முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வீதியில் இறங்கி செல்ல முடியாத நிலைமை ஏற்படும் என அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில், தேர்தலில் வென்றால் தான் பிரதமர் என மகிந்த கூறுகிறார். அவர் தேர்தலில் வெல்ல மாட்டார். இதுதான் உண்மை. இதனால், அவருக்கு பிரதமர் பதவியல்ல, அவர் வீதியில் இறங்கி செல்ல முடியாதளவுக்கு மக்களால் நிராகரிக்கப்படுவார். இறுதியில், முன்னாள் ஜனாதிபதிக்கு ஒருவருக்கு வழங்கப்பட்ட கௌரவமான மரியாதையையும், பாதுகாப்பையையும், சிறப்புரிமைகளையும் அவர் இழக்க...
  இம்முறை பொதுத் தேர்தலில் பெருன்பான்மை கட்சிகளிடையே காணப்படும் போட்டியை விட தமிழ் கட்சிகளுக்கிடையே காணப்படும் போட்டி மிகவும் கடுமையாக காணப்படுகின்றது. தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு எதிராக களமிறங்கியுள்ள தமிழ் தேசிய மக்கள் முன்னணியும் ஜனநாயக போராளிகள் அமைப்பும் இந்த எதிர்பாராத போட்டிக்கு காரணமாக இருக்கின்றது ஆனால் இந்த இரண்டு கட்சிகளின் தலைமைத்துவமும் ஒரு காலத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பில் அங்கமாக இருந்தவர்கள் என்பதுதான் இவர்கள் யார் என்பதை காட்டி கொடுக்கின்றது. முதலாவது கஜேந்திரகுமார்...
 மறைந்த மக்களின் ஜனாதிபதி அப்துல் கலாமின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகிறது. கலாம் வேடத்தில் அமிதாப் பச்சன் நடிக்கவுள்ளார் என்று கூறப்படுகிறது. கடந்த ஜூலை 27 ம் தேதியன்று மக்களின் ஜனாதிபதி அப்துல்கலாம் மாணவர்கள் மத்தியில் பேசும்போது ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்தார். நாடே துக்கத்தில் மூழ்கிய அந்த நிகழ்வில் இருந்து மக்கள் இன்னும் மீளவில்லை, அவரின் பெயரில் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணத்துடன் ஏராளமான மக்கள் அவர்...
அவுஸ்திரேலிய வீரர்கள் மீது இந்திய 'ஏ' அணியின் வீரர் சஞ்சு சாம்சன் எச்சில் உமிழ்ந்ததாக அந்த அணியின் தலைவர் கவாஜா வேதனை தெரிவித்துள்ளார். இந்திய 'ஏ' - அவுஸ்திரேலியா 'ஏ' அணிகளுக்கிடையிலான முத்தரப்பு கிரிக்கெட்டின் இறுதிப்போட்டி சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இதில் இந்திய 'ஏ' அணி, அவுஸ்திரேலிய 'ஏ' அணியை 4 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி சாம்பியன் பட்டம் வென்றது. இந்தப் போட்டியில் கடைசி நேரத்தில் இந்தியாவின் வருங்கால விக்கெட்...
பிரபல இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான், சுதந்தர தினத்தன்று லண்டனில் உள்ள ஓ2 அரங்கில் இசை நிகழ்ச்சி நடத்த உள்ளார். இதுபற்றி அவர் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியதாவது: லண்டனில் உள்ள ரசிகர்கள், நண்பர்களே, உங்களை ஆகஸ்ட் 15 அன்று லண்டன் ஓ2 அரங்கில் சந்திக்கிறேன் என்றார். இந்த இசை நிகழ்ச்சியில் நீத்தி மோகன், ஜாவத் அலி, கார்த்திக், ஹரிசரண், ஜொனிதா காந்தி, கட்டானி ஆகியோரும் பங்கேற்கிறார்கள்.
இந்தியா- இலங்கை அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டியின் போது மைதானத்தில் புகுந்த குரங்கு ஒன்றால் போட்டி சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. இவ்விரு அணிக்குகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி காலே மைதானத்தில் நடைபெற்று வருகிறது. நேற்றைய 3வது நாள் ஆட்டத்தின் போது சந்திமால், முபாரக் துடுப்பெடுத்தாடும் போது மைதானத்தில் ஒரு கருங்குரங்கு புகுந்தது. அந்த குரங்கு அங்கும் இங்கும் ஓடி கலாட்டா செய்தது. இதனால் ஆட்டம் சிறிது நேரம் பாதிக்கப்பட்டது. குரங்கை...
    இயக்குநர் கபீர் கான் இயக்கத்தில் சல்மான் கான், கரீனா கபூர் நடித்த பஜ்ரங்கி பைஜான் படம், 300 கோடி ரூபாய் வசூலைப் பெற்றுள்ளது. இதுவரை வெளிவந்த சல்மான் கான் படங்களில் அதிக வசூல் செய்த படம் இதுதான். இதற்கு முன்பு ரூ.200 கோடி வசூலித்த சல்மான் கான் படமாக ‘கிக்’ இருந்தது. அதன் வசூலை இந்தப் படம் தாண்டியுள்ளது. 2015 இல் அதிகம் வசூலித்த ஹிந்திப் படம் என்கிற...
அக்கரப்பத்தனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பசுமலை விகாரைக்கு சொந்தமான காணியை தனிநபர் ஒருவர் 11.08.2015 அன்று காலை 10 மணியளவில் துப்பரவு செய்து ஆக்கிரமிக்க முயற்சி செய்துள்ளார். இக்காணி பன்சலைக்கு சொந்தமானதால் இக்காணியை விகாரைக்கே வழங்குமாறு இப்பகுதி மக்கள்  ஆரப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். அத்தோடு அக்கரப்பத்தனை பொலிஸ் நிலையத்தில் புகார் செய்துள்ளனர். இக்காணியின் பரப்பளவு 400 பேர்ச் ஆகும். பல வருடமாக இக்காணியினை விகாரை நிர்வாகமே பராமரித்து  வந்துள்ளது.   இந்த நிலையிலேயே தனிநபர்...
  யாழ். புன்னாலைக்கட்டுவன் ஆயற்கடவை பிள்ளையார் ஆலய மண்டபத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பை ஆதரித்து நேற்றுமாலை 6.30மணியளவில் பொதுமக்களால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் வட மாகாணசபை உறுப்பினரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் யாழ் தேர்தல் மாவட்ட வேட்பாளருமான தர்மலிங்கம் சித்தார்த்தன், மாகாணசபை உறுப்பினர் அனந்தி சசிதரன் ஆகியோர் கலந்துகொண்டு உரையாற்றினார்கள். இவர்களுடன் வலிமேற்கு சமூக மேம்பாட்டுக் கழக ஆலோசகர் டேவிட், முன்னைநாள் சீமெந்து கூட்டுத்தாபன ஊழியர் கேதீஸ்வரநாதன்,...