ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளர் ஒருவரை கடத்திச் சென்ற, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் 6 ஆதரவாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக அக்குரஸ்ஸ காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் மாத்தறை மாவட்ட வேட்பாளர் சாகல ரத்நாயக்கவின் சுவரொட்டிகளை ஒட்டிக்கொண்டிருந்த ஐக்கிய தேசியக் கட்சியின் ஆதரவாளரையும் அவரது முச்சக்கர வண்டியையும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஆதரவாளர்கள் கடத்திச் சென்றனர்.
இவர்களை பின் தொடர்ந்து சென்ற காவற்துறையினர் அக்குரஸ்ஸ, தியலபே பிரதேசத்தில் கைது...
ஏறாவூர் பொலிஸ் பிரிவிலுள்ள வந்தாறுமூலை பிரதேசத்தில் சுமார் எட்டு வருடங்களுக்கு முன்னர் இளம் குடும்பப் பெண்ணொருவரை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட ஈபிடிபியின் முன்னாள் உறுப்பினர் ஒருவருக்கு நேற்று மரண தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது.
மட்டக்களப்பு மேல் நீதிமன்ற நீதிபதி எஸ்.சந்திரமணி இத்தீர்ப்பினை வழங்கினார்.
2007 டிசம்பர் 25 ஆம் திகதி வந்தாறுமூலை ஏபீசி வீதியைச் சேர்ந்த 25 வயதுடைய கே. எஸ். பிரமாவதி என்ற...
மகிந்த ராஜபக்ச உட்பட கடந்த அரசாங்கத்தினால், ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான நிறுத்திற்கு செலுத்த வேண்டிய 12 கோடி ரூபாவை செலுத்தாது அதனை புறக்கணித்து வருவதாக ஐக்கிய தேசியக் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
நாமல் ராஜபக்ச பொதுநலவாய நாடுகளின் விளையாட்டுப் போட்டி குறித்து பேச்சுவார்த்தை நடத்துவதற்காக என்று கூறி தான் நினைத்தாற் போல் விமானங்களை பயன்படுத்தியுள்ளார்....
பிரபல ரகர் வீரர் வசீம் தாஜூடீனின் கொலையுடன் பல முக்கியஸ்தர்களுக்கு தொடர்பு உண்டு என புலனாய்வு பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மகன் யோசித ராஜபக்ச, முன்னாள் சிரேஸ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர், ஜனாதிபதி பாதுகாப்புப் பிரிவு உத்தியோகத்தர்கள் உள்ளிட்டவர்களுக்கு தொடர்பு உண்டு என தெரிவித்துள்ளனர்.
கொலை இடம்பெற்ற சந்தர்ப்பத்தில் அரசியல் அழுத்தம் காரணமாக இந்த சம்பவம் ஒர் விபத்து என பொலிஸார் விசாரணைகளை முடிவுறுத்தியிருந்தனர். எனினும் ஆட்சி...
மூதூர் முஸ்லீம்களின் பிரதிநிதி ஏ.எம்.தௌபீக்கின் ஆதரவாளர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரச்சாரக்கூட்டம் நேற்று மாலை 7.30 மணிக்கு மூதூரில் நடைபெற்றது.
இக் கூட்டத்தில் கருந்து தெரிவித்த இரா.சம்பந்தன்,
இக்கூட்டத்தில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், கிழக்கு மாகாண கல்வி அமைச்சர் எஸ்.தண்டாயுதபாணி மற்றும் கூட்டமைப்பின் வேட்பாளார்கள் உட்பட பல முக்கியஸ்தர்கள் பங்கேற்றனர்.
கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் திரலாக இதில் பங்கேற்றதுடன் திருகோணமலை மாவட்டத்தில் நடைபெற்ற கூட்டங்களில் அதிகூடிய மக்கள் தொகை கொண்ட...
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல்- இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி,
Thinappuyal News -
இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமின் உடல் அவர் வீட்டிலிருந்து ராணுவ வாகனத்தில் ராணுவ வீரர்களின் அணிவகுப்புடன் நகரின் முக்கிய தெருக்கள் வழியாக வந்து ராமேஸ்வரம் தீவின் தங்கச்சிமடத்தில் உள்ள பேய்க்கரும்பு என்னும் இடத்தில் முழு ராணுவ மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. முப்படை வீரர்களும் அணிவகுத்துச் சென்று அவரது உடலுக்கு மரியாதை செலுத்தினர்.
இன்றைய இறுதி நிகழ்வில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் பொன் ராதாகிருஷ்ணன்,...
குருணாகல் மாவட்ட ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வேட்பாளர் மஹிந்த ராஜபக்சவிடம் பொலிஸார் விசாரணை நடத்தக் கூடிய சாத்தியம் காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
ராடா நிறுவன ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்தப்படலாம் என பொலிஸ் உயர்மட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டிரான் அலஸ் ராடா நிறுவனத்தின் தலைவராக கடமையாற்றியிருந்தார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் துறைசார் விடயங்களில் ஒன்றாக இந்த நிறுவனம் காணப்பட்டது.
2004ம் ஆண்டு டிசம்பரில் இடம்பெற்ற ஆழிப் பேரலை...
தமிழ் தேசிய கூட்டமைப்பினரை பகிரங்க விவாதத்திற்கு வருமாறு ஈழத் தமிழர் செயலகத்தின் பிராதான செயற்பாட்டாளர் பிலிப் முருகையா அழைப்பு விடுத்திருக்கின்றார்.
Thinappuyal -
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,
‘மீண்டுமொரு பொதுத் தேர்தலை நாடு சந்திக்கின்றது. தமிழினமும் சந்திக்கின்றது. இம்முறையும் தமிழர் தாயகம், தேசியம், சுயநிர்ணய உரிமை என்றும் கோஷங்கள் தமிழர் நிலமெங்கும் ஒலிக்கின்றது. தமிழர்களுக்கான நியாயமான தீர்வொன்று 2016 ஆம் ஆண்டில் உறுதி என்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர்கள் உரக்க கூறுகினட்றார்கள். சர்வதேசம் எம்மை உற்று நோக்கிக்கொண்டு இருக்கின்தென்றும் எமது பேரம் பேசும் சக்தியை அதிகரிக்க வேண்டும் என்றும்...
ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது…
Thinappuyal -
ஏனைய மாகாணங்களிலுள்ள அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கும் நிரந்தர வாழ்வாதார திட்டம், இன்று மன்னாரில் சந்திப்பு நடைபெற்றது...
வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் அவர்களால் வடக்கு மாகாணத்தில் உள்ள சிறையில் வாடும் அரசியல் கைதிகளின் குடும்பங்களுக்கான வாழ்வாதார திட்டத்தின் கீழ் தற்போது ஏனைய மாகாணங்களிலும் உள்ள இவ்வாறான குடுமங்களுக்கும் தலா ஐம்பதுனாயிரம் வழங்க அமைச்சர் அறிவித்துள்ளதோடு, 29-07-2015 புதன் காலை 10 மணியளவில் மன்னாரில் உள்ள அமைச்சரின் உப அலுவலகத்தில்...
பாரதத்தின் முன்னாள் ஜனாதிபதியும் பார் போற்றும் விஞ்ஞானியுமான டாக்டர் அப்துல் கலாம் அவர்கள் தன் வாழ்நாளில் பட்டம், பதவி, பணம், புகழ் எதையும் விரும்பியதில்லை. மாறாக ஏழ்மை, பரிவு, இரக்கம் போன்றவற்றையும் தன்னம்பிக்கையையும் அளவுக்கதிகமாக நேசித்ததுடன் .....
ஒரு தனிமனிதனாக இருந்தும் தன் தாய்நாடு தொடர்பில் கடைசிமூச்சுவரை துடிப்புடனும் உயிர்ப்புடனும் இருக்க வேண்டும் என்பது அவரது வேரவா.
வரலாற்று இந்தியாவில் பல புத்திஜீவிகள், பல கல்விமான்கள், பல விஞ்ஞானிகள் இருந்தாலும் கூட...