இலங்கையில் 2009ம் ஆண்டு இனவழிப்புப் போர் நடந்து கொண்டிருந்த வேளை பாராளுமன்றத்தை விட்டு வெளியில் வந்து ஈழத் தமிழர்களுக்காக போராடியவர் யார் என விளக்குகின்றார் NDP கட்சியின் சார்பில் கனடா பொதுத் தேர்தலில் போட்டியிடும் எம்.கே சாந்திகுமார் விளக்குகின்றார். லங்காசிறி 24 செய்திச் சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலிலேயே அவர் இவ் முக்கிய விடையம் தொடர்பாக விளக்கம் அளித்துள்ளார். அவரின் நேர்காணலினை இங்கே கேட்கலாம்.
கலப்பு அரசாங்கம் கள்வர்களை பாதுகாத்து வருவதாக ஜே.வி.பி கட்சியின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் கே.டி.லால்காந்த தெரிவித்துள்ளார். மஹிந்த ராஜபக்ஸவின் தலைமையிலான கடந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் மற்றும் குற்றச் செயல்கள் தொடர்பில் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ரணில் விக்ரமசிங்கவே தேசிய அரசாங்கத்தை கட்டுப்படுத்தி வருவதாகவும், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கு அதிகாரங்கள் கிடையாது எனவும் அவர் தெரிவித்துள்ளார். இந்த கலப்பு அரசாங்கம் நீதியை நிலைநாட்டும் என...
தேசத்தை எல்லா சந்தர்ப்பங்களிலும் பாதுகாக்கத் தயார் என இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் கிருஸாந்த டி சில்வா தெரிவித்துள்ளார். அனைத்து படையினரும் நாட்டுக்கு விசுவாசமாகவும், தொழில்சார் ஒழுக்க நெறிகளுடனும் இருக்க வேண்டுமென அவர் கோரியுள்ளார். இலங்கைப் படையினரின் மனிதாபிமானம், தொழில்சார் ஒழுக்கம், நேர்மை, ஒழுக்கம் போன்றவற்றில் உலக அளவில் சிறந்து விளங்குகின்றனர் என அவர் தெரிவித்துள்ளார். இவ்வாறான விடயங்கள் சர்வதேச அமைதி காக்கும் பணிகளின் போது எமது படையினருக்கு கூடுதல் சந்தர்ப்பத்தை ஏற்படுத்திக்...
தகவல் அறியும் உரிமை யாருக்காக? எதற்காக? எனும் மக்கள் கலந்துரையாடல் நிகழ்வு கிளிநொச்சி பரந்தன் பொது நோக்கு மண்டபத்தில் சனிக்கிழமை இடம்பெற்றது. ஊடக ஊழியர்களின் தொழில் சங்க சம்மேளனம், வட மாகாண தொழிசார் ஊடகவியலாளர்களின் சங்கம், கிளிநொச்சி ஊடகவியலாளர் அமையம் ஆகியன ஒன்றிணைந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. தகவல் அறியும் சட்டமூலம் பற்றியும் அதன் சாதக பாதக நிலைமைகள் தொடர்பிலும் விரிவாக பேசப்பட்டதோடு, உலகில் 192 நாடுகளில் தகவல் அறியும் சட்டம் நடைமுறையில்...
இலங்கையில் பாதுகாப்புச் செலவுக்கான நிதி ஒதுக்கீடுகள் தொடர்ந்தும் உயர்த்தப்பட்டுள்ளன. கடந்த ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கீடு செய்யப்பட்ட நிதியை விடவும் இந்த ஆண்டில்  அதிகளவு தொகை ஒதுக்கீடு செய்ய பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. 2015ம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் நகர அபிவிருத்தி மற்றும் பாதுகாப்பு அமைச்சிற்காக 285 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது. எனினும், 2016ம் ஆண்டில் பாதுகாப்பு அமைச்சிற்கு மட்டும் 306 பில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட...
காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளது. தற்போது அமுலில் உள்ள காணாமல் போனவர்கள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழு கலைக்கப்பட உள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. மெக்ஸ்வல் பரணகம தலைமையில் இந்த ஆணைக்குழு இயங்கியுள்ளமை குறிப்பிடத்தக்கது.பெரும்பான்மையானவர்கள் இந்த ஆணைக்குழுவின் நடவடிக்கைகள் குறித்து நம்பிக்கை கொள்ளவில்லை என நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். எவ்வாறெனினும் நடவடிக்கைகள் கைவிடப்பட மாட்டாது என அவர் உறுதியளித்துள்ளார். இந்த ஆணைக்குழுவிற்கு பதிலீடாக புதிய பொறிமுறைமை...
அரசாங்கம் உருவாக்கவுள்ள விசாரணைபொறிமுறையின் கடும்போக்கற்ற தன்மை காரணமாக யுத்த குற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் இலங்கை படையினர் விசாரணைகளை எதிர்கொள்ளவேண்டிய நிலையேற்படாது என வெளிவிவகரா அமைச்சர் மங்கள சமரவீர தெரிவித்துள்ளார் யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளானவர்கள் முதலில் உண்மை மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு முன்நிலையில் உண்மையை ஏற்றுக்கொள்வதற்கான ஏற்பாடுகள் குறித்து திட்டமிடப்படுகின்றது . அதன்பின்னர் அவர்கள் குறித்த வழக்கு மதத்தலைவர்கள் குழுவொன்றின் முன்னிலையில் ஆராயப்படும்,அவர்கள் குற்றம்சாட்டப்பட்டவர்களிற்கு மன்னிப்பை வழங்கலாம் என வெளிவிவகார அமைச்சர் தெரிவித்துள்ளார். இதேவேளை தேசியகலந்துரையாடல்கள்...
காணமற்போன ஊடகவியலாளர் பிரகீத்எக்னலிகொட தொடர்பான விசாரணைகளை குற்றப்புலனாய்வு பிரிவினர் வெலிகந்தை இராணுவமுகாமிற்கு மாற்றியுள்ளனர். தாங்கள் மேற்கொண்ட விசாரணைகள் மூலம் பிரகீத் கிரிதல இராணுமுகாமிலிருந்து வெலிகந்தை முகாமிற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது தெரியவந்துள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர். கிரிந்தல முகாமைசேர்ந்த இராணுவத்தினரிடம் மேற்கொண்ட விசாரணைகளின் பின்னரே வெலிக்கந்தை நோக்கி கவனம் திரும்பியுள்ளதாக குற்றப்புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு உள்ளாகும் படையினர் சார்பில் ஆஜராவதற்கு சட்டத்தரணிகளை அமர்த்தவுள்ள அரசாங்கம் அதற்கான செலவையும் பொறுப்பேற்க உள்ளது. அமைச்சர் சம்பிக்க ரணவக்க இந்த உறுதிமொழியை படையினருக்கு வழங்கியுள்ளார்.ஐக்கியநாடுகள் விசாரணை அறிக்கை தொடர்பாக முப்படையினருடனும் கலந்துரையாடல்களை மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியும், பிரதமரும் விடுத்தவேண்டுகோள்களின் படி படையினரை சந்தித்து உரையாடிய வேளையே அமைச்சர் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார். இந்த சந்திப்புகளின்போது ஐக்கியநாடுகள் பரிந்துரைகள் மற்றும் அது தொடர்பான அரசாங்கத்தின் நிலைப்பாடுகள் குறித்து அமைச்சர் படையினருக்கு தெளிவுபடுத்தியுள்ளார்.அதன்போதே யுத்தகுற்றச்சாட்டுகளிற்கு...
அரசுத்தலைவர் சிறிசேன ஜெனிவாவில் இருந்து திரும்பி வந்தபொழுது அவருக்கு வழங்கப்பட்ட வரவேற்பும் மரியாதையும் புகழாரமும்  நன்கு திட்டமிட்டுச் செய்யப்பட்டவைதான். தமது வெற்றி நாயகர்களை  தண்டிக்க முற்படும்  வெளிச்சக்திகளை  வெற்றிகரமாக  தன் வழிக்குக் கொண்டுவந்ததன் மூலம் நாட்டின் இறையாண்மையையும் கௌரவத்தையும் அவர் பாதுகாத்திருப்பதாக ஒரு தோற்றம் கட்டி எழுப்பப்படு;கிறது.  அவரும் பிரதமரும் ஜெனிவாவில் இருந்து வந்த பின்  ஊடகங்களுக்கும் படைத்துறை பிரதானிகளுக்கும்  தெரிவித்துவரும் கருத்துக்களும் அத்தகையவைதான்.  இதுபோலவே  வெளிவிவகார அமைச்சர்...