வவுனியா நிருத்திய நிகேதன நுண்கலைக் கல்லூரியும் லண்டன் ஜெயாஞ்சலி நிறுவனமும் இணைந்து வழங்கிய நாட்டிய பெருவிழா நேற்று 02-08- 2015 ஞாயிற்றுக்கிழமை மாலை 4.00 மணியளவில் வவுனியா நகரசபை கலாசார மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வை தென்னிந்திய நடனத்துறை சார்ந்த வெள்ளித்திரை, சின்னத்திரை கலைஞ்ஞர்களுடன் சுவிஸ் நோர்வே, டென்மார்க் மற்றும் இலங்கை கலைஞ்ஞர்கள் இணைந்து வழங்கியிருந்தனர். நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக வவுனியா மாவட்ட பிரதேச செயலாளர் க.உதயராசா, தமிழ் மணி அகளங்கன், கலாசார உத்தியோகத்தர் இ.நித்தியானந்தன், மக்கள் சேவை மாமணி நா.சேனாதிராஜா மற்றும் இந்தியாவின்...
. அதிர்ச்சி தரும் பதிவு. அப்துல் கலாம் அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் வந்ததாக சொன்ன தருனத்தையோ. .. அந்த நேரத்தில் அவர் மருத்துவ மனைக்கு கூட்டிட்டு போனதையோ.... .எந்த வீடியோவோயும் மீடியா மக்களிடம் ஏன் காட்டவில்லை ? இரண்டு நாள் முழுவதும் திரும்பும் திசை எல்லாம் அவரை பற்றி மட்டும் செய்திகளை போட்டு கொண்டிருக்கும் மீடியா, ஒரு மாதமா உடல் நிலை சரி இல்லாததை சொல்லாமல் இருந்தது ஏன்? இறப்பதற்கு முன்பே இறந்து விட்டார் என்று பிஜேபி அமைச்சர்...
  இனப்பிரச்சினைக்கு 13+ தீர்வு என ஏற்கமுடியாது. 13 ஐ தாண்டி அவர்களுக்கு எதுவும் கொடுக்க நாம் தயாரில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் பொதுச் செயலாளர் சுசில் பிரேமஜயந்த கூறியுள்ளார். ஆங்கில ஊடகம் ஒன்றுக்குத் தகவல் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் வடக்கு - கிழக்கு மாகாணங்களை இணைக்கவும், சுயாட்சியை நிறுவவும் விரும்புகிறார். இதனை நாம் ஒருபோதும் அனுமதிக்க மாட்டோம். 13...
  எந்தவொரு கட்சியும் பெரும்பான்மை ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளாது மாவட்ட ரீதியில் ஐக்கிய தேசியக் கட்சிக்கும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பிற்கும் இடையில் கடுமையான போட்டி நிலவும் என குறிப்பிட்டுள்ளனர். எவ்வாறெனினும் ஐக்கிய தேசியக் கட்சி ஓரளவு முன்னணியில் திகழ்வதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சி மொத்தமாக 90 ஆசனங்களையும், தேசியப் பட்டியல் மூலம் 12 முதல் 14 வரையிலான ஆசனங்களையும் பெற்றுக்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு 81 ஆசனங்களையும் தேசியப் பட்டியல்...
  கொழும்பு தனியார் பஸ் நிலையத்தில் சூட்கேஸ்க்குள் இருந்து மீட்கப்பட்ட யாழ். வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கார்த்திகாவின் சடலம் தொடர்பில் விசாரணைகள் தொடர்கின்றன. இந்  நிலையில் கார்த்திகாவைக் கொலை செய்தார் என்று நம்பப்படுபவர், பெண்ணுடன் தங்கியிருந்த விடுதியில் இருந்து பெண்ணின் சடலம் அடங்கிய சூட்கேஸை சிரமத்துடன் சுமந்துவரும் சிசிடிவி காணொளி காட்சியை பொலிஸார் வெளியிட்டுள்ளனர் இதன் அடிப்படையில் குறித்த நபரை அடையாளம் காட்டுமாறு பொதுமக்களீன் உதவியை பொலிஸார் கோரியுள்ளனர்.
  யாழ்.தேர்தல் களத்தில் 15 கட்சிகள், 6 சுயேற்சைக் குழுக்கள் உள்ளடங்கலாக 21 கட்சிகளின் 210 வேட்பாளர்கள், 7 வேட்பாளர்களை வெற்றபெற வைப்பதற்கு களமிறங்கியுள்ளார்கள். இந்த நிலையில் கூட்டமைப்பின் வெற்றியை இல்லாதொழிப்பதற்காக சில குள்ளநரிகள் கங்கணம் கட்டி நிற்கின்றார்கள். உண்மையாக போராடியவர்கள், தேசத்தை நேசித்தவர்கள் எல்லாம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் கரங்களைப் பலப்படுத்துகின்ற வேளை,  தமிழ்த் தேசியத்திற்குச் செல்லும் வாக்குகளை இல்லாதொழிக்க தென்னிலங்கை அரசியல்வாதிகளிடம் லட்சக்கணக்கில் பணங்களைப் பெற்று வந்துள்ளார்கள். நாங்கள் முன்னாள் போராளிகள்...
  "கொழும்பில் எனது ஆதரவாளர்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்த ராஜபக்‌ஷவினர் இந்த நாட்டில் மீண்டும் வெள்ளை வான் போன்ற தீவிரவாத கலாசாரத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர்." - இவ்வாறு குற்றஞ்சாட்டியுள்ளார் நிதியமைச்சரும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட வேட்பாளருமான ரவி கருணாநாயக்க. இந்தச் சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி, பிரதமர், பொலிஸ்மா அதிபர் ஆகியோரின் கவனத்திற்குக் கொண்டுவருவதோடு, குற்றவாளிகளுக்குத் தகுந்த தண்டனை வழங்கிக் கொடுக்க நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் தெரிவித்துள்ளார்....
இந்திய சினிமாவை பொறுத்த வரை ரூ 100 கோடி கிளப் என்பது ஒரு நடிகரின் கௌரவமாக தற்போது மாறியுள்ளது. ஆனால், தற்போது இந்திய சினிமா ரூ 500 கோடி வரை அசால்ட்டாக வசூல் செய்து விடுகின்றது. இந்நிலையில் இந்திய அளவில் அதிக முறை ரூ 100 கோடி வசூல் நடிகர்களின் சிறப்பு தொகுப்பு தான் இந்த பகுதி. சல்மான் கான் சல்மான் கான் தும்மினால் கூட அதை படமாக எடுத்து ரூ...
ஆர்யா, விஷால் இருவரும் நல்ல நண்பர்கள் என்பது அனைவரும் அறிந்ததே. சுசீந்திரன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள பாபும் புலி படத்தின் இசை வெளியீட்டு விழா நாளை நடைபெற இருக்கிறது. இந்நிலையில் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில், ஆர்யா தயதுசெய்து நீ என்னுடைய பாயும் புலி ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு வந்துவிடாதே. பாண்டிய நாடு நிகழ்ச்சியில் நீ பேசி பரபரப்பை ஏற்படுத்திவிட்டாய் என்று டுவிட் செய்துள்ளார்.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை நடிகை மற்றும் பாடகி பரவை முனியம்மா. இவர் சமீபகாலமாக உடல்நலக் குறைவால் மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். இவரின் இந்த நிலையை அறிந்த நடிகர் விஷால், தனுஷ், சிவகார்த்திகேயன் போன்ற நட்சத்திரங்கள் இவருக்கு பண உதவிகள் செய்து வந்தனர். இந்நிலையில், நடிகை பரவை முனியம்மாவுக்கு எம்.ஜி.ஆர். அறக்கட்டளை சார்பில் ரூ.6 லட்சம் நிதியுதவியும், குடும்பச் செலவுகளுக்கென்று மாதந்தோறும் ரூ.6000 வழங்க ஆணையிட்டுள்ளார் முதலமைச்சர்...