமாறு தமிழரசு கட்சிக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை: மாவை தமிழ் மக்கள் அவையில் கட்சிகளின் தலைவர்கள் அழைக்கப்பட்டிருக்கும் நிலையில், தமிழரசு கட்சியின் தலைவர் அழைக்கப்படாமல் உறுப்பினர்கள் அழைக்கப்பட்டமை எதற்காக? என ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு தாம் தமிழரசு கட்சி சார்பிலேயே கலந்து கொண்டேன் என தமிழரசு கட்சியின் சிரேஸ்ட உபதலைவர் சி.க.சிற்றம்பலம் தெரிவித்திருக்கும் நிலையில், ; அவர் தமிழரசு கட்சி சார்பில் கலந்து கொள்ளவில்லை, எமது கட்சிக்கு அவ்வாறான அழைப்பு...
தமிழ் மக்கள் அவை 2ம் அமர்வு இன்றைய தினம் யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் நடைபெற்றிருந்த நிலையில் வடகிழக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வு திட்டம் ஒன்றை தயாரிப்பதற்கான 14 பேர் கொண்ட நிபுணர்குழு ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. மேற்படி அவையின் 2ம் அமர்வின் நிறைவில் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே மேற்படி விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. குறித்த விடயம் தொடர்பில் அவையின் இணை தலைவர்களில் ஒருவரான வைத்தியர் பி.லக்ஸ்மன் தெரிவிக்கையில், தமிழ் மக்களுடைய அரசியல் அபிலாசைகளை அரசியல்...
தமிழ் மக்கள் பேரவையில் இணைந்து செயற்பட நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் வருவாராயின் அவரை மகிழ்வுடன் வரவேற்கத் தயாராக இருப்பதாக தெரிவித்துள்ளார் வடமாகாண முதலமைச்சர் க.விக்கினேஸ்வரன். பேரவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு, யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் மற்றும் இணைத்தலைவர்களான வைத்தியகலாநிதி லக்ஸ்மன் மற்றும் த.வசந்தராசா ஆகியோhர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் 32 இற்கும் மேற்பட்ட கட்சிகளது தலைவர்கள், பொது அமைப்புக்களது பிரதிநிதிகள்,...