இலங்கைக் கடற்பரப்பில் அத்துமீறி மீன்பிடித்த தமிழக மீனவர்கள் 34 பேர் இன்று செவ்வாய்க்கிழமை அதிகாலை கடற்படையினர் கைதுசெய்தனர். அத்துடன் இந்த மீனவர்கள் மீன்பிடிக்குப் பயன்படுத்திய 7 படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றியுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் 21 நாகை மீனவர்களும், இராமேஸ்வரத்தைச் சேர்ந்த 11 மீனவர்களும் அடங்குகின்றனர். மன்னார், நெடுந்தீவு, பருத்தித்துறைக் கடற்பகுதிகளில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளன -  
விடுதலைப் புலிகளின் முக்கிய தலைவர்கள் உயிரிழந்ததாக நம்பப்படும் வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தனியான விசாரணை நடத்த மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. காணாமல் போனோர் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்திருந்த மெக்ஸ்வெல் பரணகம தலைமையிலான ஜனாதிபதி ஆணைக்குழு அண்மையில் அதன் அறிக்கையை ஜனாதிபதி மற்றும் பிரதமரிடம் கையளித்திருந்தது. இந்நிலையில் குறித்த ஆணைக்குழுவின் விசாரணையின் போது முறைப்பாடு செய்யப்பட்ட வெள்ளைக்கொடி சம்பவம் தொடர்பில் தற்போது தனியான விசாரணை மேற்கொள்ள குறித்த ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இதற்கென உயர்நீதிமன்ற...
  சமாதான நீதவான் அமிர்தலிங்கம் தலைமையில், வவுனியா, ஓமந்தை வீரகத்தி விநாயகர் ஆலயத்தில் 24.10.2015 அன்று நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தனுக்கு வரவேற்பும், ஓமந்தை பிரதேசத்தில் தரம் ஐந்து புலமைப்பரிசில் பரீட்சையில் சித்தியெய்திய ஐம்பது மாணவர்களுக்கு கௌரவிப்பும் வழங்கும் நிகழ்வு இடம்பெற்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம், வடமாகாண சபை உறுப்பினர்களான ஜி.ரி.லிங்கநாதன், எம்.பி.நடராஜ்,...
  ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்புரிமையில் இருந்து விலகி ஆனந்தசங்கரி தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து, தான் அரசியல் நடவடிக்கைகளில் ஈடுபடவுள்ளதாக கருணா என்று அழைக்கப்படும் விநாயகமூர்த்தி முரளிதரன் கூறியிருக்கின்றார். இதேவேளை தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அதிருப்தி அடைந்திருப்பவர்களையும் ஏனைய தமிழ் இயக்கங்களையும் இணைத்து புதிய கூட்டணி ஒன்றை அமைக்கப்போவதாக தமிழர் விடுதலைக்கூட்டணி தலைவர் வீ.ஆனந்தசங்கரி இன்று யாழ்ப்பாணத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். கருணா தன்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை வரவேற்பதாக தெரிவித்துள்ள ஆனந்தசங்கரி...
  ஊடகவியலாளர் நடேசனை கொலை செய்த சம்பவத்தில் பிள்ளையானுக்கு நேரடி தொடர்பு என தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பு எல்லை வீதியில் மே மாதம் 31ஆம் திகதி காலை ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் தனது அலுவலகத்திற்கு செல்லும் வேளையில் சுட்டுக்கொல்லப்பட்டார். நடேசன் தனது அலுவலகம் நோக்கி மோட்டார் சைக்கிளில் சென்ற போது எதிரில் மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் நடேசனை சுட்டுக்கொன்றனர். மோட்டார் சைக்கிளிலில் வந்தவர்களில் ஒருவர் பிள்ளையான் என தெரிவிக்கப்படுகிறது. அக்காலப்பகுதியில் பிள்ளையானும்...
  கராத்தே வசந்தவின் கொலை! மேர்வின் சில்வாவிற்கும் அவரது மகனுக்கும் சிவப்பு எச்சரிக்கை அநுராதரபுரத்தில் கடந்த 24 ம் திகதி கொல்லப்பட்ட வசந்த விக்ரம டி சொயிசா என்ற கராத்தே வசந்தவின் கொலையானது, முன்னாள் அமைச்சர் மேர்வின் சில்வா மற்றும் அவரது மகன் மாலக்க சில்வா ஆகியோருக்கு விடப்பட்டுள்ள சிவப்பு எச்சரிக்கையென ஒருவர் தெரிவித்துள்ளார். அநுராதபுரம் நகரில் 50 ம் கடை பிரதேச முதித்தா மாவத்தையில், உள்ள ஜெனராமா இரவு கழியாட்ட விடுதிக்குள்,...
  அநுராதபுரம், கடபனஹா பகுதியில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றின் உரிமையாளரான பிரபல கராத்தே மாஸ்டர் வசந்த சொய்சா, 20 பேரடங்கிய கும்பலொன்றால் கூரிய ஆயுதத்தால் வெட்டுப் படுகொலை செய்யப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் இடம்பெற்றுள்ளது. முகங்களை மூடியவறு குறித்த இரவு விடுதிக்குள் நுழைந்த மேற்படி குமபல், அவரைத் தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளது. இதன்போது பெற்றோல்குணடுத் தாக்குதலும் நடத்தப்பட்டுள்ளது. விடுதியில் பணியாற்றிய ஊழியர்கள் 3 பேர் மீதும் தாக்குதல்...
    ஜனா­தி­பதி மாளி­கையில் அமைக்­கப்­பட்­டுள்­ளமை நிலக்கீழ் சொகு­சு­மா­ளி­கை­யல்ல அது பிரபா­கரனின் தாக்­கு­த­லுக்கு அஞ்சி அமைக்­கப்­பட்ட பதுங்­கு­கு­ழி­யாகும். விடு­தலைப் புலிகள் பல­ம­டைந்­தி­ருந்த காலத்தில் எம்மை பாது­காக்­க­வேண்­டிய தேவை இருந்­தது. அன்­றைய கால­கட்­டத்தில் முக்­கியபாது­காப்பு கலந்­து­ரை­யா­டல்­க­ளையும் முக்­கிய தீர்­மா­னங்­க­ளையும் நாம் ஜனா­தி­பதி மாளி­கை­யி­லேயே மேற்­கொள் வோம். ஜனா­தி­பதி மாளிகை தாக்­கப்­பட்டால் இந்த பதுங்­கு­கு­ழி­யி­லி­ருந்து செயற்­படும் நோக்­கத்­திற்­கா­கவே இதனை உரு­வாக்­கினோம் என்று முன்னாள் ஜனா­தி­ப­தியும் தற்­போ­தைய குருநாகல் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மஹிந்த ராஜ­பக்ஷ தெரி­வித்தார். மைத்­தி­ரி­பால சிறி­சேன...
    இங்கிலாந்தின் டெட் ரிச்சர்ட்ஸ் (56) என்பவர் தீவிர கிளி பிரியர். உடும்பு, நாய் என்பவற்றுடன் 4 பஞ்சவர்ணக் கிளிகளையும் வளர்த்து வருகின்றார். தான் ஆசையாக வளர்த்துவரும் பஞ்சவர்ணக் கிளிகளைப் போல் மாறுவதற்காக இவர் அண்மையில் தனது இரு காதுகளையும் அறுவை சிகிச்சை மூலம் நீக்கியுள்ளார்.    
ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகி, வீ.ஆனந்தசங்கரியின் தலைமையிலான தமிழர் விடுதலைக் கூட்டணியில் இணைந்து கொள்ள போவதாக முன்னாள் பிரதி அமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன் தெரிவித்துள்ளார். எமது செய்திச் சேவைக்கு வழங்கிய பிரத்தியேக செவ்வியில் அவர் இதனை உறுதிப்படுத்தினார். இந்த புதிய இணைவு தொடர்பில் எதிர்வரும் 14 ஆம் திகதி செய்தியாளர் சந்திப்பொன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், இந்தநிலையில், ஸ்ரீ லங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிக் கொள்வதற்கான அறிவித்தல் கடிதத்தை...