ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தெற்கு மற்றும் மத்திய ஆசிய விவகாரங்களுக்கு பொறுப்பான அமெரிக்க உதவி இராஜாங்க செயலாளர் நிஷா பிஸ்வால் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது. மூன்று நாட்கள் உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டு இலங்கைக்கு வருகை தந்துள்ள நிஷா பிஸ்வால், வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ஆகியோரையும் சந்தித்து கலந்துரையாடியமை குறிப்பிடத்தக்கது.  
   குற்றத் தடுப்புப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட முன்னாள் ஐ.தே.க.வின் முன்னாள் பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க இன்று கோட்டை நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்று உத்தரவிட்டுள்ளது // Post by Newsfirst.lk.  
  இலங்கையில் தூதரகம் அல்லாத வெளிநாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டு, வடக்கு மாகாண ஆளுநர் பளிஹக்காரவைச் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். யாழ். பொதுநூலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பில் வெளிநாடுகளைச் சேர்ந்த 40 பேர் கலந்து கொண்டனர். வடக்கு ஆளுநராக பளிஹக்கார இன்று காலை 9 மணிக்கு பதவியேற்றுக் கொண்ட பின்னர் மேற்கொண்ட முதல் சந்திப்பு இதுவாகும்.
  வீடமைப்பு அமைச்சர் சஜித் பிரேமதாச தமக்கு வழங்கப்பட்ட உத்தியோகபூர்வ இல்லத்தை மீள ஒப்படைத்துள்ளார். இந்த இல்லத்தை தாம் பயன்படுத்தப் போவதில்லை என பிரேமதாச அறிவித்துள்ளார். அமைச்சின் செயலாளர் விமலசிறி டி சில்வா இன்று காலை இல்லத்தின் சாவிகளை அமைச்சரிடம் உத்தியோகபூர்வமாக ஒப்படைத்தார். சாவியை பெற்றுக்கொண்ட அமைச்சர் அந்த தருணத்திலேயே, பொதுநிர்வாக அமைச்சு அதிகாரிகளிடம் இல்லத்தின் சாவியை ஒப்படைத்துள்ளார். இல்லத்தை பராமரிப்பதற்காக ஒப்படைக்கப்பட்ட இருபது லட்ச ரூபாவினையும் அமைச்சர் ஒப்படைத்துள்ளார். ஒப்படைக்கப்பட்ட இல்லத்தை முன்னாள் அமைச்சர் விமல்...
  2005 ஆம் ஆண்டு முதல் 2010 ஆம் ஆண்டு வரையான காலப்பகுதியில் கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நடந்த ஆட்கடத்தல் மற்றும் காணாமல் போக செய்யும் குற்றச் செயல்களுடன் தொடர்புடைய கடற்படை அதிகாரியை முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச அமெரிக்காவுக்கு அனுப்பி வைத்துள்ளதாக தெரியவருகிறது. கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதியில் இடம்பெற்ற இந்த குற்றச் செயல்கள் குறித்து விசாரணை நடத்திய புலனாய்வுப் பிரிவு பொலிஸார், கோட்டை...
  சற்று நேரத்திற்கு முன்னர் விமான சேவைகள் இராஜாங்க அமைச்சர் பைசர் முஸ்தபா தனது பதவியை இராஜினாமா செய்வதற்கான கடிதத்தை சமர்ப்பித்துவிட்டு வெளிநாடு சென்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. விமான சேவைகள் அமைச்சின் கீழ் வரவேண்டிய சில விடயங்களை அமைச்சர் அர்ஜுன ரணதுங்கவின் தலைமையில் இயங்கும் துறைமுக மற்றும் கப்பல் துறை அமைச்சின் கீழ் இணைத்து வர்த்தமானியில் உள்ளடக்கியுள்ளமையே இதற்கு காரணம் என தகவல் வெளியாகியுள்ளது. அதே வேளை அமைச்சருக்கான வர்த்தமானியில் மத்தல விமானநிலையம் மாத்திரம்...
  முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச பதவியில் இருந்த போது ஜனாதிபதி மாத்திரம் பயணம் மேற்கொள்ளும் உத்தியோகபூர்வ விமானம் ஒன்று இறக்குமதி செய்யப்படவிருந்தமை அம்பலத்திற்கு வந்துள்ளது. எனினும் அந்த விமானம் இறக்குமதி செய்யப்படுவதை நிறுத்துவது என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார். 208 கோடி ரூபா பெறுமதியான இந்த விமானம் ஜனாதிபதியின் பயணத்திற்காக இறக்குமதி செய்யப்படவிருந்தது. ஜனாதிபதியின் பயணங்களுக்காக விமானப்படைக்கு சொந்தமான விமானம் இருக்கும் நிலையில், பிரத்தியேகமாக இந்த விமானம் கொள்வனவு செய்யப்படவிருந்தது. முன்னைய அரசாங்கத்தில்...
  புலம்பெயர் தமிழ் அமைப்புக்களுக்கு கடந்த அரசாங்கத்தால் விதிக்கப்பட்டிருந்த தடை தொடர்ந்தும் நீடிக்கப்படுமென பிரதி வெளிவிவகார அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவித்துள்ளார். விடுதலைப்புலிகளை மீள உருவாக்கும் முயற்சியில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டப்பட்டு, புலம் பெயர் அமைப்புக்களுக்கு மகிந்த அரசாங்கம் தடை விதித்திருந்தது.   அந்த தடையை தொடர்ந்தும் நீடிப்பதே புதிய அரசாங்கத்தின் நோக்கம் என்று வாரப் பத்திரிகை ஒன்றுக்கு கருத்துத் தெரிவித்தபோது பிரதி வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். நாட்டில் பயங்கரவாத அச்சுறுத்தல் மீண்டும்...
  ஜனாதிபதித் தேர்தலின் பின்னர் அமெரிக்காவுக்கு புறப்பட்டுச் சென்ற பசில் ராஜபக்ச இலங்கை திரும்பவுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்தன. அத்துடன் அவர் பொதுத் தேர்தலில் போட்டியிட உள்ளதாகவும் எந்த கட்சியில் போட்டியிடுவது என்பது குறித்து அவர் இன்னும் தீர்மானிக்கவில்லை எனவும் கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் போட்டியிட சந்தர்ப்பம் வழங்கப்படாது போனால், ஐக்கிய தேசியக் கட்சியில் இணைந்து போட்டியிட போவதாகவும் முன்னர் தான் ஐக்கிய தேசியக் கட்சியில் இருந்த போது மேற்கொண்ட விடயங்களை...
  வட மாகாண முதலமைச்சர் சி. வி. விக்னேஸ்வரனின் கொழும்பு இல்லத்தில் பிரேமானந்தா சுவாமிக்கு பூசை வழிபாடுகள் நடத்தப்பட்டு ஆராத்தி எடுக்கப்பட்டபோது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இவை. நீதி துறையால் படுகொலை, பாலியல் வல்லுறவு ஆகிய கொடூரக் குற்றங்களைப் புரிந்தவர் என ஒன்றுக்கு இரண்டு தடவைகள் குற்றவாளியாக நிரூபிக்கப்பட்ட ஒரு காமுகனை முன்னாள் நீதியரசரான விக்னேஸ்வரன் கடவுளாகவும், குருவாகவும் போற்றி தலையில் வைத்து கூத்தடிப்பதை பொறுக்க முடியாத ஒரு வாசகர் இப்புகைப்படங்களை தாய்நாடு...