இலங்கையின் புதிய அரசாங்கத்துடன் பேச்சுக்களை நடத்துவதற்காக, சிறப்புத் தூதுவர் ஒருவரை சீன அரசாங்கம் விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கவுள்ளது.
இருதரப்புப் பேச்சுக்களை நடத்தவே சீன அரசாங்கத்தின் சிறப்புத் தூதுவர், விரைவில் கொழும்புக்கு அனுப்பி வைக்கப்படலாம் என்று இலங்கை வெளிவிவகார அமைச்சு வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மகிந்த அரசாங்கத்தின் காலத்தில் சீனாவினால் மேற்கொள்ளப்பட்டு வந்த அபிவிருத்தித் திட்டங்களை புதிய அரசாங்கம் மீளாய்வு செய்யப் போவதாக அறிவித்துள்ளது.
இந்தநிலையிலேயே இலங்கையுடனான உறவுகளை மீண்டும் வலுப்படுத்திக் கொள்வதற்காகவும்,...
இலங்கையில் 67வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதிய அரசாங்கத்தின் கீழ் நாடு முன்னோக்கி செல்ல தாம் வாழ்த்து தெரிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் இலங்கை இந்தியாவுடனான உறவை மேம்படுத்த இந்தியா தொடர்ந்தும் அவதானம் செலுத்தி வந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இந்திய ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி இலங்கையில் புதிய தலைவரின் நிர்வாகத்திலும் இந்தியா அதனை மேலும் வலுவானதாக்க விரும்புவதாகவும் தெரிவித்துள்ளார்
அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியனவற்றை மக்கள் பார்வையிடுவதற்கு தேவையான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் டொக்டர் ராஜித சேனாரட்ன தெரிவித்துள்ளார்.
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அலரி மாளிகை மற்றும் ஜனாதிபதி மாளிகை ஆகியவற்றில் தங்கியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மாளிகைகளை தூய்மைப்படுத்தும் நடவடிக்கைகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்தப் பணிகள் பூர்த்தியானதன் பின்னர் அடுத்த வாரமளவில் மாளிகைளை மக்கள் பார்வையிட அனுமதியளிக்கப்படும்.
மேலும், நாடு முழுவதிலும் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த...
தேசிய ஐக்கியத்தை அடைய அர்ப்பணிப்புடன் செயற்படுவோம்: ஜனாதிபதியின் சுதந்திர தின வாழ்த்துச் செய்தி
Thinappuyal -
நல்லிணக்கத்தினூடாக தேசிய ஐக்கியத்தை அதன் எல்லா அம்சங்களிலும் அடைந்து கொள்வதற்கு அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டிய சந்தர்ப்பம் உருவாகியுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
நாட்டின் 67 ஆவது சுதந்திர தின வாழ்த்துச் செய்தியிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் ஜனாதிபதி செயலகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் கூறியுள்ளதாவது,
நாட்டில் ஒரு புதிய நல்லாட்சி யுகம் உதயமாகியிருக்கும் இவ்வேளையில் இந்த 67 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டம் விசேட முக்கியத்துவம் பெறுகிறது.
இது எமது...
சு(தந்திர)தினம்₹,2015/பெப்ரவரி/04₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹₹அரசுமாறினாலும்..!அட்டூழியம் மாறவில்லை..!
ஆட்சிமாறினாலும்..!
ஆக்கிரமிப்பு மாறவில்லை..!
இடம் மாறினாலும்..!
இடர் மாறவில்லை..!
ஈனம் மாறினாலும்..!
ஈரம் மாறவில்லை..!
உடை மாறினாலும்..!
உள்ளம் மாறவில்லை..!
ஊழல் மாறினாலும்..!
ஊதுகுழல் மாறவில்லை..!
எண்ணம் மாறினாலும்..!
எச்சம் மாறவில்லை..!
ஏணி மாறினாலும்..!
ஏக்கம் மாறவில்லை..!
ஐயர் மாறினாலும்..!
ஐயம் மாறவில்லை..!
ஒற்றன் மாறினாலும்..!
ஒட்டுண்ணிகள் மாறவில்லை..!
ஓணான் மாறினாலும்..!
ஓநாய்கள் மாறவில்லை..!
ஔடதம் மாறினாலும்..!
ஔவியம் மாறவில்லை..!
---அம்பிளாந்துறையூர் அரியம்--
நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில் காரசாரமான கவிதை-பிரதாபன்
Thinappuyal News -
நாங்கள் இயக்கத்தலைவர் யாழ்மாவட்டம் காணாமல் போனோர் தொடல்பில்
காரசாரமான கவிதை-பிரதாபன்
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை- இரா.சம்பந்தன், எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Thinappuyal News -
இலங்கையின் 67 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதிப் பகுதியில் நாளை புதன்கிழமை நடைபெறுகிறன. இந்த நிகழ்வில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் கலந்துகொள்ளவுள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து இன்று இருவரும் சக உறுப்பினர்களிடம் கருத்துப் பரிமாறிக் கொண்டனர் என்றும் தெரிவிக்கப்படுகிறது.
எனினும் இவர்கள் இருவரும் கலந்துகொள்வது குறித்து கட்சி தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்துள்ளனர்...
தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹிந்தவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி வியாழக்கிழமை ஆரம்பம்
Thinappuyal News -
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவை பிரதமராக்கும் புதிய அரசியல் கூட்டணி எதிர்வரும் வியாழக்கிழமை ஆரம்பிக்கப்பட உள்ளது.
ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் நான்கு கட்சிகள் கூட்டாக இணைந்து இந்த புதிய அரசியல் கூட்டணி உருவாக்கப்பட உள்ளது.
தினேஸ் குணவர்தன தலைமையிலான மஹஜன எக்சத் பெரமுன, மேல் மாகாண சபை உறுப்பினர் உதய கம்மன்பில தலைமையிலான பிவித்துரு ஹெல உறுமய, விமல் வீரவன்ச தலைமையிலான தேசிய சுத்நதிர முன்னணி மற்றும்...
கடந்த 25வருட காலங்களாக விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு ஆயுதங்களை வழங்கிவந்த குமரன் பத்மநாதன் என அழைக்கப்படும் கே.பி, தற்பொழுது வீட்டுக்காவலில் வைக்கப்பட்டிருக்கின்றார் என்பது ஒரு வேடிக்கைக்குரிய விடயமே.
இவருடைய ஆயுத பரிமாற்றங்கள் (வியாபாரம்) 175 நாடுகளில் இடம்பெற்றுவந்தது. உலக வரலாற்றில் பல கோடிகளுக்கு சொந்தக்காரரும், பல தொழில் நிறுவனங்களுக்கு உரிமையாளருமாகிய கே.பியை கைதுசெய்து சிறையில் அடைப்பதாலும், பிரபாகரனின் இறப்பு தொடர்பிலும்,...
விடுதலைப்புலிகளின் போராட்டம் உச்சக்கட்டத்தினை சென்றிருந்தநிலையில், அப்போராட்டத்தினை அமெரிக்க அரசுடன் இணைந்து சிதைக்கும் நடவடிக்கையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க அவர்கள் செயற்பட்டமையை யாவரும் அறிந்ததே. போரியல் வரலாற்றில் கெரில்லா, வலிந்த தாக்குதல், முற்றுகை என்று முப்படைத்தாக்குதல்களையும் திறம்பட நகர்த்தும் திறன் வாய்ந்தவர் கருணா அம்மான். அவ்வாறாக தமிழீழத் தேசியத் தலைவரால் வளர்த்தெடுக்கப்பட்டுவந்தார்.
தற்பொழுது இருக்கக்கூடிய கே.பியும், கருணாவும் இந்த அரசிற்கும் தேவைப்பட்டவர்களே. விடுதலைப்புலிகளை இறுதியாக காட்டிக்கொடுத்ததன் ஊடாக இன்று தமிழ்த்தேசியம், சுயநிர்ணய...