2010ஆம் ஆண்டு காணாமல் போகச்செய்யப்பட்ட ஊடகவியலாளர் பிரகீத் எக்னெலிகொட கொலை செய்யப்பட்டு சடலம் திருகோணமலைக்கு அப்பாலுக்கு கடல் பகுதியில் கடலுக்குள் மூழ்கச் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சிஐடியினர் இந்த தகவல்களை பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எக்னெலிகொட மன்னம்பிட்டிய சொரவில இராணுவ முகாமில் வைத்தே கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் கைதுசெய்யப்பட்ட ஒருவர், எக்னெலிகொட முதலில் சொரவிலையில் புதைக்கப்பட்டதாக தெரிவித்திருந்தார். இதேவேளை அவர் முன்னதாக இராணுவ புலனாய்வின் இரண்டு உறுப்பினர்களால் 2010ஆம்...
அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளினால் இலங்கை தொடர்பில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம் தொடர்பான விபரங்கள் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. தீர்மானம் குறித்த ஆவணத்தை பிரதமர் ரணில் விக்ரமசிங்க சற்று முன்னர் பாராளுமன்றில் சமர்ப்பி;த்துள்ளார். இதேவேளை, மனித உரிமை மீறல்கள் தொடர்பில் நிறுவப்பட்ட இரண்டு முக்கிய ஆணைக்குழுக்களின் அறிக்கைகளும் பாராளுமன்றில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. நிசாந்த உதலாகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும், மெக்ஸ்வல் பரணகம தலைமையிலான விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையும் பாராளுமன்றில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடக செயலாளர் காவல் நிலையத்திற்கு அழைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ, ஜனாதிபதியாக பதவி வகித்த காலத்தில் ஜனாதிபதி செயலகத்தில் காணப்பட்ட 3000 வீடியோ கசட்களை காணவில்லை என முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த முறைப்பாடு தொடர்பிலேயே, மஹி;ந்த ராஜபக்ஸவின் தற்போதைய ஊடகச் செயலாளர் ரொஹான் வெலிவிட்டவிடம் இன்றைய தினம் ஹோமகம காவல்துறையினர் வாக்கு மூலமொன்றை பதிவு செய்துள்ளனர். வெலிவிட்ட இன்றைய தினம் காலை, காவல்...
பயங்கரவாத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென அரசாங்கத்திடம் மனித உரிமை அமைப்புக்கள் கோரிக்கை விடுத்துள்ளன. கபே என்ற தேர்தல் கண்காணிப்பு அமைப்பும், இலங்கை மனித உரிமை கேந்திர நிலையமும் கூட்டாக இணைந்து இந்த கோரிக்கையை முன்வைத்துள்ளன. தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கு சமாந்திரமாக, பயங்கரவாதத் தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளன. பயங்கரவாத தடைச் சட்டத்திற்கு பதிலாக சர்வதேச தர நிர்ணயங்களுக்கு அமைவாக பயங்கரவாத நடவடிக்கைகளை ஒடுக்கும் சட்டங்கள் திருத்தி...
காவல்துறை உத்தியோகத்தர் காணாமல் போன சம்பவம் தொடர்பில் உடனடி விசாரணை நடத்துமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன உத்தரவிட்டுள்ளார். காவல்துறை மா அதிபர் என்.கே. இளங்கக்கோனுக்கு ஜனாதிபதி இந்த உடனடி உத்தரவினை பிறப்பித்துள்ளார். வவுனியா பிரதிக் காவல்துறை மா அதிபர் காரியால விசேட விசாரணைப் பிரிவில் கடமையாற்றி வந்த காவல்துறை சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போயுள்ளார். குணதிலக்க என்ற சார்ஜன்டே இவ்வாறு காணாமல் போனதாகத் தெரிவிக்கப்படுகிறது. ஜனாதிபதியின் உத்தரவின் அடிப்படையில் இந்த சம்பவம்...
  விடுதலைப்புலிகளின் அரசியல்துறைப்பொறுப்பாளர் தமிழினிக்குவடமாகாண மீன்பிடிதுறை அமைச்சர் டெனிஸ்வரன் அஞ்சலி செலுத்தினார்;
  தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் அரசியல் துறை மகளிர் பிரிவுப் பொறுப்பாளர் தமிழினி (சிவசுப்ரமணியம் சிவகாமி) அவர்களுக்கு பிரான்சு இவ்றி சூ சென் பகுதியில் நினைவு வணக்கம் செலுத்தப்பட்டது. பிரான்சு தமிழர் ஒருங்கினைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று 18.10.2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 6 மணியளவில் இடம்பெற்ற இந்நிகழ்வில் 1986 ஆம் ஆண்டு முத்தையன்கட்டுப்பகுதியில் வீரச்சாவடைந்த மாவீரர் பப்பா - பிலிப்ஸ் அவர்களின் சகோதரிஈகைச்சுடரினை ஏற்றிவைத்து...
'என் மனம் மகிழ்ச்சியில் மிதக்கின்றது. நீங்கள் பல்லாயிரக் கணக்கில் இந்தப் புரட்சிக்குத் தயார்பட்டுவிட்டதை என் கண்கள் பார்க்கின்றன. நான் திருப்தி அடைகிறேன். திலீபனால் முன்வைக்கப்பட்ட ஐந்தம்சக் கோரிக்கைகளாவன:- மீளக்குடியமர்தல் என்ற பெயரில் வடக்கிலும் கிழக்கிலும் புதிதாக திட்டமிடும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும். சிறைக் கூடங்களிலும், இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற்கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும். அவசரகாலச்சட்டம் முழுமையாக நீக்கப்படவேண்டும். ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள்...
தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு என்னும் அணியானது யாழ்ப்பாணத்தை 1996ஆம் ஆண்டளவில் இழந்து விடுதலைப்புலிகள் அமைப்பின் முக்கியஸ்தர்கள் உள்ளிட்ட அவ்வமைப்பின் அனைத்துத் தரப்பினரும், பொதுமக்களும் இடம்பெயர்ந்தபின் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய கால நகர்வினை பின்னரும் தமிழ் ஈழம் என்னும் வரையறுக்கப்பட்ட பிரதேசத்தின் இதயப் பகுதியான யாழ்ப்பாணத்தை மீளக் கைப்பற்றும் விடயத்தில் ஏமாற்றத்தையும், மனச்சோர்வையும் எதிர்கொண்டதனால் ஸ்ரீலங்காவின் நாடாளுமன்றத்துக்குத் தனதும், தன்னுடைய அமைப்பினதும் சார்பில் தமிழ் மக்களின் பிரதிநிதி களாக ஒரு சாராரை அனுப்பிவைக்க...
இலங்கை இனப்பிரச்சினை தொடர்பில் இந்தியாவின் நிலைப்பாடு காலத்திற்குக்காலம் இலங்கைத் தமிழ் மக்களின் அரசியல் தலைவர்களுடைய நடவடிக்கைகளுக்கு இயைபாக வேறுபட்டு வந்தேயிருக்கின்றது. 1958இல் இடம்பெற்ற முதலாவது இனக்கலவரமானது இலண்டன் ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகத்தில் சமகாலத்தில் கல்வி பயின்ற எஸ்.டபிள்யூ.ஆர்.டி பண்டாரநாயக்க அவர்களினாலும் எஸ்.ஜே.வி.செல்வநாயகம் அவர்களி னாலும் இலங்கையின் சிங்கள - தமிழ் இனக்குரோதமும், பகைமையும் அரும்பினிலே கிள்ளியெறியப்பட வேண்டும் என்னும் நல்லெண்ணத்தின் விளைவாக மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தமானது எதிர்பாராதவிதமாகத் தோல்வியடைந்தமையின் பெறுபேறாக உருவான...