கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
Thinappuyal News -0
கிழக்கு மாகாணத்தின் புதிய ஆளுநர் ஒஸ்டின் பெர்ணாண்டோ இன்று சுபநேரத்தில் தமது கடமைகளை பொறுப்பேற்றுக்கொண்டார்.
சமயத்தலைவர்களின் ஆசீர்வாதத்தை தொடர்ந்து ஆளுநர் செயலகத்தில் தமது பணிகளை ஆரம்பித்தார்.
இலங்கை நிர்வாக சேவை மூத்த அதிகாரயான இவர் 50 வருடங்களுக்கு மேல் மக்கள் சேவையோடு அனுபவமுள்ளவராக காணப்படுகின்றார்.
1963 ம் ஆண்டு ஆசிரியர் சேவையில் இணைந்த ஆளுநர், 1967ம் ஆண்டு இலங்கை சிவில் சேவைக்கு தெரிவு செய்யப்பபட்டதுடன் மட்டக்களப்பு மாத்தளை ஆகிய மாவட்டங்களில் உதவி தேர்தல் ஆணையாளராகவும்...
வவுனியா தமிழ் மத்திய மகா வித்தியாலயத்திற்கு முன்பாக இடம்பெற்ற விபத்தில் இரு பாடசாலை மாணவர்கள் படுகாயம்.
Thinappuyal -
இன்று (30.01.2015) மதியம் 1.00 மணியளவில் கண்டி வீதி ஊடாக கொழும்பிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்துக் கொண்டிருந்த தனியார் பேருந்துடன், மோட்டார் சைக்கிளில் பயணித்த இரு வவுனியா தமிழ் மத்திய மகாவித்தியாலய மாணவர்கள் மோதுண்டதில், கிருசாந்தன் (18), சுலக்சன் (18) என்னும் இருவர் படுகாயமடைந்தநிலையில் வவுனியா பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இச்சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வவுனியா பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர். எனினும் இச்சம்பவத்தில் சிகிச்சைகள் பலனின்றி சுலக்சன் என்ற உயர்தர...
பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்? தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்
Thinappuyal News -
பிரபாகரன் இறுதியாக பாவித்த கமரா துப்பாக்கி இதை பாதுகாப்பு தரப்பு கைப்பற்றாதது ஏன்?
தொடர்கிறது பிரபாகரன் இறப்பில் சந்தேகம்
ஒட்டுமொத்தமாக சிறுபான்மையினம் கடந்த கால ஆட்சியிலே நசுக்கப்பட்டது. இதன் காரணமாகவே சிறுபான்மையினம் ஒன்றுபட்டு இந்த ஆட்சிமாற்றத்தினை ஏற்படுத்தியது-பொன் செல்வராசா
Thinappuyal News -
புதிய ஜனாதிபதி அவர்கள் சிறுபான்மையினம் நசுக்கப்படகூடாது என்பதற்காக சில நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றார். அதனை நாங்கள் பாராட்ட வேண்டியவர்களாக இருக்கின்றோம்.
இருந்த போதிலும் இந்த நாட்டில் புரையோடிப்போயுள்ள இனப்பிரச்சினைக்கான தீர்வு கிடைக்குமா என்பது தொடர்பில் நாங்கள் ஆராய வேண்டியிருக்கின்றது என மட்டக்களப்பு மாவட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் பொன்.செல்வராசா தெரிவித்தார்.
கொக்கட்டிச்சோலை படுகொலையின் 28வது ஆண்டு நினைவுதினம் நேற்று புதன்கிழமை கொக்கட்டிச்சோலை கலாசார மண்டபத்தில் நடைபெற்றபோது அதில் கலந்துகொண்டு...
யாழ்.மாவட்டத்திற்கான விஜயத்தினை மேற்கொண்டுள்ள பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் இன்றைய தினம் மாலை 2.30 மணியளவில் வலி.வடக்கு மக்கள் தங்கியிருக்கும் சுன்னாகம் சபாபதிப்பிள்ளை முகாமிற்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
குறித்த விஜயத்தின்போது பாடசாலை மாணவர்களுக்கான காலணிகளை வழங்கி வைத்த அவர் பாடசாலை மாணவர்களுடன் பேசியதுடன் அவர்களுக்கு கையொப்பங்களையும் வைத்துக் கொடுத்திருந்தார்.
பின்னர் வலி,வடக்கு மீள்குடியேற்றக் குழுவுடனும் சந்தித்துப் பேசியிருந்தார்.
இதன்போது வலி,வடக்கின் மீள்குடியேற்ற நிலைமைகள் குறித்து அந்தக் குழுவினர் அமைச்சருக்கு தெளிவான...
இடைக்கால வரவு செலவுத் திட்டம்! 13 அத்தியாவசியப் பொருட்கள் விலை குறைப்பு- 10,000 ரூபாய் சம்பள உயர்வு
Thinappuyal News -
அரச ஊழியர்களுக்கான சம்பளம் 10 ஆயிரம் ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க தெரிவித்தார்.
அரச ஊழியர்கள் தற்போது பெற்று வரும் சம்பளம் அவர்களது வாழ்க்கைத் தர முன்னேற்றத்திற்கு போதுமானதாக இல்லை என்பதால் அரச ஊழியர்களின் சம்பளம் 10,000 ரூபாவால் அதிகரிக்கப்படும் என நிதி அமைச்சர் ரவி கருணாநாயக்க அறிவித்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இடைக்கால வரவு செலவுத் திட்டத்தை உரையாற்றும் போதே அவர் இதனைக் தெரிவித்துள்ளார்.
அரச ஊழியர்களுக்கு பெப்ரவரி மாதம் 5000...
புதிய அரசாங்கத்தின் மீது மக்களுக்கு முழு நம்பிக்கையில்லை: பிரிட்டிஷ் குழுவிடம் விக்னேஸ்வரன்
Thinappuyal News -
பிரிட்டன் வெளிவிவகார அமைச்சர் ஹுகோஸ் ஸ்வய்ர் தலைமையிலான குழுவினர் இன்றைய தினம் யாழ்.குடாநாட்டுக்கு விஜயம் மேற்கொண்டனர்.
இவ்விஜயத்தின்போது வடமாகாண முதலமைச்சரை அவரது அலுவலகத்தில் சந்தித்துப் பேசியிருப்பதுடன், யாழ்.பொது நூலகத்திற்கும் விஜயம் மேற்கொண்டுள்ளார்.
குறித்த சந்திப்பு இன்றைய தினம் காலை 9.30 மணிக்கு இடம்பெற்றிருந்தது.
இதன் பின்னர் குறித்த சந்திப்பு தொடர்பில் முதலமைச்சர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
மீள்குடியேற்றம் தொடர்பில் புதிய அரசாங்கத்தின் மீது மக்கள் முழுமையான நம்பிக்கை கொள்ள முடியாத நிலையில் உள்ளனர்.
குறிப்பாக ஆளுநர்...
நாங்கள் மைத்திரி அரசையும் நம்பி நடக்கவில்லை தென் இலங்கையில் ஏற்பட்ட இந்த கிளர்ச்சி சர்வதேச ரீதியில் செல்வாக்கு செலுத்தியது- மாவை சேனாதிராஜா
Thinappuyal News -
நாங்கள் இந்த புதிய அரசையும் நம்பி நடக்கவில்லை என தமிழரசுக்கட்சியின் தலைவரும் யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
தமிழரசுக்கட்சியின் வவுனியா மாவட்ட அலுவலகமாக தாயத்தினை இன்று (24.1) காலை திறந்து வைத்து உiராயற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் அங்கு கருத்து தெரிவிக்கையில்,
இந்த தேசத்தில் குறிப்பாக தமிழர், முஸ்லிம்கள், மலையக மக்கள் வாழுகின்ற இடங்களில் ஒரு புதிய நம்பிக்கை உருவாகியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக...
பயங்கரவாதத் தடைச் சட்டம் மக்களின் அடிப்படை உரிமைகளுக்கு முரணானது -பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டும் – மன்னார் ஆயர
Thinappuyal News -
பயங்கரவாத தடைச் சட்டம் ரத்து செய்யப்பட வேண்டுமென மன்னார் ஆயர் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். கூடிய விரைவில் பயங்கரவாத தடைச் சட்டத்தை ரத்து செய்யுமாறு மன்னார் ஆயார் இராயப்பு ஜோசப் ஆண்டகை புதிய அரசாங்கத்திடம் கோரியுள்ளார்.
அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்வதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார். பயங்கரவாதத் தடைச் சட்டத்தை ரத்து செய்து, அரசியல் கைதிகளை விடுதலை செய்வதன்...
1976 மே 14 ஆந் தேதியன்று வட்டுக்கோட்டையில் நடைபெற்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாட்டில் ஏகமனதாகக் கைக்கொள்ளப்பட்ட தீர்மானம். தவிசாளர் எஸ். ஐே. வி. செல்வநாயகம், கியுசி, பா.உ (காங்கேசன்துறை) 1976 மே 14ஆந் தேதியன்று (வட்டுக்கோட்டைத் தொகுதியிலுள்ள) பண்ணாகத்தில் கூடுகின்ற தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணியின் முதலாவது தேசிய மாநாடு, இலங்கைத் தமிழர்கள் தங்களின் தொன்மைவாய்ந்த மொழியினாலும் மதங்களினாலும் வேறான கலாசாரம், பாரம்பரியம்...