சிம்புவிற்கு மிகவும் கஷ்டக்காலம் போல. அவர் எது செய்தாலும் பிரச்சனையில் தான் சென்று முடிகின்றது/
இந்நிலையில் யாரோ லீக் செய்த பீப் பாடலால் சிம்புவிற்கு கோர்ட், வழக்கு என ஆரம்பித்து கைது வரைக்கும் தற்போது வந்துள்ளது.
மேலும் சிம்பு தலைமறைவாகி விட்டார் என சில கூற, கோபமானடி.ஆர் ‘சிம்பு என்ன பயங்கரவாதியா? அவர் இங்கு தான் இருக்கிறார்.
எங்கும் ஓடி ஒழிய வில்லை, எத்தனை பிரச்சனை வந்தாலும் தமிழகத்தை விட்டு செல்ல மாட்டோம்’...
சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வுகள் அனுஷ்டிப்பு
Thinappuyal -
சுனாமி அனர்தத்தின் போது உயிர் நீத்தவர்களின் 11ம் ஆண்டு நினைவுநாள் நிகழ்வு 26.12.2015 அன்று காலை 9.25மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேசத்தில் உயிர்நீத்தவர்களின் நினைவு இடத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச வர்த்தக சங்கத் தலைவர் திரு.நீதன் தலைமையில் இடம்பெற்றது. உயிர்நீத்தவர்களுக்கான பிரதான பொதுச்சுடரினை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும், முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் ஏற்றிவைத்தார். தொடர்ந்து உறவுகளுக்கான ஈகைச்சுடரினை உறவினர்கள், பொதுமக்கள், பாடசாலை அதிபர்கள்,...
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் கிராம அமைப்புக்களுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வழங்கிவைப்பு
Thinappuyal -
கிராம பொது அமைப்புக்களுக்கான ஒலிபெருக்கி சாதனங்கள் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான கௌரவ வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கி வைக்கப்பட்டது. முல்லைத்தீவு மல்லாவி கல்விளான், வவுனியா கோமரசங்குளம், செட்டிக்குளம், வாரிக்குட்டியூர் ஆகிய இடங்களுக்கு இவ் உதவிகள் வழங்கிவைக்கப்பட்டது.
வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் விளையாட்டு உபகரணங்கள் வழங்கி வைப்பு
Thinappuyal -
முல்லைத்தீவு கரைதுறைப்பற்று பிரதேச செயலர் பிரிவின் கொக்கிளாய் கருணாட்டங்கேணி, நாயாறு, சிலாவத்தை, வட்டுவாகல், முள்ளியவளை ஆகிய விளையாட்டு கழகங்களுக்கனா விளையாட்டு உபகரணங்களை வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும் முல்லை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவருமான வைத்திய கலாநிதி சி.சிவமோகன் அவர்களால் வழங்கிவைக்கப்பட்டது. இந்நிகழ்வில் கரைதுறைப்பற்று பிரதேச செயலாளர், விளையாட்டுக் கழக உறுப்பினர்கள் கலந்துகொண்டனர்.
இன்னும் சில நாட்களில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது பதவியின் ஒரு வருட கால சேவையை பூர்த்தி செய்ய போகிறார். இதனால் மக்கள் எவ்வளவு பயனடைந்துள்ளார்கள்?
ஜனாதிபதி மைத்திரிபாலவின் வருகையை தொடர்ந்து, ஜனவரி 9ம் திகதி, திரு ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஓர் புதிய அரசு நியமிக்கப்பட்டது.
ஆட்சி மாற்றத்தின் மூலம், ஒரு வருடத்தில் பாதிக்கப்பட்டோர், மக்கள், விசேடமாக வடக்கு கிழக்கு வாழ் மக்கள் எவற்றை புதிதாக அடைந்துள்ளார்கள்.
இக் கட்டுரையை தொடர்ந்து...
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜோசப் பரராசசிங்கம் அவர்களை சிலர் திட்டமிட்டு படுகொலை செய்தனர் என மட்டக்களப்பு மறைமாவட்ட ஆயர் பொன்னையா ஜோசப் தெரிவித்தார்.
தமிழ் மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட படுகொலைகளையும் மனித உரிமை மீறல்களையும் சர்வதேச மட்டத்திற்கு எடுத்து சென்ற ஜோசப் பரராசசிங்கம் அவர்களை திட்டமிட்டு படுகொலை செய்தனர் என்பதை தான் உறுதியாக நம்புவதாக அவர் தெரிவித்தார்.
2005ம் ஆண்டு நத்தார் நள்ளிரவு ஆராதனையின் போது படுகொலை செய்யப்பட்ட தமிழ்...
சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது
Thinappuyal News -
மத்திய கிழக்கு நாடுகளில் 9 இலங்கையர்கள் மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பதாக வெளிநாடுகளில் பணிப்புரியும் தொழிலாளர்களின் உரிமைகளுக்காக செயற்பட்டு வரும் உணர்வுபூர்வமான மனிதர்களின் கூட்டு என்ற அமைப்பு தெரிவித்துள்ளது.
சவூதி அரேபியாவில் கல்லெறிந்து கொலை செய்யப்படவிருந்த பெண்ணுக்கு வழங்கப்பட்ட தண்டனை குறைக்கப்பட்டமை சிறந்தது என்றாலும் மேலும் பலர் மரண தண்டனையை எதிர்நோக்கி இருப்பதாக அந்த அமைப்பு குறிப்பிட்டுள்ளது.
இவ்வாறு மரண தண்டனையை எதிர்நோக்கியிருப்பவர்களில் இரண்டு பேர் பெண்கள் எனவும் அந்த அமைப்பு கூறியுள்ளது.
சவூதியில்...
சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.
Thinappuyal News -
சுனாமி பேரலையின் 11ம் ஆண்டு நினைவு அஞ்சலி மன்னாரில் உணர்வுபூர்வமாக அனுஸ்க்கப்பட்டது.
சுனாமி பேரலையில் சிக்கி உயிர் நீத்த உறவுகளுக்கு அஞ்சலி செலுத்தும் வகையில் மன்னார் திருமறைக்கலாமன்றத்தின் மாவட்ட இணைப்பாளர் ஏ.ரி.மோகன் ராஜ் தலைமையில் மன்னார் திருமறைக்கலாமன்றத்தில் அஞ்சலி நிகழ்வு இடம் பெற்றது.
இதன் போது உயிரிழந்த மக்களுக்கு மெழுகுவர்த்தி ஏற்றப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டதுடன்,
குறித்த அஞ்சலி நிகழ்வில் வடமாகாண சபை உறுப்பினர் வைத்திய கலாநிதி ஜீ.குணசீலன், மன்னார் நகர சபையின் முன்னாள்...
சுனாமி தாக்கம் ஏற்பட்டு இன்றுடன் 11வருடம் நிறைவடைகின்றது. இதனையொட்டி சுனாமி தாக்கத்தினால் அழிக்கப்பட்ட இலங்கையின் நான்காவது மாவட்டமான மட்டக்களப்பு மாவட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் இடம்பெற்றன.
மட்டக்களப்யுபு மாவட்டத்தில் மண்முனை வடக்கு, காத்தான்குடி, ஆரையம்பதி, களுவாஞ்சிக்குடி, வாகரை ஆகிய பிரதேச செயலக பிரிவுகள் சுனாமி தாக்கத்தால் பெரிதும் பாதிக்கப்பட்டன.
இம்மாவட்டத்தில் சுனாமியினால் 2800 பேர் பலியானதுடன் 600க்கும் அதிகமானோர் காணாமல் போயுள்ளனர்.
நாவலடி, டச்பார், புதுமுகத்துவாரம் ஆகிய கிராமங்கள் முற்றாக அழிக்கப்பட்டன.இக்கிராமத்தில் மாத்திரம் 1800பேர்...
பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் தலைமையில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு புதுக்குடியிருப்பில் இடம்பெற்றது
Thinappuyal News -
முல்லைத்தீவு மாவட்டத்தில் 2004 ம் ஆண்டு இடம்பெற்ற ஆழிப்பேரலை இயற்கை அனர்த்தத்தில் காவுகொள்ளப்பட்ட உறவுகளில் ஒரு தொகுதியினரின் உடல்கள் புதைக்கப்பட்ட புதுக்குடியிருப்பு சுனாமி நினைவாலயம் அமைக்கப்பட்ட இடத்தில் ஆழிப்பேரலை நினைவு நிகழ்வு சிறப்புற இடம்பெற்றது.
இன்று காலை 9.25 மணிக்கு பிரதான சுடர் கௌரவ பாராளுமன்ற உறுப்பினர் வைத்திய கலாநிதி சிவமோகன் அவர்களால் ஏற்றப்பட்டதை தொடர்ந்து உறவுகள் மற்றும் பொதுமக்களால் சுடர்கள் ஏற்றி மலர் துவி அகவணக்கம் செலுத்தி அஞ்சலி...