கிரிக்கெட் வீரர்களின் வாழ்க்கையில் சில நிகழ்வுகள் நொடிப் பொழுதில் அனைத்தையும் மாற்றிவிடும். அந்த நிகழ்வுகள் தமிழக கிரிக்கெட் வீரர்களான முரளிவிஜய், தினேஷ் கார்த்திக் வாழ்க்கையில் நடந்தது. தற்போது இருவரும் இந்திய அணிக்காக விளையாடி வருகின்றனர். முரளி விஜய் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடவுள்ளார். இருவரும் சென்னையை சேர்ந்தவர்கள் என்பதால் முதல்தரப் போட்டிகளில் விளையாடும் போது இருவரும் சிறந்த நண்பர்களாகவே இருந்தனர். ஆனால் அதன் பிறகு ஐபிஎல் போட்டியில் நடந்த சம்பவம்...
இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான 4வது ஒருநாள் போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை நடக்கிறது. இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் செய்துள்ள தென் ஆப்பிரிக்க அணி 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது. இதில் தென் ஆப்பிரிக்கா 2-1 என்ற கணக்கில் முன்னிலையில் உள்ளது. இந்த நிலையில் சென்னையில் நடக்கும் 4வது ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா வெற்றி பெறும் பட்சத்தில் ஒருநாள் தொடரை கைப்பற்றும். அதே சமயம் ஒருநாள்...
பண்ணையில் குதிரைகளுடன் நேரத்தை செலவிட்டது தனக்கு தன்னம்பிக்கையை மீட்க உதவியதாக இந்திய வீரர் ஜடேஜா தெரிவித்துள்ளார். மோசமான பார்ம் காரணமாக வங்கதேச தொடருக்கு பின்னர் ஜடேஜா இந்திய அணியில் இடம்பெறவில்லை. இந்நிலையில் 4 மாத இடைவெளிக்கு பிறகு தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஜடேஜா இடம்பெற்றுள்ளார். இதற்கு ரஞ்சி கிண்ணத் தொடரில் சிறப்பாக செயல்பட்டது காரணமாக அமைந்தது. சவுராஷ்டிரா அணியில் விளையாடும் ஜடேஜா 2 போட்டிகளில் 24 விக்கெட்டுகளுடன், 2 அரைசதமும்...
விஷக்கடிக்கு மருந்தாக இருப்பதும், வயிற்று போக்கை சரிசெய்ய கூடியதும், முடி உதிர்வை தடுக்க வல்லதும், தலைவலியை போக்க கூடியதுமான கோபுரம் தாங்கி செடியின் மருத்துவ குணங்களை பற்றி நாம் பார்ப்போம்.கால்வாய் ஓரங்கள், நீர்பாங்கான இடங்களில் பகுதிகளில் கிடைக்க கூடியது கோபுரம் தாங்கி செடி. இதன் இலைகள் மேல் பூச்சு மருந்தாகிறது. வேர்கள் உள் மற்றும் வெளிபூச்சு மருந்தாகிறது. கோபுரம் தாங்கி செடி நுண்கிருமிகளை அழிக்க கூடியது. காய்ச்சலை தணிக்கவல்லது....
புண்களை ஆற்றக் கூடியதும், சிறுநீரக கற்களை கரைக்க வல்லதும், வயிற்றுபோக்கை கட்டுப்படுத்த கூடியதும், மருக்கள், காலாணிகளை குணமாக்கும் தன்மை கொண்டதுமான ரண கள்ளியை பற்றி இன்று நாம் பார்ப்போம். அழகுக்காக வளர்க்க கூடியது ரண கள்ளி. இது கிருமி நாசினியாக விளங்குகிறது. கொசுக்களை விரட்ட கூடிய தன்மை உடையது. ரண கள்ளியை வீட்டு முற்றத்தில் கட்டி வைத்தால் கொசுக்கள் வராது. மேல்பூச்சு மருந்தாக போடும்போது விஷக்கடிக்கு மருந்தாகிறது. வலி...
தோல்நோய்களை குணமாக்க கூடியதும், வாதத்தை போக்க வல்லதும், உடலுக்கு பலம் தரக்கூடியதுமான பரங்கி பட்டை குறித்து இன்று பார்ப்போம். பரங்கி பட்டை நாட்டு மருந்து கடைகளில் கிடைக்கும். உடல் தேற்றியாக விளங்கும் பரங்கி பட்டையில் வைட்டமின், மினரல் அதிகளவு உள்ளது. பால்வினை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் உடலை தேற்றக்கூடியது. மூட்டு வலி, வீக்கத்தை சரி செய்யும். உடலுக்கு பலம் தரும் டானிக்காகிறது.பரங்கி பட்டையை பயன்படுத்தி வாதத்துக்கான மருந்து தயாரிக்கலாம். தேவையான...
நலம் தரும் நாட்டு மருத்துவத்தில் இன்று விராலி இலையின் மருத்துவ குணங்களை பற்றி பார்க்கலாம். விராலி தமிழகம் எங்கும் புதர் செடியாக வளரக்கூடிய தாவரமாகும். மலைப்பாங்கான இடங்களில் அதிகம் காணப்படும். இது வெப்பத்தை நன்கு தாங்கி வளரும் மரமாகும். ஜூடோனியா விஸ்கோசா என்ற தாவரப் பெயரை கொண்டதாக விளங்குகிறது.  இந்த செடி பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டதாக விளங்கி வருகிறது. இதன் சாற்றை பயன்படுத்தி பாதரசத்தை மாற்றக் கூடிய...
தினசரி இரவில் சிவப்பு ஒயின் மதுவைக் குடிப்பது, ‘டைப்-2’ நீரிழிவு நோய்க்கு மருந்தாக அமைகிறது என சமீபத்திய மருத்துவ ஆய்வு மூலம் தெரியவந்துள்ளது.இஸ்ரேல் நாட்டின் நெகேவ் நகரில் உள்ள பென்-குரியான் பல்கலைக்கழகம், கடந்த 2 ஆண்டுகளாக ‘டைப்-2’ நீரிழிவு நோய் தாக்கிய 224 பேரிடம் ஆய்வை மேற்கொண்டது.சிவப்பு ஒயினைப் பருகியவர்களுக்கு ஆழ்ந்த தூக்கம், சீரான ஜீரண சக்தி மட்டுமல்லாது இதயத்தைப் பாதுகாக்கும் அடர்த்தியான எச்.டி.எல். கொழுப்பு அதிகரித்திருப்பது ஆய்வில்...
பூமி நிச்சயம் அழியப் போவதில்லை. உலகம் அழியப் போகிறது. பூமியே அழியப் போகிறது என்பதாகப் பல ஊடங்கங்கள் மூலம் பரப்பப்படுகிற வதந்திகளை நம்பாதீர்கள். எல்லாமே கட்டுக்கதை பூமி அழியப் போகிற்து என்று வதந்தி கிளப்புவோர் தங்களது கூற்றுக்கு ஆத்ரவாகக் கூறுகின்ற ”ஆதாரங்களுக்கு” எந்த அறிவியல் அடிப்படையும்  இல்லை. உலகம் அழியப் போவதாகப் பல ஆண்டுகளாக அவ்வப்போது கிளம்பி வந்துள்ள அனைத்து வதந்திகளும் பொய்யாகிப் போயின. இப்போதைய வதந்தியும் அப்படி பொய்யாகிப் போகிற வதந்தியே. தமிழகத்தில்...
அக்னி-4 ஏவுகணை சுமார் 3 ஆயிரம் கிலோமீட்டர் தொலைவில் உள்ள இலக்குகளைத் தாக்க வல்லது. சீனாவின் பெரும்பாலான பகுதிகளை இந்த ஏவுகணை கொண்டு தாக்க இயலும். இதன் முகப்பில் அணுகுண்டை வைத்து அனுப்ப முடியும். ஆகவே தகுந்த பதிலடி கிடைக்கும் என்பதால் சீனா தனது ஏவுகணைகளைக் கொண்டு இந்தியாவை மிரட்டத் துணியாது. அணுகுண்டு அல்லது அணுகுண்டுகளைச் சுமந்து நீண்ட தொலைவு பறந்து தாக்கக்கூடிய ஏவுகணைகள் ஒரு நாட்டுக்கு சிறந்த...