அம்பாந்தோட்டையில் இன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டமொன்றின்போது பேருந்துகளை தாக்கி சேதம் விளைவித்தமைக்காக ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். அம்பாந்தோட்டை-திஸ்ஸமகராமா வீதியில் பல கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் குடிநீர்விநியோக வசதிகளை வழங்குமாறு கோரி ஆர்ப்பாட்டத்தில்  ஈடுபட்டனர்,குடிநீர் பற்றாக்குறை காரணமாக தாங்கள் எதிர்கொள்ளும் நெருக்கடிகளை அரசாங்கம் அலட்சியம் செய்கின்றது என ஆர்ப்பாட்டக்காரர்கள் குற்றம்சாட்டினர். பின்னர் ஆர்ப்பாட்டக்காரர்கள் பொலிஸாரின் அறிவுறுத்தலையும் மீறி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.இவர்களை பொலிஸார் கலைக்கமுயன்றவேளை மோதல் ஏற்பட்டது, இதன்போது ஆர்ப்பாட்டக்காரர்கள் பல பேருந்துகளை...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றம் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு வழங்கப்பட்டுள்ள டாக்டர் பட்டங்கள் வாபஸ் பெற்றுக்கொள்ளப்பட வேண்டுமென கொழும்பு பல்கலைக்கழகத்தின் அரசியல் விஞ்ஞானம் மற்றும் பொதக் கொள்கை பீடத்தின் முன்னாள் சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி லக்சிறி பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார். கடந்த 2009ம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ மற்றும் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ஸ ஆகியோருக்கு கொழும்பு பல்கலைக்கழகம் கௌரவ கலாநிதி...
இலங்கை வெளிவிவகார அமைச்சில் மாற்றங்களை மேற்கொள்ளவுள்ளதை அமைச்சர் மங்களசமரவீர உறுதிசெய்துள்ளார் இது தொடர்பாக தெரிவிக்கப்பட்டுள்ளதாவது. வெளிவிவகார அமைச்சில் மாற்றங்கள் மேற்கொள்ளப்படவுள்ளதை அமைச்சர் மங்களமசமரவீர உறுதிசெய்துள்ளார். ஜனாதிபதி மற்றும் பிரதமர் ரணில்விக்கிரமசிங்கவுடன் பேச்சுவார்த்தைகளை மேற்கொண்ட பின்னர் அவர்களுடைய ஆலோசனைகளுடன் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.அமைச்சரின் இந்த நடவடிக்கை காரணமாக வெளிவிவகார அமைச்சில் தற்போது முக்கிய பதவிகளில் உள்ள சிலர் மாற்றப்படலாம் என ஊகங்கள் வெளியாகியுள்ளன, இதேவேளை இந்தவிவகாரம் தொடர்பாக பிரதமருக்கும், வெளிவிவகார...
மொஹமட் சியாம் கொலை வழக்கு குறித்த தீர்ப்பு எதிர்வரும் நவம்பர் மாதம் 27ம் திகதி அறிவிக்கப்பட உள்ளது. கடந்த 2013ம் ஆண்டு மே மாதம் மொஹமட் சியாமின் சடலம் தொம்பே பிரதேசத்திலிருந்து மீட்கப்பட்டது. பம்பலப்பிட்டியைச் சேர்ந்த பிரபல வர்த்தகரான மொஹமட் சியாம் கொலை பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இந்தக்கொலைச் சம்பவத்துடன் முன்னாள் பிரதிக் காவல்துறை மா அதிபர் வாஸ் குணவர்தன மற்றும் அவரது புதல்வர் ரவிந்து குணவர்தன உள்ளிட்ட...
எல்லாம் அப்பவே தெரியும். திருடனின் தாயாரிட்டை சாத்திரம் கே்கிற குழு மாதிரித்தான் உள்ளக விசாரணை எண்டு எல்லாருக்கும் தெரியும். அவையள் தெளிவாய் இருக்கினம் கண்டியளே? மகிந்தவை காப்பாற்ற வேணும் எண்டுற கடமையை தலைமேல் கொண்டிருக்கினம். மகிந்தவிலை பாசத்திற்காய் இல்லை. மகிந்தவை சர்வதேச விசாரணைக்கு முன்னாலை நிறுத்தினால் இனவாத வாக்குகள் இனி வாற காலங்களிலை கிடைக்காது எண்டு. அதான் மகிந்தவை தூக்கு கயிற்றிலை இருந்து நான் பாதுகாத்தன் என்று ஒருத்தர் துள்ளிக்குதித் இன்னொருத்தர்...
  இலங்கையில் ஈழத்தமிழர்கள் மீது நடத்தப்பட்ட கொடூரங்கள் தொடர்பாக, 2015 செப்டம்பர் 16 அன்று இலங்கை மீதான ஐநா மனித உரிமைகள் ஆணையர் அலுவாகத்தின் விசாரணை அறிக்கையும், ஐநா மனித உரிமைகள் ஆணையரின் முழுமை அறிக்கையும் வெளியிடப்பட்டது. அதன் பின்னர் ஈழத்தமிழர்களின் விடுதலைப்போர் புதிய கட்டத்திற்கு நகர்ந்துள்ளது. தற்போதைய நிலை குறித்த சில பொதுவான கேள்விகளுக்கு விடை காண்போம். 1. ஐநா மனித உரிமைப் பேரவையில் என்ன நடந்தது? 2015 செப்டம்பர்- அக்டோபர் மாதங்களில்...
விடுதலைப் புலிகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போரின் போது போர்க்குற்றங்களும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களும் நிகழ்ந்திருக்க வாய்ப்புகள் உள்ளதாகவும் இத்தகைய குற்றங்களில் இரண்டு தரப்புகளும் ஈடுபட்டுள்ளதாகவும் ஐநா விசாரணை அறிக்கை உறுதி செய்துள்ள நிலையில் இராணுவத்துக்கு எதிரான விசாரணை என்பது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறியிருக்கிறது. இலங்கை இராணுவம் போர்க்குற்றங்கள் எதிலும் ஈடுபடவில்லை என்று அறிக்கைகள் மூலமும் வாய்மொழியாகவும் சர்வதேச அரங்கில் நிரூபிக்க அரசாங்கம் கடந்த ஆறு ஆண்டுகளாக மேற்கொண்ட...
பல கொள்ளைச் சம்பவங்களுக்கு தொடர்புடைய 7 பேர் மதவாச்சி பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து கைக்குண்டுகள், 6 கூர்மையான ஆயுதங்கள், 10 உலோக குழாய்கள், மற்றும் 6 போலி அடையாள அட்டைகளும் மீட்கப்பட்டுள்ளது. பண கொள்ளை, நகை கடத்தல் மற்றும் காசோலைகளில் ஊழல் சம்பவங்கள் பலவற்றில் இவர்கள் தொடர்புபட்டிருப்பதாக விசாரணைகளின் மூலம் தெரியவந்துள்ளது. சந்தேக நபர்களை இன்று அனுராதபுரம் நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது. சந்தேக நபர்கள் வழங்கிய...
கனடாவில் ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய சட்டங்கள் ஈழத்தமிழர்களுக்கு ஆபத்துக்களையும், சிக்கல்களையும் ஏற்படுத்துமா என  கனடா பொதுத் தேர்தலில்  NDP கட்சியின் சார்பில் போட்டியிடும் செந்தி செல்லையா விளக்கியுள்ளார். லங்காசிறியின் 24 செய்திச் சேவையின் விசேட நேர்காணலிலேயே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் சில தினங்களில் அத்தியாவசிய உணவுப் பொருட்கள் உள்ளடங்கலாக பொருட்கள் சிலவற்றின் விலை அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. பால்மா, சீனி, பருப்பு, உருளைக் கிழங்கு போன்ற உணவுப் பொருட்களின் விலைகளே அதிகரிக்கப்படவுள்ளன. மேலும் சமையல் எரிவாயு, இறக்குமதி செய்யப்படும் விவசாயப் பொருட்கள், தொலைத் தொடர்பு சாதனங்களின் விலையும் அதிகரிக்கப்படவுள்ளதாகத் தெரிய வருகிறது. இலங்கை ரூபாவின் பெறுமானத்தை நிலையாகப் பேணத் தவறியமையே குறித்த விலை அதிகரிப்புக்கு காரணமாக அமைந்திருப்பதாக பொருளாதார நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். எனவே, உலக...