பிரித்தானிய தமிழர் பேரவையின் ஏற்பாட்டில் கடந்த ஜனவரி மாதம் 29ஆம் திகதி தமிழர்களுக்கான நீதி கோரிய சந்திப்பு ஒன்று இடம்பெற்றது. இதில் அரசியல் சமய தலைவர்கள், ஊடகவியலாளர்கள் மற்றும் தமிழ் இன செயற்பாட்டாளர்கள் என பலர் கலந்துகொண்டனர்.  ஒரு நிமிட மௌன அஞ்சலியுடன் ஆரம்பமான சந்திப்பில் பாரம்பரியத்தை குறிக்கும் வகையில் பரத நாட்டிய நிகழ்வும் இடம்பெற்றது. இதை தொடர்ந்து பிரித்தானிய தமிழர் பேரவையின் பொது செயலாளர் திரு. ரவி குமார்...
  இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல்இலங்கையின் கடல் எல்லையில் கடற்றொழிலில் ஈடுபடுகின்ற இந்திய மீனவர்கள்பற்றிய கலந்துரையாடல் சனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று (12) பிற்பகல் சனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. உள்நாட்டலுவல்கள், கடற்றொழில் அமைச்சர் ஜோசப் மைக்கல் பெரேரா, பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் ருவன் விஜேவர்தன, வட மாகாண ஆளுநர் எச்.எம்.பி.பீ.பளிஹக்கார, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் ஆகியோரும் இந் நிகழ்வில் கலந்துகொண்டனர். அதன் பின்னர் வடமாகாண முதலமைச்சர்...
  முஸ்லிம் மக்கள் தனிநாட்டு கோரிக்கையை முன்வைக்கவில்லை என அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். முஸ்லிம் மக்கள் எந்தவொரு சந்தர்ப்பத்திலும் தனிநாட்டு கோரிக்கைகளை முன்வைத்ததில்லை. ஐக்கிய இலங்கைக்குள் அதிகாரங்கள் பகிர்ந்தளிக்கப்பட வேண்டும் என்பதே முஸ்லிம்களின் அபிலாஸையாகும். மக்களின் நிர்வாக நடவடிக்கைகளை இலகுவாக்க தமிழ் பேசும் அரசாங்க பிரதான அதிகாரியொருவரை நியமிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கைக்கு அரசாங்கம் இனவாத மூலாம் பூசியது. நாட்டில் வாழும் தமிழ் முஸ்லிம் மக்கள் ஐக்கிய இலங்கைக்குள் வாழவே விரும்புகின்றனர். இந்த நோக்கிலேயே...
  அணிலை மரத்தில் ஏற விட்டு விட்டு நாய் பிடிக்க நினைப்பது தவறு TNA முஸ்லீம் அரசியல் வாதிகள் தொடர்பில் கவனம் செலுத்தாது போனால் பேயனுமாம்கி பே----- ஆக்குவார்கள்
  வவுனியா பொலிஸார் பக்கச் சார்பாக நடந்து கொள்கின்றனர், நகரசபை உத்தியோகத்தர்களை கைது செய்து தடுத்து வைத்துள்ளனர் என்று தெரிவித்து வவுனியா நகரசபையினர் காலவரையற்ற பணிப்புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:- நேற்று முன்தினம் வவுனியா நகரசபையின் சுகாதார பரிசோதகர் உள்ளிட்ட உத்தியோகத்தர்கள் சந்தை அமைந்துள்ள நகரப் பகுதிகளில் நகரசபையின் அனுமதியின்றி வீதியோர வியாபாரத்தில் ஈடுபட்டவர்களை அகற்றியுள்ளனர். இதன் போது அப்பகுதியில் மரக்கறிகளை...
  வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையின் கீழ் அல்லது வேறு ஒருவரின் கீழ் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் செயற்பாடு இருக்குமானால் நாம் ஆதரிக்கவும் - இணைந்து செயற்படவும் தயாராக உள்ளோம்." என தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் பொன்னம்பலம் கஜேந்திரகுமார் தெரிவித்தார். வடக்கு மாகாண சபையில் நேற்று நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை பிரேரணை குறித்து தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் நிலைப்பாடு குறித்து விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று புதன்கிழமை...
  எனது 100 சதவீத ஆதரவு ஜனாதிபதி பிரதமருக்கே என முன்னாள் பாராளுமன்ற அமைச்சர் மேர்வின் சில்வா தெரிவித்துள்ளார். அவர் முன்னாள் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் பசில் ராஜபக்ச, முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக முறைப்பாடு செய்திருந்தார். இந்த முறைப்பாட்டின் தற்போதைய நிலைமை குறித்து அறிந்து கொள்வதற்காக மேர்வின் சில்வா குற்ற விசாரணைப் பிரிவிற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்திலே இவ்வாறு தெரிவித்துள்ளார். தான் எப்பொழுதும் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி என்பதனால் தனது...
  இச்சம்பவம் தொடர்பில் தமிழரசுக்கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா அவர்களிடம் தினப்புயல் இணையத்தளம தொலைபேசியில் தொடர்புகொண்டு; வினவியபொழுது, அப்பிரதேசத்தினைச் சேர்;ந்த நீதன் என்பவரை எமக்குத் தெரியாது. அன்ரனி ஜெகநாதன் அவர்கள் நீதனைப் பயன்படுத்தியதும் எங்களுக்குத் தெரியாது. அங்கு ஒரு இளைஞர் அணியை உருவாக்கும் நோக்கில் இளைஞர்களைத் திரட்டி, கூட்டம் ஒன்றினை ஒழுங்குசெய்தோம். இதில் இந்த நீதன் அவர்களும் ஒட்டிக்கொண்டதன் காரணமாக, அப்பிரதேச மக்கள் நீதன் என்பவர் கடந்த காலங்களில் மஹிந்த...
ஓமந்தை நாவற்குளம், மருதோடை, மருதங்குளம் ஆகிய கிராமங்களைச்சேர்ந்த மாணவர்களுக்கான கற்றல் உபகரணங்கள் வழங்கும் நிகழ்வு மருதோடை அ.த.க.பாடசாலையில் 10.02.2015 அன்று முன்னைநாள் கூட்டுறவு பரிசோதகரும், ஓமந்தை கிராம அபிவிருத்திச்சங்க தலைவருமான திரு.சிவசேகரம் தலைமையில் நடைபெற்றது. நொச்சிக்குளம் சிறீசித்தி விநாயகர் ஆலய செயலாளர் குமாரசாமி இராஜேந்திரகுமார் ஒழுங்கமைப்பில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன், ரி.ஆர்.ரி வானொலியின் நிதி உதவியுடன் இக்கற்றல் உபகரணங்களை வழங்கி வைத்தார். ஓமந்தை பிரதேச கிராம-மாதர் அபிவிருத்திச்சங்கங்களின் பிரதிநிதிகள், பொதுமக்கள்...
அப்பிள் நிறுவனம் கடந்த வருடம் iPhone 6 மற்றும் iPhone 6 Plus ஆகிய இரு ஸ்மார்ட் கைப்பேசிகளை அறிமுகம் செய்திருந்தது.இந்நிலையில் இவ்வருடம் iPhone 7 ஸ்மார்ட் கைப்பேசி அறிமுகம் செய்யப்படும் என பலரும் எதிர்பார்த்திருந்த வேளையில் iPhone 6S கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா உட்பட பல மேம்பாடுகள் உள்ளடக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் செப்டெம்பர் அல்லது ஒக்டோபர் மாதத்தில் இக்கைப்பேசி அறிமுகம்...