இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணிய அவுஸ்திரேலிய பிரஜை ஒருவரை அந்நாட்டு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். சட்டவிரோத ஆட்கடத்தல் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு வழங்கியதாகவும், இலங்கை சட்டவிரோத ஆட்கடத்தல்காரர்களுடன் தொடர்புகளைப் பேணியதாகவும் குறித்த நபர் மீது அவுஸ்திரேலிய மத்திய காவல்துறையினர் குற்றம் சுமத்தியுள்ளனர். அவுஸ்திரேலியாவின் எலசபத் சவுத் பகுதியைச் சேர்ந்த 35 வயதான அவுஸ்திரேலியர் ஒருவரே கைது செய்யப்பட்டுள்ளார். அவுஸ்திரேலியர் அல்லாதவர்கள், சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக இந்தோனேசியாவிலிருந்து அவுஸ்திரேலியாவிற்குள் பிரவேசிக்க இந்த நபர்...
ஐக்கியநாடுகளின்அரசியல் விவகாரங்களிற்கானஉதவிசெயலாளர் நாயகம் மிரொஸ்லாவ் ஜென்கா இலங்கைக்கு அடுத்த சில நாட்களில் விஜயம் மேற்கொள்ளவுள்ளார். ஐக்கியநாடுகள் பொதுச்சபையின் சமீபத்திய அமர்வின்போது இலங்கை ஜனாதிபதிக்கும் ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்திற்கும் இடையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தைகளை தொடர்ந்தே இந்த விஜயம் இடம்பெறவுள்ளது. ஜென்காவின்  விஜயம் இலங்கை அதிகாரிகளுடனும், சம்பந்தப்பட்ட சகலதரப்பினருடனும் பேச்சுக்களை தொடர்வதற்கான வாய்ப்பாக அமையும் அவர் இலங்கையின் சமாதானத்தைகட்டியெழுப்புவதற்கான  முயற்சிகளிற்கான ஐக்கிய நாடுகளின் ஆதரவையும் வெளியிடுவார். மேலும் 24ம் திகதி கொழும்பில் நடைபெறவுள்ள ஐக்கியநாடுகளின்...
  சிங்கள அரசியல்வாதிகளினால் தமிழ் மக்களின் உரிமைகள் மறுக்கப்பட்டதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர் சிவமோகன் தெரிவித்துள்ளார். 1958ம் ஆண்டு பண்டாரநாயக்க செல்வநாயம் ஒப்பந்தம் கிழித்தெறியப்பட்டது.அந்த ஆண்டில்தான் ஆயுதம் ஏந்தம் யுகமொன்று உருவானது. 1987ம் ஆண்டு இந்திய இலங்கை உடன்படிக்கையின் ஊடாக 13ம் திருத்தச் சட்டம் மேற்கொள்ளப்பட்டது. போர் காரணமாக தமிழ் மக்களுக்கு அநீதி இழைக்கப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியின் போராளிகளுக்கு மன்னிப்பு வழங்கப்பட்டது. அதேபோன்று தமிழ் அரசியல் கைதிகளுக்கும்...
ஆடம்பரமான தேனிலவு கொண்டாட்டங்களுக்கு பேர் போன சுற்றுலா மையமான மாலத்தீவுகளில் யாரும் எதிர்பார்த்திராத விதத்தில் கெமானாஃபுஷி தீவில் உள்ள மாஜிஸ்ட்ரேட் நீதிபதி ஒருவரால் இந்தத் தீர்ப்பு அளிக்கப்பட்டிருந்தது. ஆனால், இந்தத் தீர்ப்பில் நீதி நடைமுறைகள் மீறப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. மாலத்தீவுகளில் அண்மையில் ஏற்பட்ட சட்ட மாற்றங்கள், முஸ்லிம்களின் ஷரியா சட்டத்தின் கீழ் உள்ள தண்டனைகள் தொடர்பில் பரந்துபட்ட அணுகுமுறையுடன் கூடிய பார்வையை ஏற்படுத்தியுள்ளதாக கூறப்படுகின்றது. மாலத்தீவுகளில் திருமணத்துக்கு வெளியிலான பாலுறவுக்கு உள்ள...
சிரியாவின் அலெப்போவின் பகுதியில்  உள்ள பல முக்கிய நகரங்கள்  ஐ.எஸ். தீவிரவாதிகளின் வசம் உள்ளது. இதனைக்  கைப்பற்ற சிரிய அரசு படைகள் ஐ.எஸ். தீவிரவாதிகள் மீது தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது. சிரிய அரசு படைகளுடன் ஈரான் மற்றும் ஹிஸ்புல்லா அமைப்பினரும் இணைந்து ஐ.எஸ். தீவிரவாதிகளுக்கு எதிராக சண்டையிட்டு வருகின்றனர். இந்நிலையில் அலெப்போ பகுதியில் உள்ள பல முக்கிய நகரங்களை அரசு படை கைப்பற்றியுள்ளதாக சிரிய அரசு தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.
மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி மீது தென்னாப்பிரிக்காவில் மோசடி வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்னாப்பிரிக்காவில் நிறவெறிக்கு எதிராக போராடிய பின்னர், தாய்நாடு திரும்பி வெள்ளையர் ஆட்சிக்கு எதிராக சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அகிம்சை ஆயுதத்தின் மூலம் இந்தியாவிற்கு சுதந்திரம் பெற்றுத் தந்த பெருமைக்குரியவர் மகாத்மா. தற்போது அவரது உறவினர்களில் பலர் தென்னாப்பிரிக்காவில் வசித்து வருகின்றனர். அந்தவகையில், மகாத்மா காந்தியின் கொள்ளுப் பேத்தி ஆஷிஸ் லதா ராம்கோபின்(45). இவர் தென்னாப்பிரிக்காவில்...
ஆங்கில இணையதளம் ஒன்றுக்கு அவர் பேட்டியளித்த போது அவர் பிரபாகரனைப் பற்றி பரபரப்பான தகவல்களை அளித்தார். அதில் அவர் சில கேள்விகளை எழுப்பினார். “இலங்கை காட்டியது பிரபாகரன் உடல்தான் எனில், ஏன் முறையான இறப்பு சான்றிதழ் மற்றும் மரபணு பரிசோதனை சான்றிதழ் வழங்கவில்லை? இலங்கையில் மரபணு சோதனை செய்யும் ஆய்வுக்கூடமே இல்லை. இந்தியாவிடம் பிரபாகரன் மரணம் பற்றி இலங்கை அரசு அளித்தது ஒரு அறிக்கை மட்டுமே. இறப்பு சான்றிதழ் அல்ல. ஊடகங்களில் காட்டப்பட்ட...
போர்த்துக்கல் கால்பந்து அணியின் வீரர் ரொனால்டோவின் காதல் முறிவுக்கு நான் தான் காரணம் என்று ஒரு கல்லூரி மாணவி தெரிவித்துள்ளார். ரியல் மாட்ரிட் அணியின் நட்சத்திர வீரர் ரொனால்டோ, கடந்த 5 ஆண்டுகளாக தீவிரமாக இகினா ஷாய்க் என்ற 29 வயது மொடல் அழகியை காதலித்து வந்தார். போட்டி இல்லாத நேரங்களில் இருவரும் பல நாடுகளுக்கு சென்று ஜாலியாக பொழுதை கழித்தனர். மேலும், இருவரும் விரைவில் திருமணம் செய்து கொள்வார்கள் எனவும்...
இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள் சுழல் ஜாம்பவான் முத்தையா முரளிதரனின் பந்துவீச்சில் தான் தடுமாறியதாக ஓய்வு பெற்ற ஷேவாக் தெரிவித்துள்ளார். தனது அதிரடி ஆட்டத்தால் கோடிக்கணக்கான ரசிகர்களின் உள்ளங்களை கவர்ந்த ஷேவாக் இன்று சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். இந்நிலையில் தனியார் தொலைக்காட்சி ஒன்றிற்கு அவர் அளித்த பேட்டியில், "தனது முதல் டெஸ்ட் போட்டி, முதன்முறையாக டெஸ்டில் 300 ஓட்டங்கள் கடந்தது, உலகக்கிண்ணத்தை வென்றது, இலங்கைக்கு எதிராக 200 ஓட்டங்கள்...
இந்திய கிரிக்கெட் அணியின் அதிரடி வீரரான ஷேவாக் சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு அறிவித்துள்ளார். 1999ம் ஆண்டு பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் அறிமுகமான ஷேவாக் தனது அதிரடியால் கிரிக்கெட் வரலாற்றில் மறக்க முடியாத இடத்தை பிடித்தார். கிரிக்கெட்டில் பல சாதனைகளை குவித்த ஷேவாக் கடந்த 2013ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் அவுஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாடினார். அதன் பிறகு அவர் எந்தவொரு தொடரிலும் தெரிவு செய்யப்படவில்லை. துபாயில் மாஸ்டர்ஸ் சாம்பியன்ஸ் லீக்...