கவர்ந்திழுக்கும் அழகால் ரசிகர்களின் இதயங்களில் இடம் பிடித்தவர் பிரபல டென்னிஸ் வீராங்கனை மரியா ஷரபோவா. ரஷ்யாவின் அழகுப் புயலாக வலம் வரும் மரியா, கடந்த 2005ம் ஆண்டு உலக தரவரிசையில் ‘நம்பர்–1’ இடத்தை பிடித்தார். இதுவரை 5 கிராண்ட்ஸ்லாம் பட்டத்தை வென்றுள்ள இவர், தற்போது 3வது இடத்தில் உள்ளார். தற்போது ஓய்வில் இருக்கும் மரியா, பாரிசில் நடந்த ‘பேஷன் ஷோவில்’ பங்கேற்றார். அந்த நிகழ்ச்சியில் கருப்பு, வெள்ளை நிறத்தில் அழகிய ‘கவுன்’...
இலங்கை- பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணிகளுக்கு இடையேயான டெஸ்ட் தொடர் சமனில் முடிந்துள்ளது. பாகிஸ்தான் ‘அண்டர்-19’ அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் செய்து 3 நாட்கள் கொண்ட டெஸ்ட் போட்டியில் விளையாடி வருகிறது. இதில் முதல் போட்டி டிராவில் முடிந்தது. இந்தப் போட்டியில் இலங்கை வீரர் அசலன்கா இரட்டை சதம் அடித்து அசத்தினார். இந்நிலையில் கடந்த 10ம் திகதி தொடங்கிய 2வது டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ‘அண்டர்-19’ அணியில், முதல் இன்னிங்சில் அசலன்ங்கா...
கோவா அணிக்கு எதிரான ஐ.எஸ்.எல். கால்பந்து லீக் போட்டியில் சென்னை அணி முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியன் சூப்பர் லீக் (ஐ.எஸ்.எல்) கால்பந்து தொடரில் கோவாவில் நேற்று நடந்த 9வது லீக் போட்டியில், கோஹ்லி சக உரிமையாளராக உள்ள கோவா அணியும், பாலிவுட் நடிகர் அபிஷேக் பச்சன், டோனி சக உரிமையாளர்களாக இருக்கும் சென்னை அணியும் மோதின. இதில் தொடக்கத்தில் இருந்து சென்னை அணியின் ஆதிக்கம் அதிகமாக இருந்தது. இந்த...
இந்திய அணியின் தோல்விக்கு தான் பொறுப்பேற்றுக் கொள்வதாக அணித்தலைவர் டோனி தெரிவித்துள்ளார். இந்தியா- தென் ஆப்பிரிக்கா அணிகளுக்கு இடையேயான முதல் ஒருநாள் போட்டி நேற்று கான்பூரில் நடந்தது. முதலில் விளையாடிய தென் ஆப்பிரிக்கா நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 303 ஓட்டங்கள் குவித்தது. பின்னர் விளையாடிய இந்திய அணியால் 50 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 298 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. இதனால் தென் ஆப்பிரிக்கா 5 ஓட்டங்களால் வெற்றி...
இந்திய அணித்தேர்வில் ஏற்பட்ட குழப்பமே முதல் ஒருநாள் போட்டியில் ஏற்பட்ட தோல்விக்கு காரணமாக அமைந்து விட்டது. தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரை இந்திய அணி 2-0 என்ற கணக்கில் தோற்றது. அப்போது இந்திய அணி தேர்வின் மீது விமர்சனங்கள் எழுந்தது. மேலும், சிறந்த வீரரான ரஹானேவின் நீக்கம் தொடர்பாகவும் கேள்வி எழுந்தது. இது பற்றி முன்னாள் அணித்தலைவர் அசாரூதினும் கேள்வி எழுப்பியிருந்தார். இந்நிலையில் முதல் ஒருநாள் போட்டியிலும் ஆடும் லெவனில் ரஹானே...
இளைய தளபதி விஜய் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த படம் புலி. இப்படம் ரசிகர்களிடையே மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருந்தது. ஆனால், படம் எதிர்ப்பார்த்த வெற்றியை பெறவில்லை. இந்நிலையில் தற்போது புலி படத்தின் இரண்டு வார முடிவில்சென்னை பாக்ஸ் ஆபிஸ் வசூல் நிலவரங்கள் வெளிவந்துள்ளது. இதில் முதல் வாரத்தில் ரூ 2.8 கோடி வரை வசூல் செய்திருந்தது. இரண்டாவது வாரத்தில் வசூல் சற்று குறைந்துள்ளது. 2வது வார முடிவில் ரூ 1.6 கோடி வசூல்...
அஜித் எப்போதும் எந்த நிகழ்ச்சிகளிலும் தலையை காட்டாதவர். ஆனால், அவர் படம் வருகிறது என்றால், தமிழகமே திருவிழா கோலம் ஆகிவிடும். அந்த வகையில் வேதாளம் படத்தின் இசை அக்டோபர் 16ம் தேதிவரவுள்ளது. வழக்கம் போல் இந்த இசை வெளியீட்டு விழாவையும் ரசிகர்கள் தான் கொண்டாடவிருக்கின்றனர். சென்னை, கோயமுத்தூர், மதுரை என பல பகுதிகளில் இசை வெளியீட்டு விழாவை கொண்டாட ரசிகர்கள் தயாராகிவிட்டனர். ஏற்கனவே என்னை அறிந்தால் படத்தில் இசை வெளியீட்டு விழாவைரசிகர்கள்...
தமிழ் சினிமாவின் மூத்த நடிகை மனோரமா .  இவரின் இறுதி சடங்கில் சினிமா மற்றும் அரசியல் பிரமுகர்கள் பலரும் வந்த அஞ்சலி செலுத்தினர். இதில் தமிழக முதல்வரான ஜெயலலிதா அஞ்சலி செலுத்த வந்த போது, அருகில் சரத்குமார் இருந்ததை கண்டுக்கொள்ளவே இல்லை. சரத்குமார் தானாக வந்து பேச முயற்சி செய்த போதும், அவர் பேச மறுத்து விட்டாராம். இதனால், கடும் அப்செட்டில் சரத்குமார் அந்த இடத்தை விட்டு நகர்ந்தார். சரத்குமார் மீது முதல்வருக்கு...
சென்னை 60028, தமிழ் படம், கலகலப்பு போன்ற வெற்றி படங்களில் தான் நடிப்பால் நம்மை கவர்ந்த நடிகர் மிர்ச்சி சிவா அடுத்த மசாலா படத்துக்காக அளித்த சிறப்பு பேட்டி உங்களுக்காக. 1.மசாலா படத்தில் உங்களது கதாபாத்திரம் என்ன ? இந்த படத்துல சராசரி சாதாரண மனிதனாக நடித்துளேன். சினிமா வில் ஏ ,பி, சி சென்டர் இருக்கும் அதில் பி சென்டர் சேர்ந்த மிடில் கிளாஸ் பையனாக நடித்திருக்கேன். படம் பார்த்துட்டு...
தமிழ் சினிமாவின் புன்னகை அரசி என்றால் அது சினேகா தான். நடிகர்பிரசன்னாவை திருமணம் செய்து கொண்டது அனைவரும் அறிந்த ஒன்றே. இவர்கள் இருவருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு ஆண் குழந்தை பிறந்தது. குழந்தைக்கு விகான் என பெயரிட்டுள்ளனர். பிறந்தநாளை முன்னிட்டு முன்னணி பத்திரிக்கை ஒன்று மீண்டும் படத்தில் நடிப்பீர்களா என கேட்டுள்ளனர். அதற்கு நான் இப்பொழுது என் குழந்தையின் குறும்புத்தனத்தை ரசித்து வருகிறேன். அவன் பெரியவனானதும் நான் சினிமாவிற்கும் மீண்டும்...