புங்குடுதீவு மாணவி கொலை வழக்கில் பலர் குற்றவாளிகளாக உள்ளதால் தான் மரபணு சோதனை அறிக்கை நீதிமன்றில் சமர்ப்பிக்க தாமதமாவதாக நீதவான் தெரிவித்துள்ளார்.
புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர்.
அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்ட போது சந்தேக...
முழுமையாக முகத்தை மூடும் தலைக்கவசத்திற்கு அரசாங்கம் தொடர்ந்தும் அனுமதி வழங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
முகத்தை முழுமையாக மறைக்கும் தலைக்கவசம் அணிய காவ்துறையினர் விதித்த தடைக்கு எதிராக, மேன்முறையீட்டு நீதிமன்றம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு மேலும் நீடிக்கப்பட்டுள்ளது.
செப்டம்பர் 2ம் திகதி வரை இத்தடை உத்தரவு நீடிக்கப்பட்டிருக்கின்றமை குறிப்பிடத்தக்கது.
இரு மோட்டார் சைக்கிள் சாரதிகள் தாக்கல் செய்த மனு மீதான விசாரணைகளையடுத்து மேன்முறையீட்டு நீதிமன்றம் இந்த உத்தரவைப் பிறப்பித்தது.
இதனையடுத்து இன்று குறித்த வழக்கு மீண்டும்...
73 வயதான தந்தையை நாய்க் கூட்டில் அடைத்து வைத்திருந்த மகள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
பலகொல்ல பகுதியிலே இடம்பெற்ற இச்சம்பவம் குறித்து, 42 வயதான பெண்ணொருவரையே காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
பலகொல்ல காவல்துறையினர், அந்தப் பகுதியால் சென்ற வேளை குறித்த கூட்டினைக் கண்டுள்ளனர்.
இதனையடுத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் குறித்த வயோதிபரின் மகளே அவரை கூட்டில் அடைத்து வைத்தமை தெரியவந்துள்ளது.
பின்னர் 73 வயதான அந்த முதியவர் மெனின்கின்ன வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை...
பயங்கரவாத தடுப்பு பிரிவின் கிளிநொச்சி நிலையத்தை சேர்ந்தவர்கள் இன்று கிளிநொச்சி தமிழ் தேசிய கூட்டமைப்பு காரியாலத்திற்கு சென்று பா.உறுப்பினர் சி.சிறீதரனுக்க வழக்கொன்று தொடர்பாக அழைப்பு கடிதம் ஒன்றை கொடுத்துள்ளதாக தெரியவருகின்றது.
வழக்கு தொடர்பாக என அந்த ரி.ஐ.டி அதிகாரிகள் தெரிவித்தபோதும் அது நீதிமன்ற அழைப்பு கடிதமாக இல்லாமல் பயங்கரவாத தடுப்பு பிரிவால் எழுதப்பட்ட கடிதமாக காணப்பட்டதாக தெரியவருகின்றது.
கடந்த காலங்களில் முன்னாள் பாதுகாப்பு செயலாளரினால் தெற்கில் செயற்படுத்திய வெள்ளை வான் கடத்தலுக்காக, 3 குழுக்கள் செயற்பட்டுள்ளதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது.
இந்த மூன்று குழுக்களில் முதல் குழு, கடத்தி செல்லப்படும் நபர் தொடர்பில் தகவல் சேகரித்தல் மற்றும் புலனாய்வு செய்து கடத்தி செல்வதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தல்.
அதற்காக பாதுகாப்பு புலனாய்வு பிரிவு உறுப்பினர்கள் மற்றும் விடுதலை புலிகளில் இருந்து வெளியேறிய உறுப்பினர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இரண்டாவது குழு கடத்தலை மேற்கொள்கின்ற குழுவாகும். வெள்ளை வான்களில்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வெளியிடுகின்ற கருத்துக்களின் மூலம் அவருக்கு எதிரான குற்றச்சாட்டுகள் தொடர்பில் உண்மை தகவல்கள் வெளியாகும் நிலை உருவாகியுள்ளதாக குருணாகல் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜே.சீ.அலவத்துவல தெரிவித்துள்ளார்.
சிங்கள ஊடகமொன்று அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
தன்னை காட்டிகொடுப்பதற்கு தன்னுடன் இருந்தவர்களே செயற்படுவதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச கூறிய அனைத்தும் சந்தேகத்திற்குரியவைகள் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ச தவறு செய்யாதவர் என்றால் எதற்கு காட்டிகொடுப்பிற்கு பயப்பட வேண்டும் என...
பயங்கரவாத தடைச் சட்டம் நீக்கப்பட வேண்டுமென மனித உரிமை செயற்பாட்டாளரும் சட்டத்தரணியுமான ஜே.சீ. வெலியமுன தெரிவித்துள்ளார்.
பயங்கரவாதத் தடைச் சட்டம் இலங்கையின் சட்டக் கட்டமைப்பிலிருந்தே நீக்கப்பட வேண்டியது அவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் நல்லிணக்கத்தையும், அமைதியையும் ஏற்படுத்துவதற்கு பயங்கரவாதத் தடைச் சட்டம் பெரும் தடையாக அமைந்துள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற கருத்தரங்கு ஒன்றில் பங்கேற்று உரையாற்றிய போது அவர்இதனைத் தெரிவித்துள்ளார்.
கலப்பு நீதிமன்றமொன்றை அமைக்கும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப்பேரவையின்...
காவல்துறையினரின் நடவடிக்கைகளுக்கு பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஸ கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளார். ஹம்பாந்தோட்டை மாவட்டம் பண்டாகிரிய பிரதேசத்தில் இடம்பெற்ற போராட்டத்தின் போது காவல்துறையினரின் நடவடிக்கை ஏற்றுக்கொள்ளக் கூடிய வகையில் அமையவில்லை குற்றம் சுமத்தியுள்ளார். தமது உத்தியோகபூர்வ டுவிட்டர் கணக்கில் இந்த விடயங்கள் குறித்து கருத்து வெளியிட்டுள்ளார்.
சுத்தமான குடிநீரை மக்கள் கோரியதாகவும் அவர்கள் மீது தாக்குதல் நடத்தியது கண்டிக்கப்பட வேண்டியது எனவும் அவர் தெரிவித்துள்ளார். நேற்றைய தினம் நடைபெற்ற போராட்டத்தில்...
இலங்கை விசாரணைப் பொறிமுறைமையில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது – பிரித்தானியா
Thinappuyal News -
இலங்கை விசாரணைப் பொறிமுறைமயில் வெளிநாட்டு நீதவான்களின் பங்களிப்பு அவசியமானது என பிரித்தானியா வலியுறுத்தியுள்ளது.
குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் தொடர்பிலான உள்நாட்டு விசாரணைப் பொறிமுறைமையில் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பும் உள்ளடக்கப்பட வேண்டுமென பிரித்தானிய வெளிவிவகார மற்றும் பொதுநலவாய நாடுகள் அலுவலக அமைச்சர் ஹியூகோ ஸ்வாயார் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலும் பொதுநலவாய நாடுகள் மற்றும் சர்வதேச நீதவான்களின் பங்களிப்பின் அவசியம் பற்றி வலியுறுத்தப்பட்டிருந்தது என...
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலபொட ஞானசார தேரர் இன்று கோட்டை மஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
கொழும்பு கோட்டே நீதவான் பிரியந்த லியனகே பொதுபலசேனா இயக்கத்தின் தலைவரை கைது செய்யுமாறு நேற்று பிடி விராந்து உத்தரவு பிறப்பிருந்தார்.வழங்கு விசாரணை ஒன்றுக்கு சமூக அளிக்க தவறியமையினாலேயே இந்தப் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டது
இஸ்லாமியர்களின் புனித நூலை இழிவுபடுத்தியமை மற்றும் ஜாதிக பலசேனாவின் கூட்டத்தில் நுழைந்து குழப்பம் விளைவித்தமை தொடர்பில் கலபொட ஞானசார தேரருக்கு எதிராக வழக்கு தொடர்ப்பட்டள்ளது.