நடிகர் வினுசக்கரவர்த்தி உயர் இரத்த அழுத்தம் மற்றும் சர்க்கரை நோய் காரணமாக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். நினைவு இழந்த நிலையில் உள்ள அவருக்கு, டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள். ‘குருசிஷ்யன்’, ‘அருணாசலம்’, ‘நாட்டாமை’, ‘மாப்பிளை கவுண்டர்’, ‘சிவப்பு நிலா’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘ஜெமினி’ உள்பட பல படங்களில் நடித்தவர், வினுசக்கரவர்த்தி. இவர், கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவாக இருந்தார். இந்த நிலையில், அவருக்கு நேற்று திடீரென்று இரத்த அழுத்தமும், சர்க்கரையும் அதிகமானதால்...

இந்தியா- வங்கதேசம் இடையேயான எல்லைப் பகுதியை பிரித்துக் கொள்ளும் வரலாற்று சிறப்புமிக்க ஒப்பந்தம் இன்று கையெழுத்தாகிறது. முன்னதாக, கடந்த 1974-ம் ஆண்டு, இந்தியா வங்கதேசம் இடையே எல்லைப்பகுதியை பிரித்துக் கொள்ள ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், தற்போது வரை இந்தியாவிற்குட்பட்ட பகுதிகள் வங்கதேச நாட்டிற்குள்ளும், வங்கதசேத்திற்கு சொந்தமான நிலப்பகுதிகள் இந்தியாவிற்குள்ளும் உள்ளன. இவற்றை சீரமைத்து நிரந்தரமாக வரையறை செய்து எல்லைப்பகுதியை நிர்ணயிக்கும் நடைமுறை இதுவரை கையெழுத்தாகவில்லை. எல்லையை சீரமைக்க இந்தியாவை வங்கதேசம் நீண்ட...
உலக பேட்மிண்டன் சாம்பியன்ஷிப் போட்டி இந்தோனேஷியாவின் ஜகர்த்தா நகரில் வருகிற 10-ந்தேதி தொடங்குகிறது. இந்த போட்டிக்கு தயாராகும் வகையில் இந்திய நட்சத்திர வீராங்கனை சாய்னா நேவால் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார். ஆனால் சாய்னாவுக்கு தோள்பட்டையில் பிரச்சினை இருப்பதால் அவர் முழு உடல்தகுதியுடன் இருப்பாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இது தொடர்பாக உலக தரவரிசையில் 2-வது இடம் வகிக்கும் சாய்னா கூறும் போது, ‘தோள்பட்டையில் கொஞ்சம் வலி உள்ளது. ஆனால்...
இலங்கை - பாகிஸ்தான் கிரிக்கெட் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் சர்வதேச போட்டி கொழும்பில் நேற்றிரவு நடந்தது. முதலில் பேட் செய்த பாகிஸ்தான் அணி 5 விக்கெட் இழப்புக்கு 175 ரன்கள் குவித்தது. அகமது ஷேசாத், சோயிப் மாலிக், உமர் அக்மல் ஆகிய மூவரும் தலா 46 ரன்கள் வீதம் எடுத்தனர். இதில் உமர் அக்மல் தனது ஸ்கோரில் 3 சிக்சரும், 3 பவுண்டரியும் விளாசினார். அடுத்து இலக்கை...
இந்திய ஆண்கள் ஆக்கி அணியின் தலைமை பயிற்சியாளராக இருந்த பால் வான் ஆஸ் (நெதர்லாந்து) சமீபத்தில் மாற்றப்பட்டு புதிய பயிற்சியாளராக இந்திய அணியின் உயர் திறன் மேம்பாட்டு இயக்குனராக இருந்து வந்த ரோலன்ட் ஓல்ட்மான்ஸ் நியமிக்கப்பட்டார். ஒலிம்பிக் போட்டிக்கு இன்னும் ஒரு ஆண்டு காலமே இருக்கும் நிலையில் பயிற்சியாளர் மாற்றம் செய்யப்பட்டதற்கு முன்னாள் வீரர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில் இது தொடர்பாக இந்திய ஆக்கி அணியின்...
நியூயார்க்: மக்கள் தொகையில் உலகில் தற்போது முதலிடத்தில் உள்ள சீனாவை, வரும் 2022 ஆம் ஆண்டு இந்தியா முந்தும் என்று ஐக்கிய நாடுகள் சபை நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது. உலகில் அதிக மக்கள் வசிக்கும் நாடுகள் பட்டியலில் சீனா தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது. அந்நாட்டில் மக்கள் தொகையை கட்டுப்படுத்த குறைக்க ஒரு தம்பதி ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள வேண்டும் என்ற சட்டம் கட்டாயமாக அமல்படுத்தப்பட்டுள்ளது. இந்நிலையில்...
 கடந்த ஆண்டு 239 பேருடன் மாயமான மலேசிய விமானத்தின் பாகங்கள், இந்திய பெருங்கடல் பகுதியில் உள்ள ரி யூனியன் தீவில் கண்டெடுக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. மலேசிய தலைநகர் கோலாலம்பூரில் இருந்து, சீன தலைநகர் பீஜிங்கை நோக்கி, மலேசிய விமானம் ஒன்று, கடந்த ஆண்டு மார்ச் 8ல் சென்றது. எம்.எச் 370 என்கிற அந்த விமானத்தில், பயணிகள், பணியாளர்கள் உட்பட மொத்தம் 239 பேர் இருந்தனர். இந்நிலையில், புறப்பட்டுச்...
    கூட்டமைப்பினருக்காக தேர்தல் களங்களில் பக்கச் சார்பாக ஆதரித்துப் பேசுவது எனக்கழகல்ல என வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரன் தெரிவித்தார். எதிர்வரும் பொதுத்தேர்தலில் தனது நிலைப்பாடு தொடர்பாக விளக்கமளிக்கும் அறிக்கையொன்றை வெளியிட்டபோதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, நான் வெளிநாடுகள் சென்ற சமயத்தில்த் தான் பொதுத் தேர்தல் நியமிக்கப்பட்டது. நான் தற்பொழுதுதிரும்பிவந்துள்ளேன். தேர்தலில் உங்கள் பங்களிப்பு என்ன என்று பலரும் என்னைக் கேட்கின்றார்கள். யாழ் தேர்தல் தொகுதியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பில்...
  – டி.பி.எஸ்.ஜெயராஜ் துரோகியாக்கப்படல் தொடர்பாக தமிழ் தேசியவாத அரசியலில் திரும்பத் திரும்ப தோன்றும் தொடர் நிகழ்வு தனது அசிங்கமான தலையை மீண்டும் உயர்த்தியுள்ளது. நான் இங்கு, காட்டிக் கொடுப்பு அல்லது தேசத்துரோகம் என்கிற சொற்களைப் பயன்படுத்தாமல் “துரோகியாக்கப்படல்” என்கிற சொல்லைப் பயன்படுத்தியிருப்பது, உண்மையான காட்டிக்கொடுப்பு அல்லது உண்மையான தேசத்துரோகம் புரிபவர்களுக்கும் மற்றும் நம்பிக்கை மோசம் புரிபவர்கள் அல்லது துரோகமிழைப்பவர்கள் என்று பெயரிடப்பட்டு குற்றம் சாட்டப்பட்டுள்ளவர்களுக்கும் இடையில் உள்ள வேறுபாட்டை பிரித்துக்...
இலங்கை ரூபவாஹினிக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் பதவியை கலாநிதி சோமரத்ன திஸாநாயக்க ராஜினாமா செய்துள்ளார். தனிப்பட்ட மற்றும் தற்போது காணப்படும் சில அரசியல் விடயங்களின் அடிப்படையில் தான் தலைவர் பதவியில் இருந்து விலக தீர்மானித்ததாக சோமரத்ன திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார். எதிர்வரும் திங்கட் கிழமை முதல் தனது ராஜினாமா நடைமுறைக்கு வரும் எனவும் அவர் கூறியுள்ளார். பிரபல திரைப்பட இயக்குனரான சோமரத்ன திஸாநாயக்க, கடந்த காலங்களில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு ஆதரவாக செயற்பட்டு வந்தார். அவருடன்...