இலங்கை அரச படையினர் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டமைக்காக சிரேஸ்ட இராணுவ அதிகாரிகள் தண்டிக்கப்பட வேண்டுமென பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2013ம் ஆண்டு மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழு நிறுவப்பட்டிருந்தது. இந்த ஆணைக்குழுவின் அறிக்கை அரச தரப்பின் குற்றச் செயல்களை மூடி மறைத்து வெள்ளையடிக்கும் என்றே பலர் கருதியிருந்தார்கள். எனினும், அதிர்ச்சியளிக்கும் வகையில் அரச படையினர்...
யுத்தக் குற்றச் செயல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவினால் நியமிக்கப்பட்ட ஓய்வு பெற்ற நீதவான் மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான ஆணைக்குழு அறிவித்துள்ளது. விசாரணைகளின் நம்பகத்தன்மையை உறுதி செய்ய சர்வதேச நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பரணகம அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார். முழுக்க முழுக்க உள்ளக நீதவான்கள் விசாரணைப் பொறிமுறைமையில் ஈடுபடுத்தப்பட்டால் வெளிநாட்டு கண்காணிப்பாளர்களையேனும் உள்வாங்க வேண்டுமென தெரிவித்துள்ளார். நாட்டில் இடம்பெற்ற பாரிய மனித...
மிகவும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த பிரித்தானியாவின் செனல்4 ஊடகவியலாளர் கலம் மக்ரேயின் இலங்கை குறித்த ஆவணப்படம் மெய்யானதே என மெக்ஸ்வல் பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. யுத்தம் இடம்பெற்ற காலத்தில் ஒரு பொதுமகன் கூட உயிரிழக்கவில்லை எனவும், செனல்4 ஊடகத்தின் ஆவணப்படம் பொய்யானது எனவும் மஹிந்த ராஜபக்ஸ அரசாங்கம் திட்டவட்டமாக மறுத்து வந்திருந்தமை குறிப்பிடத்தக்கது. செனல்4 ஊடகத்தின் ஆவணப்படத்தில் சில விடங்கள் நாடகப் பாங்காக அமைந்திருந்தாகவும், மிகைப்படுத்தப்பட்ட மொழிப் பிரயோகங்கள் உள்ளடக்கப்பட்டிருந்தாகவும் தெரிவிக்கப்பட்டுள்ள...
கலை இலக்கிய விமர்சகர் வெங்கட் சாமிநாதன் இன்று இந்தியாவின் பெங்களுரில் மாரடைப்பு காரணமாக காலமானார். இவர்  இலக்கியம், இசை, ஒவியம், நாடகம், திரைப்படம், நாட்டார் கலை என பல துறைகளிலும் ஈடுபாடு கொண்டவர். நாட்டாரியல் சார்ந்த ஆய்வுகள் தமிழில் உருவாகவும் நவீன நாடகம் உருவாகவும் முன்னோடியாக இருந்தார். இலக்கியத்துக்கு இசை, திரைப்படம், நாடகம் போன்ற பிற கலைகளுடன் இருக்கவேண்டிய உறவை 1950களிலேயே வலியுறுத்தியவர். இவர் திரைக்கதை எழுதி, ஜான் ஆபிரகாம் இயக்கத்தில் வெளிவந்த...
லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் டைடஸ் புத்திபால வீரசூரிய நியமிக்கப்பட்டுள்ளார். ஆணைக்குழுவின் தலைவராக நீதவான் ஜகத் பாலப்பட்டபந்தி கடமையாற்றி வந்தார். பாலபட்டபந்தி ஊழல் மோசடிகளில் ஈடுபட்டதாக தற்போதைய அரசாங்கம் குற்றம் சுமத்தி வந்தமை குறிப்பிடத்தக்கது. லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு ஆணைக்குழுவின் ஆணையாளர்களாக நீதவான் லால் ராஜித் சில்வா மற்றும் சந்திரனாத் நெவில் குருகே ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். 19ம் திருத்தச் சட்டத்திற்கு அமைவாக லஞ்ச ஊழல் மோசடி தவிர்ப்பு  ஆணைக்குழுவின்...
ஐக்கிய நாடுகள் தீர்மானத்தை இலங்கையில் நடைமுறைப்படுத்துவதை தடுப்பதற்கு தலையிடுமாறு முன்னாள் வெளிவிவகார அமைச்சர் ஜிஎல் பீரிஸ் மகாநாயக்க தேரர்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார். இது தொடர்பான வேண்டுகோள்கள் அடங்கிய கடிதமொன்றை மகாநாயக்க தேரர்கள் உட்பட பல மதத்தலைவர்களிற்கும் தான் அனுப்பிவைத்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொழும்பில் இதனை குறிப்பிட்டுள்ள அவர் ஐக்கியநாடுகளால் மனிதஉரிமை மீறல்கள் குறித்து வலியுறுத்தமாத்திரம் முடியும், நாடொன்று அரசியல்சீர்திருத்தங்களை முன்னெடுக்க செய்வதற்கான ஆணைஅதற்கு இல்லை அதுபோல அதனால் உள்விவகாரங்களில் தலையிடமுடியாது எனதெரிவித்துள்ளார். இது...
இந்திய பல்கலைக்கழகங்கள் இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிக்க வேண்டுமென பாட்டதாளி மக்கள் கட்சியின் நிறுவுனர் எஸ.ராம்தாஸ் தெரிவித்துள்ளார். இலங்கையில் பாடநெறிகளை ஆரம்பிப்பதற்கு தமிழக பல்கலைக் கழகங்களுக்கு இந்திய பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அனுமதி அளிக்க வேண்டுமென தெரிவித்துள்ளார். மாநிலத்திற்கு வெளியேற தொலைகல்வி நிலையங்களை நடாத்தக் கூடாது என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு பிறப்பித்துள்ள சட்டம் ஏற்றுக்கொள்ளக் கூடியதல்ல என அவர் தெரிவித்துள்ளார். தமிழக பல்கலைக்கழகங்களின் தொலைகல்வி பட்ட கற்கை நெறிகளின் ஊடாக இலங்கை தமிழ்...
வலி.வடக்கு வறுத்தலை விளான் மக்கள் கடந்த 1986 ம் ஆண்டு இராணுவ நடவடிக்கையினால் முதல் முதல் தமது சொந்த இடங்களை விட்டு கையில் எடுத்து செல்ல கூடிய பொருட்களுடன் இடம்பெயர்ந்து இருந்தனர். அந்த இராணுவ நடவடிக்கை முடிவடைந்ததும் அப் பகுதி மக்கள் மீண்டும் 1989ம் ஆண்டு தமது சொந்த இடங்களுக்கு மீள திரும்பினார்கள். மீண்டும் ஆறு மாத காலம்  சொந்த இடங்களில் வாழ முதல் மீண்டும் பாரிய இராணுவ நடவடிக்கை...
சாவு சொல்கிற யதார்த்தம்... வாழ்வில் சாவா?, சாவில் வாழ்வா? சாவிலும் வாழ்வா?‍‍-என‌ போட்டிபோடுகிற சாவோடு ஒரு பேட்டி.. நான் சொன்னேன்... நான் செத்துப்போனால், வரலாற்றில் திருப்புமுனையாகலாம்.. உலகம் பேசிக்கொள்ளும்‍_ நிமிர்ந்ததென் நெஞ்சு வாழ்ந்திருந்தால் செய்ய முடியாததை சாவு செய்துவிடும்.. சாவு சொன்னது, அப்படி இருக்கவேண்டிய கட்டாயம் ஏதுமில்லை ஓம்...ஓம்.. அரசியலிலாவது ஏதாவது நிகழுமே..! அவ்வாறு நடப்பதற்கும் அவசியமில்லை... அதுவும் சரிதான்... வரலாறாய் இல்லாட்டிலும் வரலாற்றிலாவது ஏதாவது எழுதப்படுமே..!! அது வரலாறு யாரால் எழுதப்படுகிறது என்பதில் தங்கியுள்ளதால்‍_ அதுவும் நிச்சயமில்லை.. அப்படி என்றால், ஆகக்குறைந்தது.. ஒட்டுமொத்தவரலாறு ஒன்று என்னையும் சேர்த்து புள்ளிவிபரம் வெளியிடுமே! அதுவும் நீசெத்துப்போனாயென உறுதியானால்...
ஈழத் தமிழரது புலம்பெயர் வாழ்வில் இன்றைய தினம் முக்கியமாகிறது. முதற் தடவையாக ஐரோப்பியத் தலைநகர் ஒன்றில் - ஒஸ்லோ - துணை நகர முதல்வர் (Vice Mayor) பதவியை ஈழத் தமிழ்ப் பெண் ஒருவர் பெற்றிருக்கிறார். பதினெட்டு வருடங்களுக்குப் பின் ஒஸ்லோ ஆட்சியை மீண்டும் தொழிற்கட்சி (வேறிரு கட்சிகளுடன் இணைந்து) கைப்பற்றியுள்ளது. பல்வேறு "புகழ்பெற்ற" தொழில்களை எமது இரண்டாம் தலைமுறையினர் (உண்மையில் பெற்றோர்கள்) தேடிக் கொண்டிருக்கையில் அரசியலைத் தனது முழுநேரப் பணியாக...