சுவாசக் கருவியை அணிந்து கொண்டு பலரும் கடலுக்குள் ஜாலியாக மீன்களுக்கு நடுவே வளைய வளைய நீந்தி வருகின்ற காட்சிகளை டிவியில் டிஸ்கவரி போன்ற சேனல்களில் பார்த்திருப்பீர்கள். இதைப் பார்க்கும் போது நமக்கும் இது போன்று கடல் நீருக்குள் நீந்துவதற்கு ஆசையாக இருக்கும்.
நுனோ கோம்ஸ்
இப்படி கடலில் நீந்துபவர்கள் எவ்வளவு ஆழம் வரை செல்வர் என்று உங்களால் ஊகித்துக் கூற முடியுமா? வெறும் 10 மீட்டர் ஆழம் தான். இது பெரிய ஆழமில்லை. ஆனால்...
வானில் உள்ள விதவிதமான நட்சத்திரங்களை ஆராய்ந்து தகவல்சேகரிப்பதற்காக இந்திய விண்வெளி அமைப்பு (இஸ்ரோ)அஸ்ட்ரோசாட் (Astrosat) என்னும் பெயர் கொண்ட விசேஷசெயற்கைக்கோள் ஒன்றை 28 ஆம் தேதியன்று ராக்கெட் மூலம்உயரே செலுத்தியுள்ளது. இதை பறக்கும் டெலஸ்கோப் என்றுவருணிக்கலாம்.
ஏனெனில் இது செயற்கைக்கோள் போல பூமியைச் சுற்றிச் சுற்றிவருகின்ற அதே நேரத்தில் விண்வெளியை நோக்கியபடிநட்சத்திரங்களை ஆராயும். பூமியில் அதாவது தரையில் அமைந்தடெலஸ்கோப்புகள் மூலம் கண்டறிய முடியாத விஷயங்களைக்கண்டறிவது அதன் நோக்கமாகும்.
இந்தியா உட்பட உலகில் பல நாடுகளில் எண்ணற்றடெலஸ்கோப்புகள் ஏற்கெனவே...
நமது பூமியிலிருந்து மிக மிகத் தொலைவில் இன்னொரு பூமி - அதாவது நமது பூமி மாதிரியில் ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
நமது பூமியானது சூரியனை ( சூரியன் ஒரு நட்சத்திரமே) சுற்றி வருகிறது. இப்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ள பூமி போன்ற கிரகமும் ஒரு நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. இப்படி ஒரு கிரகம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதில் அப்படி என்ன அதிசயம் இருக்கிறது என்று கேட்கலாம்.
சூரிய மண்டலத்துக்கு அப்பால் விண்வெளியில் ஏராளமான நட்சத்திரங்கள் உள்ளன. அப்படியான...
ஊடகவியலாளர் பிரகித் எக்னெலிகொட காணாமல் போன சம்பவத்திற்கு பின்னால் செயற்பட்டவர்கள் தொடர்பில் இதுவரையில் பல தகவல்களை சேகரித்துள்ளதாக இரகசிய பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இந்த காணாமல் போன சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள 11 பேருக்கு, மேலதிகமாக மேலும் பலரிடம் வாக்குமூலம் பெற்றுகொள்ளப்பட்டுள்ளது.
அத்துடன் எக்னெலிகொடவுடன் நெருக்கமாக செயற்பட்டு அவரை கிரிதலை முகாமிற்கு அழைத்து சென்று கிரிதலை முகாமில் தடுத்து வைத்திருந்தமை மற்றும் அந்த முகாமில் குறித்த காலக்கட்டத்தில் செயற்பட்ட இராணுவப் பிரிவுகளுக்கு...
இந்திய அமைதிகாக்கும் படையினால் கடந்த 1987ம் ஆண்டு படுகொலை செய்யப்பட்ட யாழ்.போதனா வைத்தியசாலை பணியாளர்களின் 28ம் ஆண்டு நினைவு நாள் இன்றைய தினம் காலை போதனா வைத்தியசாலையில் நினைவுகூறப்பட்டுள்ளது.
இன்றைய தினம் காலை 9 மணிக்கு போதனா வைத்தியசாலை பணிப்பாளர் த.சத்தியமூர்த்தி தலமையில் நினைவு நாள் நடைபெற்றது.
இதன்போது படுகொலை செய்யப்பட்ட 21பணியாளர்களினதும் உறவினர்கள் கலந்து கொண்டு கண்ணீர்மல்க ஈகை சுடர்களை ஏற்றினர்.
இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் இறுதிக்கட்ட யுத்தத்தின்போது நடைபெற்ற போர்க்குற்றங்கள் மற்றும் மனித உரிமை மீறல்கள் தொடர்பான உதலாகம மற்றும் பரணகம ஆணைக்குழு அறிக்கைகளை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார்.
இதில் மெக்ஸ்வெல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான செனல்4 காணொளி உண்மையானது என்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது. அத்துடன் குறித்த காணொளி தொடர்பில்...
ரவி கருணாநாயக்கவின் பெயர் ரவீந்திர சந்தேஷ் கணேசன்! அடித்துக் கூறுகிறார் பந்துல குணவர்தன
Thinappuyal -
நிதியமைச்சர் ரவி கருணாநாயக்கவுக்கு எதிர்க்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன புதிதாக நேற்று சபையில் தமிழ்ப் பெயரை சூட்டி அவரை தமிழராக வர்ணித்தார்.
அத்துடன் ரவீந்திர சந்தேஷ் கணேசன் என்பதுவே ரவி கருணாநாயக்கவின் உண்மையான பெயர் என்றும் அந்த பெயரே பாராளுமன்ற ஹன்சாட்டில் பதியப்பட்டிருப்பதாகவும் பந்துல குணவர்தன அடித் துக் கூறினார்.
எனினும் பந்துல குணவர்தன எம்.பி.யினால் மேற்படி கூறப்பட்டதையடுத்து சபைக்குள் குழப்பநிலை தோன்றியது. இனவாதத்தை தூண்டி உரைநிகழ்த்த வேண்டாம் என்று...
மாவீரர் தினக் கொண்டாட்டங்களுக்கு ஒருபோதும் இடமளிக்க முடியாது என்று பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி திட்டவட்டமாக வலியுறுத்தியுள்ளார்.
எதிர்வரும் 14ம் திகதி வடக்கில் ஒருசிலர் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனின் ஞாபகார்த்த வைபவங்களை நடத்தத் திட்டமிட்டுள்ளதாக புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளன.
இதுகுறித்து சிங்கள ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிட்டுள்ள பாதுகாப்புச் செயலாளர் கருணாசேன ஹெட்டியாரச்சி, அவ்வாறான எந்தவொரு வைபவத்துக்கும் இடமளிக்க முடியாது என்று தெரிவித்துள்ளார்.
பொதுமக்களுக்கு தற்போது சுதந்திரம் வழங்கப்பட்டுள்ளது. அதனைப் பயன்படுத்தி தமக்கு...
ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான படைவீரர் அப்ரூவராக மாறத் தீர்மானம்
Thinappuyal -
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் நடராஜா ரவிராஜ் கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தின் பேரில் கைதான கடற்படை வீரர் ஒருவர் அரச தரப்பு சாட்சியாளராக (அப்ரூவராக) மாற இணக்கம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபரை அரசாங்க சாட்சியாளராக மாற்ற சட்ட மா அதிபர் தீர்மானித்துள்ளதாக குற்றப் புலனாய்வுப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
ரவிராஜ் கொலை தொடர்பான வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
சந்தேக நபர்களுக்கு எதிராக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யுமாறு சட்ட மா அதிபர்...
குறித்த நிறுவனம் சட்டவிரோதமான முறையில் தொலைகாட்சி , வானொலி நிலையம் என்பவற்றை இயக்கியதாகவும், அதனாலையே குறித்த நிறுவனம் கொழும்பில் இருந்து வந்த தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணையாக அதிகாரிகளால் மூடப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நிறுவனத்தில் இருந்து தொலைக்காட்சி மற்றும் வானொலி என்பவற்றின் ஒலிபரப்புக்கு பயன்படுத்தப்படும் பொருட்கள் என்பவை கைபற்றப்பட்டதுடன் அலுவலகத்தில் இருந்த பெரும்பான்மை இனத்தை சேர்ந்த ஒருவரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபரையும் கைப்பற்றப்பட்ட பொருட்களையும் அதிகாரிகள் யாழ் பொலிசாரிடம் கையளித்து...