24 தமிழக மீனவர்களை இலங்கைக் கடற்படையினர் கைது செய்துள்ளனர். மேலும் பல மீனவர்கள் துப்பாக்கி முனையில் விரட்டியடிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது. கச்சத்தீவிற்கு அருகாமையில் உள்ள கடற்பரப்பில் இவ்வாறு மீனவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். நேற்றைய தினம் இரவு சுமார் 3000 மீனவர்களும் 600 படகுகளும் ராமேஸ்வரம் பகுதியிலிருந்து மீன் பிடிப்பதற்காக கடலுக்கு சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.பத்து படகுகளின் மூலம் இலங்கைக் கடற்படையினர் இந்திய மீனவர்ளை அச்சுறுத்தியதாகவும், 24 மீனவர்களை கைது செய்துள்ளதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தமது...
இலங்கையின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள சிறைச் சாலைகளில் விசாரணையும் இன்றி விடுதலையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டு தமிழ் அரசியல் கைதிகள் பொதுமன்னி வழங்கிய விடுதலை செய்யுமாறு கோரி இரண்டாவது நாளாகவும் உணவுத் தவிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். யாழ்ப்பாணம், கொழும்பு, மகசின், பூசா, வெலிக்கடை, தும்பறை, அநுராதபுரம், நீர்கொழும்பு என 14 சிறைகளில் உள்ள 2014பேர் சாகும் வரை உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். இவர்கள் தமது போராட்டத்தை இரண்டாவது நாளாகவும்...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவுடன் சீனா தொடர்ந்தும் உறவுகளைப் பேணி வருகின்றது. ராஜதந்திர ரீதியில் உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்ட சீன பிரதி வெளிவிவகார அமைச்சர் முன்னாள் ஜனாதிபதி மஹிந்தவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். அண்மையில் சீனப் பிரதி வெளிவிவகார அமைச்சர் லியு ஸென்மின், சீனாவின் விசேட பிரதிநிதியாக இலங்கைக்கு விஜயம் செய்திருந்தார். தற்போதைய ஆட்சியாளர்கள் எதிர்க்கட்சியாக அங்கம் வகித்த வேளையில் சீன அதிகாரிகள் ராஜதந்திரிகள், இவ்வாறான சந்திபுக்களை நடத்தவில்லை என சுட்டிக்காட்டப்படுகின்றது. எனினும், இதனை...
நாங்கள் குற்றவாளிகள் அல்ல எங்களை பிணையில் செல்ல அனுமதியுங்கள் என புங்குடுதீவு மாணவியின் கொலை சந்தேக நபர்கள் நீதவானிடம் கோரிக்கை விடுத்து இருந்தனர். புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு இன்றைய தினம் ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றத்தில் நீதிபதி எஸ்.லெனின்குமார் முன்னிலையில் எடுத்து கொள்ளப்பட்டது. அதன் போது ஒன்பது சந்தேக நபர்களும் நீதிமன்றில் ஆஜார் படுத்தப்பட்டனர். அதன் போது நீதவான் சந்தேக நபர்களிடம் ஏதாவது சொல்ல விரும்புகின்றீர்களா ? என கேட்டே போதே...
கிளிநொச்சி மாவட்டம் பூநகரிப் பிரதேசத்தில் இராணுவத்தின் தேவைக்காக அபகரிக்கப்படுவதற்காக 27 ஏக்கர் நிலப் பகுதியை சுவீகரிக்கும் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து பொது அமைப்புக்களும் மக்களும் இணைந்து போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். குறித்த பொதுமக்களின் காணியை இராணுவத்தினருக்காக சுவீகரிப்பதற்காக நாளை நில அளவை திணைக்களத்தினர் அளவீடு செய்யவுள்ள நிலையிலேயே இந்த எதிர்ப்புப் போராட்டம் நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் காணிகளை ஆக்கிரமிக்கவுள்ளமை தொடர்பிலும் இதற்கான அளவீடுகளை முன்னெடுப்பது தொடர்பிலும் பூநகரி பிரதேச செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகளுக்கு...
  நடைபெற்று முடிந்த நாடாளுமன்றத் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வெற்றிக்காகப் பாடுபட்ட புலம்பெயர் தமிழ் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும் வகையிலான கலந்துரையாடல் என்றபோர்வையில் சுவிஸ் பாசல் மாநகரில் சந்திப்பு ஒன்று நடைபெற்றது. இதனை மிகவும் கச்சிதமாக ஏற்பாடு செய்திருந்தார் மூத்த ஊடகவியலாளர் நடந்தவை…. தனது சுயநல அரசியல் இருப்பை தக்கவைக்க நீண்டகாலமாக கூட்டமைப்பின் மூத்த தலைவர் மாவையை களங்கப்படுத்த நன்கு திட்டமிட்டிருந்தார். அதற்கு ஏற்ற வகையில் இளைஞர்களையும் தயார் படுத்தியிருந்தார். அதில் வேடிக்கை என்னவெனில் வருகை...
  பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்த ஞானசார தேரர் உட்பட மூவர் இன்று காலை நீதிமன்றத்தில் சரணடைந்துள்ளார். இவர்கள் இன்று கோட்டை நீதவான் பிரியந்த லயனகே முன்னிலையில் ஆஜராகியுள்ளனர். புனித குர்ஆனுக்கு அபகீர்த்தி ஏற்படுத்தியமை மற்றும் ஜாதிகபல சேனா அமைப்பின் ஊடகவியலாளர் சந்திப்பிற்கு ஏற்படுத்தியமை உள்ளிட்ட குற்றச்சாட்டுக்கள் ஞானசார தேரர் உள்ளிட்ட மூவருக்கு எதிராக சுமத்தப்பட்டிருந்தது. அது குறித்த வழக்கு விசாரணைகளுக்காக நேற்றையதினம் அவர்களை நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவிக்கப்பட்டிருந்தது. எனினும் நேற்றையதினம்...
  தேசியப் பிரச்சினைக்குச் சமஷ்டி முறைத் தீர்வுத்திட்டம் தொடர்பில் அரசு தம்முடன் தனிப்பட்ட ரீதியில் கலந்துரையாடியுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான ஆர்.சம்பந்தன் தெரிவித்துள்ளார். எனினும் உத்தியோகபூர்வமாக இந்தப் பேச்சுக்கள் இன்னமும் ஆரம்பிக்கப்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, பல நாடுகளில் சமஷ்டி நிர்வாக முறையானது மிகவும் வெற்றிகரமாக நடைமுறைப்படுத்தப்படுகிறது. இலங்கையின் பார்வையில் சமஷ்டி...
  அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூற யார் அனுமதி கொடுத்தது! விக்கினேஸ்வரன் நீண்ட காலமாக எந்தவித விசாரணையும் இன்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள அரசியல் கைதிகளை தீவிரவாதிகள் என்று கூறுவதற்கு யார் அனுமதி கொடுத்தது என வடக்கு மாகாண சபையின் முதலமைச்சர் விக்கினேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார். இன்று மாலை ஊடகவியலாளர்களை சந்தித்த வடக்கு முதல்வர் விக்கினேஸ்வரன், எந்தவிதமான விசாரணைகளும் இன்றி தமிழ் அரசியல் கைதிகள் நீண்டகாலமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்கள். ஆனால் குற்றவாளிகள் மட்டுமே சிறையில்...
  தமிழ் அரசியல் கைதிகளை விடுதலை செய்யக் கோரி, யாழில் உண்ணாநோன்பு போராட்டம் இலங்கையின் பல்வேறு சிறைகளில் நீண்டகாலம் விசாரணைகள் கூட நடத்தப்படாமல் தடுத்து வைக்கப்பட்டிருக்கும் தம்மை விடுதலை செய்யக்கோரி, தமிழ் அரசியல் கைதிகள் உண்ணா நோன்பு போராட்டம் நடத்தி வருகின்றனர். இதற்கு வலுச்சேர்க்கும் வகையில் யாழ்.மாவட்டத்தில் நல்லூர் ஆலய முன்றலில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பினால் அடையாள உண்ணாநோன்பு போராட்டம் ஒன்று நடத்தப்பட்டு வருகின்றது. இன்றைய தினம் காலை 8 மணி தொடக்கம் இந்த...