பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லை
Thinappuyal News -0
பணத்துக்கு இடமளித்து இளம் சமூகத்தை தவறாக வழிநடத்தும் ஒழுக்கக்கேடான நிகழ்வுகளை ஏற்பாடு செய்வதற்கு அரசாங்கம் இனிமேல் இடமளிக்கப்போவதில்லையென ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
அம்பாறையில் இன்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்ட ஜனாதிபதி , கொழும்பில் அண்மையில் இடம்பெற்ற வெளிநாட்டு கலைஞரொருவரின் பங்குபற்றலில் அண்மையில் இடம்பெற்ற இசை நிகழ்ச்சி தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது உரையாற்றிய ஜனாதிபதி குறித்த நிகழ்ச்சியின் போது பெண்கள் மார்புக் கச்சையை கழற்றி மேடையை...
தேசிய இனப்பிரச்சினை இழுத்தடிக்கப்பட்டு வருவதற்கும் அதற்கு ஒரு தீர்வை காணமுடியாது இருப்பதற்கும் பிரதான காரணம் தமிழ் தலைமைத்துவங்களிடையே காணப்படும் ஒற்றுமையீனங்களும் பதவி பேராசைகளும் குரோத எண்ணங்களுமேயாகும்.
தேசிய இனப்பிரச்சினையின் பின்னணியில் தமிழ் மக்கள் என்றுமில்லாத வகையில் பாரிய இழப்புக்களை சந்தித்து, இன்றும் அதிலிருந்து மீள முடியாதவர்களாக துன்பப்பட்டிருக்கும் நிலையிலும் கூட, தமிழ் மக்களை அடகு வைத்து வியாபாரம் செய்யும் ஒருசில தமிழ் தலைமைத்துவங்களின் போக்கில் எந்தவிதமான மாற்றத்தையும் காணமுடியாத நிலைமைகளே...
ஹட்டன் - சமனலகம பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 12 குடும்பங்களைச் சேர்ந்த மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
சமனலகம பகுதியில் இன்று முற்பகல் இந்த மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மண்சரிவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மாற்று இடங்களை வழங்கும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சமனலகம பகுதிக்கு பொறுப்பான கிராம உத்தியோகத்தர் கூறினார்.
சமனலகம பகுதியில் ஏற்கனவே மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டிருந்ததாகவும், அதே பகுதியில் இன்று மண்சரிவு ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த...
ரூபாய்களுக்கும், சதங்களுக்கும் இடமளித்து இளம் சமூகத்தை வழி தவறச் செய்யும் செயற்பாடுகளுக்கு அரசாங்கம் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ரூபாய்களைக் கருத்திற் கொண்டு அவ்வாறான வேலைத் திட்டங்களுக்கு அனுமதியளிப்பதை விட அது குறித்த நன்மை தீமைகளை ஆராய்ந்து செயற்படுவது அனைவரினதும் பொறுப்பு என அம்பாறையில் இன்று நடைபெற்ற நிகழ்வொன்றின் போது ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறான விமர்சனங்கள் வந்தாலும் எமது கலாசாரம் மற்றும் ஒழுக்கத்திற்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...
திருகோணமலை - கிண்ணியா பொலிஸ் பிரிவிற்குட்பட்ட உப்பாறு பாலத்துக்கு அருகில் தலையில் காயங்களுடன் கரையொதுங்கிய சடலமொன்றை இன்று காலை மீட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
ஆலங்கேணி கிராமத்தைச் சேர்ந்த 05 பிள்ளைகளின் தந்தையான ஏகாம்பரம் அன்புச்செல்வன் (48) என்பவரே சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
கிண்ணியா, கொட்டியாரக்குடா ஆற்றில் மீன்பிடிப்பதற்காக கடந்த வெள்ளிக்கிழமை (25) தனது நண்பர்கள் இருவருடன் சென்ற இவர், ஆற்றில் வலையை வீசி விட்டுச் சென்றுள்ளார்.
பின்னர், அவ்வலையில் மீன்கள் அகப்பட்டுள்ளதா எனப் பார்வையிடச்...
தமிழ் மக்கள் அவையின் 2ம் அமர்வு இன்று காலை 10 மணிக்கு, யாழ்.பொதுநூலக கேட்போர்கூடத்தில் ஆரம்பமானது. இதில் வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொண்டுள்ளார்.
இனப்பிரச்சினை தீர்வுக்கான தீர்வுத்திட்டத்தை தயாரிக்கும் நிபுணர் குழுவை உருவாக்குதல், ஜ.நா தீர்மானம் நடைமுறைப்படுத்தப்படுவதை அவதானிப்பதற்கான குழுவை உருவாக்குதல், மற்றும் கலை,கலாச்சார விடயங்களை கையாள்வதற்கான குழுவை உருவாக்கல் போன்றவற்றுக்காக தமிழ் மக்கள் அவை இன்று 2ம் அமர்வை நடத்துகின்றது.
வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரன் கலந்து கொள்வாரா மாட்டாரா...
சிம்பு நடிப்பில் நீண்ட நாட்களாக கிடப்பில் இருக்கும் படம் இது நம்ம ஆளு. இப்படம் அடுத்த வருடம் பிப்ரவரி மாதம் திரைக்கு வரும் என கூறப்பட்டது.
மேலும், இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் வெளியிடுவதாகவும் இருந்தது. ஆனால், சமீபத்தில் லீக் ஆன பீப் பாடலால் சிம்புவிற்கு பல பிரச்சனைகள் எழுந்துள்ளது.
இதை காரணம் காட்டி இது நம்ம ஆளு படத்தை வெளியிடும் முயற்சியில் இருந்து தேனாண்டாள் பின் வாங்கியுள்ளது. ஆனால், சொன்ன தேதியில்...
ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் பூலோகம். இப்படம் கிட்டத்தட்ட 2 வருடங்களுக்கு முன் தொடங்கப்பட்டது.
ஒரு சில காரணங்களால் படத்தின் ரிலிஸ் தள்ளிப்போக, ஒரு வழியாக வெளிவந்தது. இப்படம் ரசிகர்களால் மிகவும் வரவேற்கப்பட்டு வருகின்றது.
படத்தில் வட சென்னை பாக்ஸர்கள் பற்றி காட்டியிருப்பது சென்னை மக்களை மிகவும் கவர்ந்துள்ளது. பூலோகம் கடந்த 3 நாட்களில் சென்னையில் மட்டும் ரூ 1.5 கோடி வரை வசூல் செய்துள்ளதாம்.
இளைய தளபதி விஜய் நடிப்பில் தெறி படம் வேகமாக படப்பிடிப்பு நடந்து வருகின்றது. இப்படத்தை அட்லீ இயக்க விஜய்க்கு ஜோடியாகஎமி, சமந்தா நடித்துள்ளனர்.
இப்படத்தின் சண்டைக்காட்சிகள் அனைத்தும் சமீபத்தில் எடுத்து முடிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்னும் ஒரே ஒரு பாடல் மட்டுமே மீதம் உள்ளதாம்.
இதை கோவாவில் செட் அமைத்து எடுக்கவுள்ளதாக கோலிவுட் வட்டாரங்களில் தெரிவிக்கப்படுகின்றது.
சந்தானம் தற்போது முழு நேர ஹீரோவாகிவிட்டார். இவர் அடுத்து தன் நண்பர் ராம்பாலா இயக்கும் படத்தில் நடிக்கவுள்ளார். இப்படம் முடிந்த கையோடு அறிமுக இயக்குனர் ஒருவர் படத்தில் நடிக்க கமிட் ஆகியுள்ளார்.
அவர் மணிரத்னத்திடம் உதவியாளராக பணிபுரிந்தவராம். மேலும், இப்படத்திற்கு இசை சந்தோஷ் நாரயாணன் என கூறப்படுகின்றது.
மேலும், இப்படத்திற்கு சந்தானத்திற்கு ஜோடியாக ஒரு முன்னணி நடிகையிடம் பேச்சு வார்த்தை நடந்து வருகிறதாம். அவரும் சம்மதம் தெரிவிக்கும் நிலையில் தான் உள்ளதாக...