நைஜீரியாவில் ஜனாதிபதியை குறிவைத்து பெண் ஒருவர் தற்கொலைப்படை தாக்குதல் நடத்தியுள்ளது பதற்றத்தை அதிகரித்துள்ளது.நைஜீரியாவில் வருகிற 14ம் திகதி ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் மக்கள் ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய ஜனாதிபதி குட்லக் ஜோனதனும், அனைத்து முற்போக்கு காங்கிரஸ்(ஏ.பி.சி) சார்பில் முன்னாள் சர்வாதிகாரி முகம்மது புகாரியும் போட்டியிடுகிறார்கள். இந்த தேர்தலை சீர்குலைக்கும் நடவடிக்கையில் போகோ ஹராம் தீவிரவாதிகள் தொடர்ந்து நாசவேலைகளில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் வடகிழக்கு நைஜீரியாவில் உள்ள காம்பே...
பிரிட்டனை சேர்ந்த பெண் ஒருவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார்.பிரிட்டனை சேர்ந்த பெண் டெஸ் கிறிஸ்டியன்(வயது 50). இவர் கடந்த 40 ஆண்டுகளாக சிரிப்பதே இல்லையாம், சிரிப்பதால் முகத்தில் சுருக்கம் வரும் என்பதால் சிரிக்காமல் வாழ்ந்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறுகையில், பத்து வயதிலேயே நான் இந்த உண்மையைக் கண்டுகொண்டேன். நான் படித்த பள்ளியில் முகத்துக்கு க்ரீம்களைப் பயன்படுத்த அனுமதி இல்லை. அழகைப் பாதுகாக்க என்ன செய்யலாம் என்று யோசித்தேன்....
ஈராக்கில் தனது மகனை சுட்டுக் கொன்ற ஐ.எஸ் தீவிரவாதிகளை தந்தை ஒருவர் சுட்டுக் கொன்று தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார்.ஈராக் நாட்டை சேர்ந்த 60 வயதுடைய Basil Ramadan என்பவரின் மகன் Ahmed Basil(வயது 18). இவரும் மற்ற 7 நபர்களும் சேர்ந்து ஒரு தனி பொலிஸ் உளவு குழுவை உருவாக்கினர். இவர்கள் 8 பேரும் சன்னி இஸ்லாமிய மதத்திற்கு மாறி ஐ.எஸ்.ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்துடன் இணைந்தனர். தீவிரவாதிகளின் நடவடிக்கைகள் மற்றும்...
  கடத்தப்பட்டோர், காணாமற்போனோரை கண்டு பிடித்துத் தரக்கோரியும் சிறையில் வாடும் அரசியல் கைதிகளிடம் முறையான விசாரணை நடத்தி விடுதலை செய்ய வலியுறுத்தியும் திருகோணமலை உட்துறைமுக வீதி கலாசார மண்டபத்திற்கு முன்னால் உள்ள சிறுவர் பூங்காவில் இன்று செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டம் நடத்தப்பட்டது. இந்தப் போராட்டத்தை 'நாங்கள்' அமைப்பு மற்றும் கடத்தப்பட்டோர், காணாமல் போனோர் உறவுகளின் அமைப்பு, திருகோணமலை மாவட்ட பெண்கள் சமாஜம், அமரா குடும்பத்தலைமை தாங்கும் பெண்கள் ஒன்றியம் ஆகியன...
மைத்திரியின தேர்தல் துண்டுப்பிரசுரத்தில் காணமல்போன ஜெரோமி வவுனியாவில் நடைபெற்ற காணாமல் போனோருக்கான கவனஈர்ப்பு போராட்டத்தில் கதறும் தாய்   வவுனியாவில் 'நாங்கள்' இயக்கம் மற்றும் பிரஜைகள் குழு என்பவற்றின் ஏற்பாட்டில் காணாமல் போனோரின் உறவுகள் ஆர்பாட்டம் இடம்பெற்றுள்ளது. வவுனியா, நகரசபை மைதானத்தில் இன்று காலை 11 மணியளவில் இடம்பெற்ற இவ் ஆர்ப்பாட்டம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது, நாளைய தினம் 67 ஆவது சுதந்திர...
  கி.மு.543-ஆம் ஆண்டு இந்தியாவின் மகத நாட்டு மன்னன் காட்டு குணம் கொண்ட தன் மகன் விஜயனையும் அவனது கஜபுல தோழர்கள் எழுநூறு பேரையும் நாட்டை விட்டு விரட்டியடிக்கிறான். செல்லுமிடம் தீர்க்கமாகத் தெரியாமல் மரக்கலமேறும் விஜயனும் அவனது அடங்காப் பிடாரிகளும் இலங்கையின் இன்றைய புத்தளத்தை அடுத்த தம்பப்பண்ணை துறையில் கரை சேர்ந்ததாக மகாவம்சம் பதிவு செய்கிறது.   அகதிகளாய் வந்திறங்கிய விஜயன் தமிழரெனக் கருதப்படும் அந்நிலத்து முற்குலமாம் நாகர் இன இளவரசி குவேனியைக்...
  இலங்கை நாட்டின் அனைத்துக்குடியின மக்களுக்கும், இம்மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அனைத்து சிவில் சமுக, மனித உரிமைகள், அரசியல் செயல்பாட்டாளர்களுக்கும்… 'அரசியல் கைதிகளுக்கு விடுதலை! காணாமல் போகச்செய்யப்பட்டவர்களுக்கு பொறுப்புக்கூறல்!' அரசை வலியுறுத்தி, வவுனியாவில் கவனயீர்ப்பு நிகழ்ச்சி! பேரன்புடையீர்: சிறீலங்கா நாடு 67வது சுதந்திர நாளைக்கொண்டாடத்தயாராகி விட்டது. தன்னை ஒரு ஜனநாயக நாடாகவும், மனித உரிமைகளுக்கு மதிப்பளிக்கும், அவற்றைப்பேணிப்பாதுகாக்கும் கனவான்களின் நாடாகவும், காட்டிக்கொள்ள வழமை போலவே இந்த வருடமும் முயற்சிக்கிறது. ஆயினும் முன்னைய வருடங்களைப்போல அல்லாது, இம்முறை இவ்விடையத்தில் கூடிய...
  இலங்கை - இந்திய ஒப்பந்தம் என்பது தமிழர்களின் அரசியல் வரலாற்றில் மறக்கப்பட முடியாத ஒன்றாகும். இவ்வொப்பந்தத்துக்கு பின்னரே அதிகாரப் பரவலின் அலகு மாகாணமாகி மாகாண சபை முறை  உருவாக்கப்பட்டு பின்னர் வடக்கும்  கிழக்கும் தற்காலிகமாக இணைக்கப்பட்டு ஓரலகு ஆகின. தமிழ் மக்களின் பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்று உண்மையாகவே எண்ணுபவர்கள், கொடிய யுத்தம் தொடரக் கூடாது என்று எண்ணுபவர்கள் தனிப்பட்ட பழி வாங்கும் எண்ணங்களை ஒரு புறம் தள்ளி விட்டு...
சுதந்திர தின அணிவகுப்பிற்கு பொலிஸ் உட்பட முப்படைகளைச் சேர்ந்த 5,000 பாதுகாப்பு பிரிவினரை  ஈடுபடுத்தவுள்ளதாக பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. இராணுவம், விமானப்படை, கடற்படை மற்றும் பொலிஸார் என சுமார் ஐயாயிரம் பேர் சுதந்திர தின அணிவகுப்பில் பங்கேற்க உள்ளதாக அமைச்சின் ஊடக மத்திய நிலையத்தின் பதில் பணிப்பாளர் பிரிகேடியர் ஜயனாத் ஜயவீர தெரிவித்தார். பத்தரமுல்லை பாராளுமன்ற கட்டட தொகுதிக்கு முன்னால் நடைபெறவுள்ள சுதந்திர தின நிகழ்வுக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக...
  பதுளையில் பஸ்ஸொன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளானதில் நபரொருவர் பலியாகியுள்ளதுடன் 20 பேர் காயமடைந்துள்ளனர். கந்தேகெதர வீதியில் பயணித்த பஸ், முச்சக்கரவண்டிக்கு வழி கொடுக்க முனைந்த போது சீனகெலை சந்தியில் குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 17 பேர் கந்தேகதர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன் ஏனைய மூவர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பஸ் வண்டியின் சாரதி பதுளை பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.